/* */

True love kavithai tamil- இருவிழிக் கவிதையில் எழுவது காதல்..! கவிதை படிப்போம் வாங்க..!

காதல் கடவுளிடமும் உண்டு. அன்பிருக்கும் இடமெல்லாம் காதலுக்கும் பஞ்சமில்லை. அதனால் காதலியுங்கள்.

HIGHLIGHTS

True love kavithai tamil- இருவிழிக் கவிதையில் எழுவது காதல்..! கவிதை படிப்போம் வாங்க..!
X

True love kavithai tamil-காதல் கவிதைகள் (கோப்பு படம்)

True love kavithai tamil

காதல் கலாசாரத்தின் தீமையாக பார்த்த காலங்களும் உண்டு. ஒருவரின் மனதில் காதல் தோன்றுவதற்கு என்ன காரணங்கள் என்று சொல்லமுடியாது தவிக்கும் நிலையே, காதல். காதல் இல்லாத வாழ்க்கை வெற்று வாழ்க்கை. சுவையில்லாத இனிப்பு போன்றது. காதல் வாழும் உள்ளத்தில் இனிமை இருக்கும். அன்பு வாழும். அசாத்திய திறமைகளும் இருக்கும்.

உலக இயக்கமே காதலின் அடிப்படையிலேயே இயக்கம் பெறுகிறது. காதல் இல்லையேல் இவ்வுலகத்து இல்லை. காதல் உள்ளம் இருப்பதாலேயே அடுத்த தலைமுறைகள் பிரசவிக்கப்படுகின்றன. காதல் என்பது காமத்தின் அடிப்படை. இருவரும் ஒட்டிப்பிறந்த சகோதரிகள். ஆமாம்,வெறும் காதல் மட்டுமே இருந்தால் அது காதல் அல்ல. அது ஒருவகையான பற்றுதல். காதலும் காமமும் இணைவதே தம்பதி அல்லது காதலர் என்பதற்கான அடையாளம். ஆனால், அதை முறையாக திருமணம் முடித்து அதற்கான வயதை அடைந்ததும் காமத்தைத் தீண்டவேண்டும்.


அதுவே உண்மைக்காதலாக மலரும். இதோ உங்களுக்காக உண்மைக் காதலின் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. சுவைத்து வாசியுங்கள்.

True love kavithai tamil

காதல் அழிவதில்லை

காதலும்,கவிதையும்

வேதியியல்

சூத்திரங்கள்..

வினைபுரியும்

இயல்பு

கொண்டவை..!

உடலியல்

மாற்றங்களை

நிகழ்த்தும்

ஆச்சர்ய சுரப்பி..!

காதல்,

வெற்றிபெற்றால்

மகிழும்..

தோல்வியடைந்தால்

அழும்..!

வெற்றியின்

கவிதைகளைக்காட்டிலும்

தோல்வியின்

கவிதைகள்

வலிமை பெறுகின்றன..!

தோல்வியின்

உணர்வு வீச்சுகள்

கொந்தளிப்பதால்

அமில வினைகள்

செறிவடைகின்றன..

காதல்

முறிவுபெறுகிறது..!

ஓங்கார குரலெடுத்து

ஓங்கியெழும்

சத்தம் முழுதும்

அமைதிக்குள்

அடக்கம்

பெற்றுவிடுகிறது..!

அழுதால்

தீரும்

சோகம்

உள்ளுக்குள்

அழுத்தப்பட்டுவிடுகிறது..

அழுத்தம்கொண்ட

பொருட்களுக்குத்தானே

வீச்சும்

அதிகரிக்கிறது..!!

True love kavithai tamil

ஆண் அழுதால்

அசிங்கம்

என்ற

பொதுப்புத்தி

வரையறைகளாய்

மூளைக்குள்

பதிந்துகிடப்பதால்

உணர்வுகள்கூட

விடைபெற்றுவிடுகின்றன..!

காதலின்

உணர்வுகள் எல்லையற்ற

வானம்போல

விரிந்து கிடக்கிறது..

வெற்றுவெளி

முழுதும்

காதலின்

கிறுக்கல்கள்…

அழிக்கமுடியா

கற்சித்திரங்களாக..

காலங்கள்

கடந்துபோகலாம்..

காதல் அழிவதில்லை..!

..................................................................


True love kavithai tamil

இரண்டாம் இளமை..!


காலங்களை

கட்டிப்போட்டுவிட்டு..

கவிதைகள்

எழுதுகிறேன்..

தொலைந்து போன

இளமையைத்தேடி..

எது எனக்கான

வாழ்க்கை

என்பதைக் கண்டறியவே

ஈரைந்து ஆண்டுகளை

தொலைத்துவிட்டேன்..

