திருமணத்துக்குப் பின்னான மனைவியின் காதலன், அவனே கணவன்..!

Kanavan Kavithai in Tamil
Kanavan Kavithai in Tamil
அன்பு என்பது அளவற்று இதயத்தில் குவிந்து கிடக்கும் களஞ்சியம். அது இரு மனங்களுக்கு இடையே நடக்கும் உள்ளார்ந்த ரகசியப் போர். ஆனால், அங்கு ரத்தங்கள் சிந்துவதில்லை, யாரும் துன்புறுத்தப்படுவதில்லை. இன்பத்தின் ஊற்று அடைமழையாக பெய்யும். உள்ளுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் ரகசிய உணர்வுக்குழம்பு. இருவர் என்பது ஒருவர் என்றானதால்,யாருக்கும் அங்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. பரஸ்பர பரிமாறல்.
விட்டுக்கொடுத்தல் என்பது காதலின் முதல் வெற்றிக்கான அடிப்படை. விட்டுக்கொடுத்தலில் இருவரும் சளைத்தவர் அல்ல என்கிற நிலை வரும்போது, அதுவே ஆத்மார்த்த தம்பதிகளாக உருவெடுக்கின்றனர். ஒருவர் நினைப்பதை ஒருவர் செய்துமுடித்துவிடுவார். ஏனெனில் நீ, நான் என்கிற வேறுபாடும் எங்கு கிடையாது. சிவ-சக்தியாக அந்த தம்பதி.

இதோ எங்கள் வாசகர்களுக்காக கணவனின் மேற்கோள்கள். கணவன் என்பவன் பெண்மையைத் தாங்கும் சுமைதாங்கி. பெண்மையைக் கொண்டாடும் பேரழகன்.
நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை..! நாம் இருவரும் வாழும் விதத்தில்தான் உள்ளது..!
அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இருக்கலாம்..! ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன..! அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்..!
எதிர்பாராமல் பெய்யும் மழை போல என் வாழ்வில் வந்த வசந்தம் நீ.. உன் அன்பால் என் மனம் குளிரவைத்து, என் இருண்ட வாழ்க்கையில், வானவில்லை தூரிகையாக எடுத்து வண்ணங்கள் பூசினாய்..! நம் வாழ்க்கை மலர்ந்தது..! அது என் கணவன்..!
நிறை குறை என்பது வானத்து நிலவில் கூட உண்டு..! நிறை குறை காணாது ஒருவர்மீது வைக்கும் அன்பு மட்டுமே முழுமையானது..! அப்படித்தானட உன் மீதான எனது அன்பும்..!
காதல் என்ற வார்த்தை கேட்க இனியது..! செய்யக் கடியது..! பழக எளியது..! காதல் ஒரு பொக்கிஷம்..! ஆதலால் எல்லாமே தோற்றத்தில் சிறுத்துப்போனது..! திருமணத்திற்கு பின், சேர்ந்தே வாழ்நாள் முழுவதும் வாழ்வதே அளப்பரியது..! காதலின் சிறைக்கைதியாக நான் ஆயுள்தண்டனை பெற்று என் கணவனின் மனச்சிறையில் அடைபட்டுக் கிடக்கிறேன்..!

என் உயிரில் கலந்த உறவே, உனை என்றும் மறவேன் என் அன்பே..! உன்னுடன் இருந்தால், என் உலகம் இருக்கும் இனிதாக..! நிதமும் எனக்கு வீச வேண்டும், உன் வாசனை..! என்னருகில் நீ இருந்தால், நான் ஒரு சிற்பமே..! என்னை செதுக்கியவன் நீதான்..! நம்மை பிரிக்க ஆண்டவனும் நினையான்..! நம் அன்புக்கு முன்னால் உன்னை பிரியாத வரம் வேண்டும்..! இணைந்து வாழ்வோம் உயிர் பிரியும் தருணம் வரை..!
கம்பன் எழுதிய காவியங்களில் எழுதப்படாத காவியம், நம் காதல். கவிஞர்கள் பாடமுடியாத ஓவியம் நீ..! நீயே ஒரு கவிதை..! வேறு என்னடா எனக்கு வேண்டும்..! நான் விடும் மூச்சுக்காற்று நீயே..!
என்னோடு நீ இருந்தால்..இந்த உலகம் எனக்கு சிறியது, உன் அன்புக்கு முன்னால்..! உலகின் பரப்பளவு சில சதுர அடிகள்தான் அன்பே..!
மழை பொழியும் அந்த மகிழ்வான நேரம், ஒரு குடைக்குள் நாம் இருவரும் ஒன்றாக தொலைதூரம் நடந்து செல்வோம் சிறிதும் இடைவெளி இல்லாது..! இருவரும் காதல் பாதைகளில் அன்பின் சுமைகளை சுமந்து பயணிப்போம்..வாழ்க்கை முழுதும்..! ஒரு அழகிய காதல் பயணம் தொடரட்டும்..!
நீயும் நானும் வானும் நிலவும் போல சேர்ந்தே இருப்போம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்..! எனக்குத்தெரியும் வானுக்கும் நிலவுக்கும் நீண்ட இடைவெளி உண்டென்று..! அதனால் நீயும் நானுமாக வாழ்வோம் வா..!

