/* */

Perungayam in tamil-பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு பெருங்காயம்..!

பெருங்காயம் சமைக்காதபோது அது நெடியுள்ள விரும்பத்தகாத மணமாக உள்ளது. ஆனால் சமைத்தபின்பு அது சுவை சேர்க்கும் வாசனையாக மாறுகிறது.

HIGHLIGHTS

Perungayam in tamil-பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு பெருங்காயம்..!
X

Perungayam in tamil-பெருங்காயம் பயன்கள் (கோப்பு படம்)

Perungayam in tamil

பெருங்காயம் பல தலைமுறைகளாக உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவைக்காக மட்டுமே உணவு உண்ணாமல் ஆரோக்கியத்திற்கும் உண்ணுதல் அவசியமாகும். உணவில் சேர்க்கப்படும் சில உட்செரிக்கைகள் சுவை சேர்ப்பிப்பதுடன் ஆரோக்ய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில் இன்று இந்த கட்டுரையில் பெருங்காயத்தின் பயன்கள், நன்மைகள் மற்றும் தீமைகளையும் பார்ப்போம் வாங்க.


உணவுக்கு சுவையையும் உடல் ஆரோக்யத்தையும் கொடுப்பதுடன் நோய் வராமல் தடுக்கக்கூடிய பொருள்களில் பெருஙகாயம் முக்கியப்பொருள்களில் ஒன்றாகும்.

பெருங்காயம் நன்மைகள் :

சாம்பார் அல்லது ரசம் மணக்க மணக்க வைத்தாலும் அதில் பெருங்காயம் சேர்த்தால் தான் வாசனையும் சுவையும் கூடும். அவ்வாறு பயன்படுத்தப்படும் பெருங்காயம் மிகப் பெரிய அளவில் ஆரோக்யம் தரும் ஒரு உணவுக் கூட்டுப்பொருள் என்கிறது ஆய்வுகள் முடிவு.

பெருங்காயத்தின் நன்மைகள்

Perungayam in tamil


நோய் எதிர்ப்பு சக்தி :

பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மட்டுமே நோய்கள் அடிக்கடி வந்து உடல்நிலையை பாதிக்கிறது. காய்ச்சல் வராமல் தடுக்க, உடலுக்கு தேவை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியாகும். பெருங்காயத்தில் உள்ள லக்டோபஸிலஸ் எனும் நன்மைதரும் பாக்டீரியா இந்த ஆற்றலை கொடுக்கின்றது. அதனால் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.


அஜீரணம் :

கால் ஸ்பூன் பெருங்காயத்தை நீரில் கலந்து குடித்தால் போதும். அஜீரண பிரச்னைகள் தீருவது மட்டுமல்லாமல் வாயுத்தொல்லையும் தீரும்.

Perungayam in tamil


கண்கள் :

பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின், நமது கண்களை பராமரிக்க உதவி புரிவதோடு ஆரோக்யமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. பெருங்காயத்தூளை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் கண் வறட்சி நீங்கி பார்வை பிரகாசமாகத் தெரியும்.

மாதவிடாய் பிரச்னைகளுக்கு

மாதவிடாய் பிரச்னை இருக்கின்ற பெண்கள் பெருங்காயத்தை நீரில் கலந்து குடிப்பதால் அதிக இரத்தப்போக்கு, இரத்தப்போக்கின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பையில் நீர்க்கட்டி போன்ற உபாதைகள் உண்டாகாது.


பிரசவித்த பெண்களுக்கு பெருங்காயம்

குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான லோசியா எனப்படும் ஒருவகை திரவம் வெளியேறும். அது பிரசவித்த பெண்களின் வயிற்றில் இருந்து முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது.


வாயுத் தொல்லை

பெருங்காயம் நரம்பு கோளாறுகளை நீக்குவதிலும் பயன்படுகின்றது. குறிப்பாக சிலருக்கு நெஞ்சு, முதுகு ஆகிய இடங்களில் வலி உண்டாகும். இது வாயுவால் உண்டாகும் வலியாகவும் இருக்கலாம். இந்த எலும்பு பகுதியில் இருக்கும் வாயுவை விரட்டி பலம் சேர்க்கவும் பெருங்காயம் உதவுகின்றது.

Perungayam in tamil

பெருங்காயப் பொடி நன்மைகள் :

பெருங்காயப் பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இரத்த சர்க்கரை :

பெருங்காயம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதோடு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை சரி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் வருவதையும் தடுக்கிறது.

Perungayam in tamil


சளித் தொல்லை

இளஞ்சூடான தண்ணீரில் பெருங்காயத்தை சேர்த்து குடிப்பதால் பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள் நுரையீரல் சுவாச மண்டலம் வழியாக மார்பு சளியை வெளியேற்றுகிறது. நெஞ்சு சளியை இயற்கையாக வெளியேற்றும் குணம், பெருங்காயத்திற்கு உண்டு.

குடல் இயக்கம்

பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால், குடல் இயக்கம் சீராக நடைபெறும். குடல் இயக்கம் சீரானால் மலச்ச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

காயங்கள் :

உடலுக்குள் இருக்கும் அனைத்து காயங்களையும் ஆற்றும் சக்தி பெருங்காயத்திற்கு உண்டு.

Perungayam in tamil

ஆண்மைக் குறைவு :

ஆண்மைக் குறைவை குணப்படுத்த ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் ஆண்மைக்குறை நீங்கும்.

இரத்தம் உரைதல் :

பெருங்காயத்தை வெந்நீரில் குடிப்பதால் பெருங்காயத்தில் உள்ள கோமரி என்ற பொருள் இரத்தத்தை மெலிவாக்கி இரத்த உரைதலைத் தடுக்கிறது. இதன் உறை எதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்த கொழுப்பைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.


வயிற்று வலி :

கால் ஸ்பூன் பெருங்காயத்தை, நீர்மோரில் கலந்து குடித்தால், கடுமையான வயிற்று வலி, உடனே குணமாகும்.

பெருங்காயம் தீமைகள் :

மனிதர்களில் பெருங்காயம் தீமைகள் பற்றி குறைவான ஆராய்ச்சித் தகவல்கள் தான் உள்ளது என்றாலும் சிறிதளவு சமையலில் பயன்படுத்துவது எந்த வித தீமைகள் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

இருப்பினும், அதிக அளவு பெருங்காயம் எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கு, பதட்டம், தலைவலி மற்றும் வயிறு உப்புசம் போன்ற உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பெருங்காயம் பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமான ஆய்வுத் தகவல்கள் இல்லை.

Perungayam in tamil

மேலும் பெருங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்பதால், இரத்த அழுத்த மருந்துகள் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பெருங்காயத்தை மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை

இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவைகள் தகவல் குறிப்புகள் மட்டுமே. மருத்துவர் அறிவுரை இல்லாமல் எதையும் மருந்தாக பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

Updated On: 8 Sep 2023 10:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!