/* */

மாநிலங்களவை தேர்தல்: ஒருவழியாக வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக முன்னாள அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஆர். தர்மர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

மாநிலங்களவை தேர்தல்: ஒருவழியாக வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக
X

நாடாளுமன்ற மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு, கால் இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் இருந்து ஆறு இடங்களுக்கு தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக கூட்டணிக்கு 4 இடங்கள், அதிமுகவுக்கு 2 இடங்கள் என்ற நிலையில், திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

எனினும், அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை இறுதி செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இரண்டு இடங்களுக்கு மூத்த தலைவர்கள் நீயா நானா என்று களமிறங்கினர். கடும் போட்டி நிலவியதால் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல், அதிமுக தலைமை தடுமாறியது.

இச்சூழலில், ஒருவழியாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோரை வேட்பாளர்களாக ஓபிஎஸ் -இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Updated On: 26 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்