எனக்கானதை

தேர்வுசெய்த போதும்

வளமளிக்கும்

வாழ்க்கையில்லை..

வளமற்ற

வாழ்க்கையிலும்

ஐயிரண்டாண்டுகள்..

ஓடிக் கழிந்தன..

உலகம்

என்ன எனக்காக

சுற்றுவதை

நிறுத்திவிடவா போகிறது..?

கடமையை

செவ்வனே செய்வதில்

சுற்றும் பூமியே

மனிதனுக்கு உதாரணம்..

நாமும்

நம் கடமையாற்ற

அதுவே

ஒப்பற்ற எடுத்துக்காட்டு..

True love kavithai tamil

திரும்பியே பார்க்காத

நான்

வாழ்க்கையை

திரும்பிப் பார்த்தபோது

என்

இளமையை காலம்

களவாடிக்கொண்டிருந்தது..

'பகீர்' என

ஓரதிர்ச்சி என்னை

உரசிச்சென்றது..

பின்

மண்டையில்

மயிரற்ற பிரதேசம்

ஒன்று

உருவாகி இருந்தது..

ஐயகோ..

இளமை தொலைந்த

வலி

எனக்குள்

என்னவோ செய்தது..

இருபதாண்டு

காலம்

விழலுக்கிரைத்த

நீராகிப்போனது..

என்

இளமையும்

நீராவி போல

மாயமாகிப்போனது..!

எங்ஙனம்

எட்டிப்பிடிப்பேன்

என்

ஏற்றமதை..?

தளரும் தருணங்களில்

நம்பிக்கையின்

மூன்றாம் கால்,

என் மனைவி..

True love kavithai tamil

எங்கேயும்

தொலைக்கவில்லை

இளமையை

அது

நம்பிக்கையாக

சீறிப்பாய வேண்டும்

துள்ளலாக..

மீண்டும் ஒரு

வாழ்க்கையுண்டு

வாழ்ந்து பார்ப்போம்

வாருங்கள்

என்றெனை

வாரி அணைத்துக்கொண்டாள்..

இனிதே

கடக்கின்றோம்..

இரண்டாம் இளமையோடு..

அதுவே

"எம் நம்பிக்கை"

காலங்களை

கட்டிப்போட்டுவிட்டு

கவிதைகள்

எழுதுகின்றேன்..!

..............................................................


True love kavithai tamil

உண்மைக் காதல்

என்

இதய சாளரத்தின்

வழியாக

என்னைத் தீண்டிய

தென்றல் நீயடி..!

நான்

நானாக இல்லாமல்

போனதன்

சூத்திரதாரியும் நீயடி..!

காற்றில்

அலையும் காற்றாடி போல

வெற்றுப்பார்வையை

காற்றில்

அலைய விடுகிறேன்

எங்காவது

உன் உருவம்

அகப்பட்டுவிடாதா

என்று..

ஆண்மையை பெண்மையாய்

ஆக்கியவள் நீயடி..!

இதயத்து மலரில்

வலிகளின்

நூலெடுத்து

காதலின் மாலை

கோர்க்கிறேன்..

என் விழிகளில்

சேரும்

கண்ணீர் துளிகளில்

வியர்வையை

சேர்க்கிறேன்..!

முத்துக்குவியலில்

முத்தமாக

நீ..

சத்தமாக

கூச்சல் போட

முத்தங்கள்

நாணுகின்றன,

உன்

இதழ்கள் தீண்டியதால்..!

True love kavithai tamil

வளர்பிறை நாட்களில்

துளிர்விடும் பூக்களாய்

தினமொரு கனவுகள்

ஒளிருது பகலிலும்

அனுதினம் ஆகமதில்

விரியுது பாக்களாய்..!

காண்பது எல்லாம்

கனவாய் போகுமோ

என்றொரு

அச்சம் எனக்குள்

முள்ளாய் தைப்பது

உனக்குள் வலிக்கவில்லையா..?

என் உண்மைக்காதல்

உனக்குள் விழிக்கவில்லையா..?

காதலின் காயங்கள்

வடுக்களாய் இருப்பதில்

வலியினை காணேனடி..

'எனை வேண்டாம்' என்ற

உன்

ஒற்றைச் சொல்

எனை மரணிக்கச் செய்தது

போடி..!

True love kavithai tamil

நான் சிந்திய

என்

கண்களின் கண்ணீர்

உன்

மரணத்துக்குப் பின்னாவது

கல்லறைப் பூக்களாய்

மலரட்டும்..

என் காதல்

உண்மையானது..!

-கவிஞர் க.சு.பூங்குன்றன்

Updated On: 25 Aug 2023 8:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி