Thamboolam tharithal in tamil-வெத்திலை போடுங்கய்யா..! புள்ளக்குட்டி பொறக்கும்..!

Thamboolam tharithal in tamil-வெத்திலை போடுங்கய்யா..! புள்ளக்குட்டி பொறக்கும்..!

Health benefits of betel nut-வெற்றிலை இடிக்கும் பாட்டி (கோப்பு படம்)

தாம்பூலம் 'தரிக்காத'தால்தான் செயற்கை கருத்'தரித்தல்' மையங்களை நோக்கி இன்று படை எடுத்து வருகிறோம் என்பது மறுப்பதற்கில்லை.

Thamboolam tharithal in tamil,health benefits of betel nut, benefits of betel leaves

தமிழர்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று தாம்பூலம் தரித்துக்கொள்ளுதல். அதாவது வெற்றிலை போட்டுக்கொள்ளுதல். ஆமாம், தாம்பூலம் தரித்தல் என்றால் வெற்றலை போடுதல் என்பது பொருள். என்னென்ன பொருள்களைக் கலந்து தாம்பூலம் தரிக்கவேண்டும் என்று வரையறைகளும் உள்ளன.

பச்சைக் கற்பூரம்,ஜாதிக்காய் ,வால் மிளகு,காராம்பு,கத்தக்காம்பு,சுண்ணாம்பு,பாக்கு ஆகிவற்றைச் சேர்த்து போடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது.


தாம்பூலம் தரிப்பதால் கிடைக்கும் பயன்

வாய்க்கு நறுமணம் ஏற்படுகிறது.முகத்திற்கு அழகையும் பொலிவையும் உண்டாக்குகிறது . தாடை,பல்,நாக்கு இவற்றின் அசுத்தங்களைப் போக்குகிறது.வாயில் மிகுதியாக உமிழ் நீர் சுரப்பதைத் தடுக்கின்றது.கலவியில் விருப்பத்தை ஏற்படுத்துகிறது. துவர்ப்பு ,கார்ப்பு,கசப்பு,உவர்ப்பு சுவைகள் ஒருங்கே இருப்பதால் உட்கொண்ட உணவு எளிதில் ஜீரணிக்கிறது. இதயத்திற்கு நலம் பயக்கின்றது.தொண்டை நோய்களைப் போக்குகின்றது.

Thamboolam tharithal in tamil

எப்ப வெற்றிலை போடணும்?

எப்பெல்லாம் வெற்றிலை போடணும் என்பதையும் நமது முன்னோர் வரையறுத்து கூறியுள்ளனர். தூங்கி எழுந்தவுடன், உணவு உண்ட பின், குளித்த பிறகு தாம்பூலம் தரித்துக்கொள்ளலாம். அதே போல காலை நேரத்தில் தாம்பூலம் போடும்போது பாக்கைச் சிறிது கூடுதலாகவும், மதியநேரத்தில் போடும்போது கத்தைக்காம்பைச் சிறிது கூடுதலாகவும்,இரவு நேரத்தில் சுண்ணாம்பு சிறிது கூடுதலாகவும் சேர்த்துப் போடவேண்டும்.

முதல் இரண்டு உமிழ்நீர் விழுங்கக்கூடாது

வெற்றிலைப் போட்டு முதலில் வருகின்ற உமிழ்நீரை விழுங்கக்கூடாது. அது நஞ்சுக்கு ஒப்பானது. இரண்டாவது வரக்கூடிய உமிழ்நீரும் நல்லதல்ல. மூன்றாவதாக வரக்கூடிய உமிழ்நீரையும் அதன் பிறகு வரும் உமிழ்நீரை விழுங்கலாமா. இது அமுதத்திற்கு ஒப்பானது என்று கூறப்படுகின்றது.

நன்றாக மென்று முடித்தவுடன் அதன் சக்கையையும் விழுங்கக்கூடாது. காரணம் அது வறட்சியை உண்டாக்கும். பசியை அடங்கிவிடும். ஆண்மையைக் குறைத்துவிடும், நீரழிவு நோயை உண்டுபண்ணும்.

பால் குடித்தவுடன் வெற்றிலைப் போடக்கூடாது. பல் சுவை நாவில் இருந்து நீங்கிய பிறகே போடவேண்டும். பால் குடித்தவுடன் வெற்றிலை போடுவதால் உடலுக்கு நீரழிவு, நீர் சுருக்கு,தோல் நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.


அளவோடு இருப்பது நலம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் இல்லையா? அதுபோலவே தாம்பூலத்தையும் அளவுக்கு அதிகமாக தரிக்கக்கூடாது. அளவோடு போடவேண்டும். அப்படி அளவுக்கு அதிகமானால், கண், கூந்தல், பல், காது இவற்றின் வலிமையைக் குறைத்தவிடும். வெற்றிலை போடும் போது,கவனமாக காம்பு நுனி, நடுப்பகுதியில் உள்ள நரம்பு ஆகியவற்றை நீக்கிவிட்டு போட்டுக்கொள்ள வேண்டும்.இவை உடளுக்கு கேடுவிளைவிக்கக் கூடியது.

சமீப காலமாக வெற்றிலை போடுவதை ஏதோ தீய பழக்கம்போல ஆக்கிவிட்டார்கள். ஆனால் மது குடிப்பதை நாகரிக பழக்கமாக ஆக்கிவிட்டார்கள்.

Thamboolam tharithal in tamil

தாம்பூலம் தரித்தல்

தமிழ்க் கலாசாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம் தரித்தல்" எனப்படும் வெற்றிலை,பாக்கு போடுவது. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெறும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு. வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

விருந்தினர் வீட்டுக்கு வந்தால் வெற்றிலை, பாக்கு முக்கிய இடத்தை பிடித்து இருந்தது. நிச்சயதாம்பூலம், நிச்சயதார்த்தம், பாக்குமாற்றல் என்று திருமண உறுதிக்கு வெற்றிலையும் பாக்கும் முக்கிய பங்காற்றின. இன்னும் சொல்லப்போனால் இன்றளவும் இறை வழிபாட்டில் வெற்றிலை பாக்குக்கு முதலிடம் உண்டல்லவா? காரணம் அதன் பயன்பாட்டு முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கே ஆகும்.


தாத்தா பாட்டுக்கு புற்று வரவில்லை

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆனால் இன்று செயற்கை முறை கருத்தரித்தல் மையங்களுக்கு படை எடுக்கிறோம்.

இதில் இருந்து என்ன தெரிய வருகிறது? வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

கலாசார சீரழிவும், அந்நிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை கருத்தரிப்பு மையம் (Fertility Center)நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

தவறான பிரசாரம்

வெத்திலை போட்டா வாயில புத்து வந்துடும். பல்லுல கரை போகவே போகாது. 'என்னடா நீ..இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு' என்று கிண்டலடித்து வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ஏதோ தீண்டாத தகாத பழக்கம்போல நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

Thamboolam tharithal in tamil

தாம்பூல சிறப்பு

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிழ்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், என்னது தாம்பூலமா? அப்புடின்னா..? என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது.


மலட்டுத்தன்மை

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை, குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் இயக்கம் (motility)குறைதல் போன்றவைக்கு இவற்றுக்கு தாம்பூலம் மிகச் சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate -ஐ வலுப் படுத்துகிறது. மேலும் Prostate புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. விதைப் பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது.

அதாவது இயக்கம் (motility) உண்டாகிறது. IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம். அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு மிகவும் முக்கியம். இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா வெற்றிலையைச் சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமூகம் இன்று குழந்தை பாக்யம் இல்லாமல் கருத்தரிப்பு மையங்களுக்குச் சென்றுகொண்டிருப்பது வேதனையான விஷயம்.

Thamboolam tharithal in tamil

எப்படி நாடுமுழுவதும் இத்தனை கருத்தரிப்பு மையங்கள் உருவாகின என்று என்றாவது சிந்தித்து இருப்போமா? மெல்ல மெல்ல நாம் நம்து கலாசார பண்பாடுகளில் இருந்து சிதைக்கப்பட்டோம். அந்த விழிப்புணர்வை இனிமேலாவது நாம் பெற்றாகவேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலம் தரித்தலின் மகத்துவத்தை எடுத்து உரைப்போம்.

நன்றாக கவனியுங்கள். தாம்பூலத்தை தரித்தல் என்று கூறிய தமிழ் கலாசாரம் 'கருவையும் தரித்தல் என்றார்கள். தாம்பூலம் தரித்தலுக்கும் கரு தரித்தலுக்கும் உள்ள தொடர்பை எவ்வளவு அழகாக பொருத்திப் பார்த்துள்ளார்கள், நம் முன்னோர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

Tags

Next Story