அழகிய நிலவொளியில் நாம் இருவர் மட்டும் தனியாக..! இரு விழிகள் போதும், நாம் இருவரும் பேசிக்கொள்ள..! உன் தோளில் நான், என் இதயத்தில் நீ..! காதலுக்கு மொழிகள் இங்கு தேவையில்லை..!
உந்தன் கன்னத்தில் விழும் சிறு குழியில் நான் புதைந்து போனேன்..! அந்தக் கன்னங்களில் உனக்கு முத்தமிட ஆசை..உன் அனுமதியோடு..!
என் விழிகள் தினம் சந்திப்பது பலர் என்றாலும், உன்னை மட்டுமே மீண்டும் மீண்டும் சந்திக்கத் தேடுகிறது, என் மனம்..! அதுதான் காதலா..?! நீ இல்லாத கணங்கள் தோறும் வெறுமையாய் உணர்கிறேன்..!
அழகைக் காட்டி மயக்கும் இந்த மாய உலகில், நீ மட்டும் உன் அன்பைக் காட்டி என்னை மயக்கினாய்..! அந்த மாய மயக்கத்திலிருந்து கடவுளால் கூட என்னை பிரிக்கமுடியவில்லை..! ஏனென்றால், உன் அன்பு அந்த கடவுளையே சிறை பிடிக்கும்..!
கோபப்படுவது நீயாக இருக்கும் போது, உன்னிடம் தோற்பதுகூட எனக்கு சுகமே..நம் சண்டையில் நான் தோற்றுப்போக வேண்டும் என்றே வேண்டி நிற்பேன்..! உன் வெற்றித்திருமுகத்தைக் கண்டு ரசிப்பதற்காக..!
நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்...! புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன் ஆகிறேன்...! உன்னைப் படைப்பதில் பெருமைகொள்கிறேன்..! கவிதையால் உன்னை ஆள்கிறேன்..!
உன் முகம் பார்த்து விட்டால் போதும், பல யுகங்களைக் கூட சுகங்களாக கழிக்கத் தயங்கமாட்டேன்..!. வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து..!
எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன் கவிதைத் தொகுப்புகளை..! அத்தனை நூல்களிலும் கவிதைகளாய் நீ..முத்தமாய். மொத்தமாய்...!

அழகின் முகம் பார்த்து வந்த காதல் மறைந்து விடும். பணம் பார்த்து வந்த காதல் பரபரப்பாய் பறந்து போகும்..! உள்ளம் பார்த்து வந்த உன் காதல் உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்..!
யார் இந்த தேவதை...? நான் உறங்கும் போது என் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது யார்? கனவை தந்து விட்டு அவள் நினைவை என்னை சுமக்கச் சொல்கிறாள்..! ஆதலால் நான் பகலிலும் உறங்குகிறேன்..அவளின் கனவுதேடி.. !
வழி பார்த்து நடக்காமல், உன் விழி பார்த்து நடந்ததால். வழுக்கி விழுந்தேனடி..அது காதல் என்னும் பள்ளத்தில்...கை தூக்கி விடுவாயா நான் கரைசேர..!
அன்று நான் தனியாக இருந்தாலும் உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்..! இன்று கூட்டத்தோடு கூட்டமாக நான் நின்றாலும் உன் நினைவால் தனியாக நிற்பது போல உணர்கிறேன், நீ என்னருகில் இல்லாததால்..!
உன் பார்வையில் பற்றி எரியும் தீக்குச்சி நான்..! எரிந்து கொண்டே இருப்பேன்..! நீ திரும்பிவந்து அணைக்கும் வரை அல்ல... நீ விரும்பிவந்து என்னை அணைக்கும் வரை..!
உன் மீதான என் காதலை வார்த்தையில் சொல்வதை விட... வாழ்ந்து காட்டுவதே சிறப்பு..ஆதலால் வா வாழ்ந்து காட்டுவோம்..!

நீயோ அதிசயமானவள்..! நான் அந்த அதிசயத்தை கற்கும் அதிசய மாணவன்...உன் பள்ளியில் சேர்த்துக் கொள்ளடி..!
உன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நாட்கள் இப்படியே நீளாதா என்று ஒரு ஏக்கம் என் மனதில் நீண்டு செல்கிறது..!
அரை நொடி வாழ்ந்தாலும் போதுமடி..உன் அரவணைப்பில் நான் வாழ வேண்டும்...! அடுத்த நொடியே மரணம் வந்தாலும் உன் மார்பில் சாய்ந்து நான் சாவதை மனமுவந்து ஏற்பேனடி..!
உன் கரும்பு பேச்சில் தொலைந்து போனதடி என் இரும்பு இதயம்...! உனக்கு பிடிக்கிறதா.. பிடிக்கலையா..என்பது தெரியாமலேயே ரசிக்குதடி என் இதயம் உன்னை...!
நீ கடல் கடந்து போனாலும், கடல் தாண்டியும் வருவேனடி உன்னைக் கவர்ந்து செல்ல..!
உலகில் உள்ள அனைத்து பூக்களின் வாசங்களும் சற்று குறைவு தான். உன் கூந்தல் சூடி பின் வாடிப்போன அந்தப் பூக்களின் வாசத்தின் முன்..!

