/* */

One line quotes in tamil-ஒற்றை வாக்கியம் ஓங்கிச்சொல்லும் ஒப்பற்ற பொருள்..!

ஒரே வாக்கியத்தில் உரக்கச் சொல்லும் கருத்து வாசகங்கள் சட்டென்று நெஞ்சைத்தொடும்.

HIGHLIGHTS

One line quotes in tamil-ஒற்றை வாக்கியம் ஓங்கிச்சொல்லும் ஒப்பற்ற பொருள்..!
X

One line quotes in tamil-ஒரு வரி மேற்கோள்கள்.(கோப்பு படம்)

One line quotes in tamil

தமிழில் பல சிறப்புகள் உள்ளன. இலக்கிய சிறப்புகளுடன் பல இலக்கண நெறிகளும் தமிழின் சிறப்புகளில் ஒன்றாகும். குறிப்பாக பிற மொழிகளில் இல்லாத சிறப்பு நமது தமிழ் எழுத்துகளில் உள்ளன. உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து என்று சிறப்பான எழுத்து வடிவங்கள் உள்ளன. வேறு எந்த மொழியிலும் இல்லாத 'ழ' ஞ,ங போன்றவை தனிச் சிறப்பு பெற்றவை. ஆய்த எழுத்தான ஃ போன்ற சிறப்பு எழுத்துக்கள் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கின்றன.

அதேபோல ஒரே எழுத்தில் உள்ள சொற்களும் உள்ளன. ஆ, கோ, மா போன்றவை எடுத்துக்காட்டுகள். மேலும் ஒரே வாக்கியத்தில் அமையும் கருத்துள்ள வாக்கியங்களும் உள்ளன. இன்றைய கட்டுரையில் நாம் ஒரே வாக்கியத்தில் அமையப்பெற்ற வாக்கியங்களைப் பார்க்கலாம் வாங்க.


இதோ உங்களுக்கான ஒரு வரி வாக்கியங்கள் :

வலி மறக்க வழி தேடு

ஆணவத்தின் அடையாளம் ஆடம்பரம்

ஒளியாக நீயிருப்பதால் இருளைப்பற்றிய கவலை எனக்கில்லை

மதியும் மனமும் விளையாடுகிறது விதி எனும் நூல் கொண்டு

நீயே உனக்கு என்றும் நீங்கா துணை

One line quotes in tamil

மன நிம்மதியின் மாளிகை.. தனிமை

அஞ்சியும் வாழாதே, கெஞ்சியும் வாழாதே

தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ

பிடித்ததும் ஒரு நாள் பிடிக்காமலும் போகலாம்

இன்றைய உலகில் யாதும் யாவரும் சில காலம் தான்

வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்பவள் தான் பெண்

காலம் சிலரின் முகத்திரைகளை கிழிக்கும்

One line quotes in tamil

முகமூடி கிழியும் வரை அனைவரும் நல்லவர்களே

பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்

எதையும் மறக்காது மறந்தது போல் நடிப்பவள் பெண்

உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்

எல்லாம் சில காலம்

அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு


One line quotes in tamil

அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல.

தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்.

அறியாத வயசு அறிய வைத்தது பசி

எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்...!

ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ...

பொம்மையும் உயிர் பெற்றதே குழந்தைகளிடம் மட்டும்

One line quotes in tamil

கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்

வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே

அழுகை கூட அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்

நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்

நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின் உச்சம்

கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்)

போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்...!

One line quotes in tamil

எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது

அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே

கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது

மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதிபோயிரும்...!

எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...!

பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு கூடயிருந்து குழிபறிக்காம

வாய்ப்புகளை தேடி அலையாதே வாய்ப்புகளை உருவாக்கு...!

கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே


One line quotes in tamil

ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்

ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே...!

இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)

பிடிவாதத்தை எரித்துவிடுவோம் இல்லம் மற்றும் உள்ளம் மகிழ்சியாயிருக்க...!

அப்பாவின் அமைதி மொத்த தைரியத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது

One line quotes in tamil

சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே

தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்

நாட்டமிடுகிறது குழந்தையின் அழகை கண்டு நாற்று...!

எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஆறுதல் நம் நம்பிக்கை மட்டுமே

கற்றுத்தெளிவது கல்வி அறிந்து தெளிவது அறிவு

வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்

One line quotes in tamil

கலப்படம் இல்லாத புன்னகை குழந்தைகளிடம் மட்டுமே

யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்

தேடலில் தொடங்கி எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை

வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது...!

மழலையாய் மனதை வைத்திரு கவலைகளும் தீண்டாது

One line quotes in tamil

நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்

வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை

எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு

மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்

நமக்கும் சேர்த்தே வேண்டிக்குற அந்த மனசுதான் கடவுள்

ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே எவ்ளோ போராட வேண்டியிருக்கு

கொடுப்பதை வாங்கிக்கொள் முடிவை தெளிவாக எடு


One line quotes in tamil

ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்

சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது

ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது அவர் நமக்கு செலவிட்ட நேரம்

ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்

வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்

குழந்தைகளின் அறியாமை மிக அழகு

நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது

One line quotes in tamil

ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்

சூழல்கள் மாற்றத்தால் சூழ்நிலை மாறும்

எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே

கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை

பிடித்ததை செய்வோம் இந்த வாழ்வை ரசித்து வாழ்வோம்

One line quotes in tamil

சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை

நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு

நேசங்கள் மெய்யானபின் வேசங்களுக்கு வேலையேயில்லை

சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்ப்பில்லா வரம் தான்

வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி புன்னகை


One line quotes in tamil

பாசம் கூடினாலும் பாரம் குறைந்தாலும் பாரம்

லட்சியங்களின் அடிப்படை அலட்சியங்களே

சரினு பட்டா விட்டுக்கொடு தப்புனு பட்டா தள்ளி நில்லு

வாழ்க்கையில் பொறுமை உள்ளவனே பெரும் பாக்கியசாலி

தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் இல்லை

One line quotes in tamil

உன்னை நீயே நம்பு உலகை வெல்ல அது தான் தெம்பு

அன்பின் செடியில் என்றும் புன்னைகைப் பூக்கள் மட்டுமே மலரும்

விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்

விலையில்லாத அன்பும் புன்னகையும் யாரிடமிருந்தும் விலகி செல்வதில்லை

இருண்ட உலகின் ஒற்றை ஒளி விளக்கு அவள் மட்டுமே

நான் என்பது பல சமயங்களில் தலைக்கனம் சில சமயங்களில் தன்னம்பிக்கை

One line quotes in tamil

மனதோடு அழ பழகிக்கொள் கண்ணீரும் அடங்கிவிடும்

இருந்தால் நிஜமாயிரு இல்லயேல் நிழல் என்று கூறி மறைந்துவிடு

தொலைதலும் சுகமே தேடல் விருப்பமெனில்

பரிகாசங்களை விட பரிதாபமே நம்மை பலவீனப்படுத்தும்

கண்ணுக்குள் நுழைந்து கனவை தூண்டுகிறாய்


One line quotes in tamil

ஏமாளிகள் என்றுமே நம்பிக்கைக்கு உரியவர்கள்

சொல் மட்டுமல்ல சிலரின் செயல்களும் கொல்லும் மனதை

நாம் பழகும்விதமே நம்மை விரும்ப செய்யும்

மனிதர்களின் உயரம் என்பது அவரவர் மனதை பொறுத்தது

வாழவும் சொல்லும் சாகவும் சொல்லும் காதல்

எதிரி நண்பன் என்று தெரிந்தால் கடைசி நொடிவரை போராடு

One line quotes in tamil

வார்த்தைகளால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவது சிறப்பு

நம்பிக்கையில் கிடைக்கும் மன நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை

அடுத்த நொடி எதுவும் நடக்கலாம் so கிடைத்த நொடியில் ரசிப்போம் வாழ்க்கையை

திணிக்கப்படும் எதுவும் ரசிக்கபடாது வேறு வழியின்றி மனம் ஏற்றுகொள்ளுமே தவிர

One line quotes in tamil

வாழ்க்கையை ரசிச்சுட்டு போங்க இங்க எதுவுமே நிரந்தரம் இல்லை

நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்கும் நட்பு நிரந்தரமானதில்லை

காலம் மட்டுமே மாறும் நினைவுகள் ஒரு போதும் மாறாது

சில சமயங்களில் சுயபச்சாதாபம் கூட நிம்மதியைத் தருமாமே

அதிகாரத்தால் விலைக்குவாங்க முடியாததில் முதன்மையானது அன்பு

இதழ் தீண்ட ஒரு ஒத்திகை மலரிதழோடு

One line quotes in tamil

உன் அருகாமையில் நான் என் அகிலமாய் நீ

மௌனமாய் நீயுறங்க என் விழிகளிலோ பல கனவு

உனை நீங்கா வரமொன்று கேட்டேன்

வெட்கமும் விடை பெறுகிறது உன்னிடத்தில்

கனவாகவே போகட்டும் காயம்பட்ட காலமெல்லாம்


One line quotes in tamil

நீள்கிறது இரவு நீங்காவுன் நினைவில்

தனிமையும் இனிமை நினைவெல்லாம் நீயாக

மனக் கீறல்களுக்கு மருந்து உன் கிறுக்கல்கள்

நீ விழித்த பின்னே எனக்கும் விடியல்

இருளிலும் ஒளிவீசும் ஓவியம் நீ

தனிமையும் சுகமாகிறது இசையின் மேல் கொண்ட காதலால்

One line quotes in tamil

உன் நேசமே என் சுவாசம்

சம்பவங்கள் சரித்திரமாவது நியதி சரித்திரங்கள் சம்பவமாவது அநீதி

வாழ்வும் வரம் ஆளும் உன்னன்பில் அன்பே

பிரளயமே வந்தாலும் உனை பிரியேன் அன்பே

வேண்டியவர்கள் அருகிலிருந்தால் வேறெதுவும் தேவையில்லை

கோபம் கூட நேசிப்பவர்கள் மேல் தான் அதிகம் வருகிறது

தொலைவைக் கடப்பதற்குள் தொலைந்து போகிறது வாழ்க்கை

இரவென்றால் இருளாய் நீயென்றால் நானடா

உனக்கான வாழ்க்கையை நீ எழுது வாழ்க்கை உனக்கானதாய் மாறும்

One line quotes in tamil

நினைத்த ஒன்று நினைக்காத நேரத்தில் கிடைப்பதென்பது பேரழகு

கடந்த பாதை வலிகள் தந்ததால் செல்லும் பாதை வழியாக மாறியது

என் நிம்மதியின் சன்னதி நீ

இழப்புகள் மட்டுமே நிரந்தரம் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதே நலம்

சிரிப்பே மூலதனம் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்

விரும்பாமலும் வரும் உறவு விரும்பினால் மட்டுமே வரும் நட்பு

One line quotes in tamil

அன்பெனும் பிடிக்குள் அகப்படும் முன் அனைவரும் பலசாலிகளே

எதையுமே தாண்டுற வரையிலும்தான் கஷ்டம் தாண்டிட்டோம்னா அவ்வளவுதான்

துன்பங்களை சகித்துக் கொள்ளாத வாழ்க்கை இனிமையாக அமைவதில்லை

யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும் நாம் நாமாக இருப்போம்

Updated On: 5 Sep 2023 12:36 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்