மானும் மீனும் வாழும் கண்ணில் என்னை வைத்தாய்...! என்னை வதைத்தாய்..! தேனும் பாலும் ஊறும் சொல்லில் அன்பை வைத்தாய்...! அம்பாய் தைத்தாய்..! ஊனும் உயிரும் எல்லாம் எந்தன் உறவில் வைத்தாய்...! ஈர் உயிரை ஓர் உயிராக்கி புது வாழ்வு தந்தாய்..!
எழுதிட முடியவில்லை..கவிதைகளாக..! எழுதி.. எழுதி.. எழுதுகோலும் ஏங்கிப் போனது. கவி வரிகளும் நீண்டு போனது. உன் அழகை கண்டு..! இது சிறுகதையல்ல..நம் காதலின் நெடுங்கதை..!
வாசலில் உன் கை பதித்த கோலத்தை விட, உன் கால் பதித்த கோலம் அழகு..! பின்னர் ஏன் கோலமிடுகிறாய்..? வாசலில் உன் கால் தடங்கள் போதுமானது..!
அன்பே.. உன்னை விட அழகி யாரும் இல்லை என்று, அந்த கிளியோபாட்ராவிடம் சொன்னால் கூட தவறில்லை..அவள் என் பார்வையில் இரண்டாம் இடத்துக்கு போய்விட்டாள்..!
உன் காந்தப் பார்வையால் எனை சுண்டி இழுக்கிறாய்...! சிலிர்த்தது என் நெஞ்சம். அடைந்தேன் உன்னிடம் தஞ்சம்..! பாரடி என் ஏக்கத்தின் நெஞ்சம்..! அன்புக்கா இனி இங்கு பஞ்சம்..? இவனைப் பாரடி கொஞ்சம்..!
வானில் நிலவைக் காணவில்லை என விண்மீன்கள் வலைவீசி தேடினவாம்..! நான் எப்படிச் சொல்வது..வானத்து நிலவு என்னுடன் இருப்பதை...!?
உன் விழி கொண்டு கவிதைகளை வீசி, காதல் மொழிகளைப் பேசி, நாம் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்பதை யோசி. இல்லையென்றால் நான் ஆகப் போகிறேன் சந்நியாசி. என் இதயம் திருடிய இந்த பிரபஞ்சத்தின் பேரழகி நீ...!

மழை வந்ததும் காகிதத்தில் கப்பல் மடித்து அனுப்பும் சிறுபிள்ளை போல, உன் நினைவு வந்ததும் கவிதை வடித்து அனுப்புகிறேன் உனக்கு..! காற்றோடு பயணித்து உன்னை வந்தடைய தென்றலைத் தூதுவிடுகிறேன்..!
கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன், ஓர் விந்தை..! அன்புக்கு மட்டுமே அடிமையானவன்..ஆதலால் அவனது அணைப்புக்காகவே நான் கோபப்படுகிறேன்..! அதனால் நான் வெட்கப்படுகிறேன்..! அவன் வந்து என்னை சமாதானம் செய்யவேண்டும் என்பதற்ககாகவே..!
கோபம் கொண்டு நான் ஓரமாக நிற்கும் போது, உன் செல்லக் கொஞ்சல் போதும் பெண்ணே, என் கோபமும் வெட்கமாகிப் போகிறது உன்முன்னே..! உந்தன் சிணுங்களில் என்னை சிறைபிடித்தாய் ..!
தனியறையில் தணலாய் தகிக்கும் என்காதல் தீயை, முத்தமழையில் குளிர்காயச் செய்கிறான், என்னவன்..!
ஊடலில் நம் காதல்..! மின் காந்த அலைகளாக என்னுள்ளம் தைத்த கள்ளக்காதலன்.. ச்சீ..அவனே என் கணவன்..!
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்..!
சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம். யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம். ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது..! இதுவே காதலின் இலக்கணம்..!
சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது காதல் அல்ல..! சோகங்களை பகிர்ந்து கொள்ளும் போது, துணையாய் நிற்பது தான் காதல்..! இன்பங்கள் பகிர்வதால் இரட்டிப்பாகின்றன..! துன்பங்கள் பகிரும்போது பாதியாக குறைந்துபோகின்றன..!
இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை மறக்காது..! காரணம் இதயத்திற்கு நடிக்கத் தெரியாது…துடிக்க மட்டுமே தெரியும்..! அதனால், துடிப்பதை நிறுத்திவிடாதீர்கள்..!
வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு ஆயிரம் உறவுகள் தேவை இல்லை...! நம்மை உண்மையாக நேசிக்கும் ஒரே ஒரு உறவு போதும்...!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu