காசில்லையேல் நீ ஒரு தூசு..! பணம் இருந்தால் நீ தான் மாசு..!
![Money Quotes in Tamil Money Quotes in Tamil](https://www.nativenews.in/h-upload/2022/12/18/1631266-running-after-the-money1.webp)
Money Quotes in Tamil
Money Quotes in Tamil-பணம், சமுதாயத்தில் உங்கள் தகுதியை அளவிடும் அளவீட்டுக் கருவி. அது இருந்தால் மட்டுமே மதிப்பும், மரியாதையும். நீங்கள் எவ்வளவு திறமை உள்ளவராக, நல்ல குணமுடையவராக இருந்தாலும் உங்களுக்கான மதிப்பு பணத்துக்கு கீழேதான். படிக்காத,திறமையே இல்லாத ஒருவனிடம் பணம் இருந்தால் அவனுக்கு கிடைக்கும் மதிப்பு மரியாதையில் கால்வாசி கூட உங்களுக்கு கிடைக்காது என்பதே உண்மை.
அண்ணன் என்னடா..
தம்பி என்னடா..
அவசரமான உலகத்திலே..
ஆசைக்கொள்வதில்
அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..!
![](https://www.instanews.city/h-upload/2022/12/18/1631262-money-1a2.webp)
இந்தப்பாடல் பல உள்ளங்களைத் துளைத்து எடுத்த பாடல். நடைமுறை வாழ்க்கையை எதார்த்தமாக எளிமையான வரிகளில் கவிஞர் கண்ணதாசன் தெளிவுபட எழுதியுள்ளார். இன்னொரு இடத்தில்
"காசேதான் கடவுளடா -அந்த
கடவுளுக்கும் இது தெரியுமடா"
என்று எழுதியிருப்பார். இப்படி பணம் இல்லாத வாழ்க்கையை யாரும் நினைத்துப்பார்க்க முடியாது. எல்லோருமே பணக்காரர் ஆவதற்கே விரும்புகிறார்கள். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்று கூறும் சாமியார்கள் இன்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இணையாக பணம் சம்பாதிக்கின்றனர். ஆன்மிகத்தை கமர்சியல் ஆக்கிய உலகம் இது. இதுக்கு மேல் பணத்தைப்பற்றி உங்களுக்குத் சொல்லனுமா..?
அட போய்யா..நான் பணம் சம்பாதிக்கப்போகணும்..என்று நீங்கள் ஓடுவது தெரிகிறது. இதோ பணம் பற்றிய மேற்கோள்கள்.
![](https://www.instanews.city/h-upload/2022/12/18/1631264-running-after-the-money.webp)
பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை. நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை ...!
பணம் கொடுத்துப் பார் உறவுகள் உன்னை போற்றும். கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுப்பார் மண்ணை வாரி தூற்றும்..
மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அமைதியாக இருக்கிறது. மதிப்பில்லா சில்லறைக் காசு தான் அதிகம் சத்தம் போடுகிறது. மனிதர்களும் அப்படித் தான்..!
பணம் இன்றி மனிதனாய் வாழ முடிகிறது. ஆனால், மனிதர்கள் உடன் தான் வாழ முடியவில்லை..!
பணம் ஆறாம் அறிவு போன்றது. அதில்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது..!
நம்ம கிட்ட எவ்வளவு தான் நல்ல குணம் இருந்தாலும், நம்ம கிட்ட பணம் இல்லன்னா நம் வீட்டினரே மதிக்கமாட்டார்கள்..!
பணத்தை எண்ணிப் பிணமாய் வாழ்வதை விட, மனதை நம்பி மனிதனாய் வாழலாம்..!
பணத்திடம் ஒரு மனிதன் கூறினான்: நீ ஒரு வெற்றுக் காகிதம் என்று. அதற்குப் பணம் அளித்த பதில் : ஆனால், நான் இதுவரை ஒரு குப்பைத் தொட்டியைக்கூட பார்த்ததில்லை என்று..!
பணம் என்ற சொல்லின் பின்னால் அணி வகுத்து நிற்கும் இந்த உலகம், பாவம் என்ற கேடயத்தை சூடிக் கொண்டிருக்கிறது..!
பணம் இல்லையின்னா பாசம் கூட உனக்கு கிடைக்காது..! எல்லாத்துக்கும் விலையுண்டு..!
![](https://www.instanews.city/h-upload/2022/12/18/1631258-money.webp)
பணம் இருந்தால் தான் நாலு பேரு மதிப்பார்கள் என்றால், அந்த மானங்கெட்ட மரியாதை எனக்கு தேவையில்லை- பெருந்தலைவர் காமராஜர்
வாழ்வதற்கு செலவு மிகக் குறைவு. அடுத்தவனை போல வாழ்வதற்குத் தான் செலவு மிக அதிகம்..!
நண்பனுக்கு கடன் கொடுத்தால் ஒன்று நண்பனை இழப்பாய். இல்லையென்றால் பணத்தை இழப்பாய்..!
பணத்தால் கிடைக்கும் புகழ் நம்மிடம் பணம் இருக்கும் வரை மட்டுமே நிலைக்கும். குணத்தால் கிடைக்கும் புகழ் இறந்த பின்பும் நிலைக்கும்...!
நீ உறங்கிக் கொண்டு இருந்தாலும் உனக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்பை நீ ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் சாகும் வரை நீ உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்..!
பார்வைகளின் பரிமாற்றம் பாசங்களின் இடமாற்றம் அத்தனையும் இன்று பணம் என்ற உறவு பரிமாறும் வரை மட்டுமே..!
பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை, பொய்யான உறவுகள். இதுதான் உலகம்..!
பாசத்தின் மதிப்பைக் கூட தற்போது பணம்தான் தீர்மானம் செய்கிறது..!
காலம் நமக்கு கற்றுக் கொடுத்தப் பாடம் "பணம் இருந்தால் நாலுபேர் நம்மை திரும்பி பார்ப்பார்கள். பணம் இல்லை எனில் நாம் நாலுபேரை திரும்பி பார்க்கவேணும் "
மெத்தை வாங்கும் வரை தான் பணம் பக்கத்தில் நிற்கும்.தூக்கத்திற்கு..?
பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஒரே வழி அல்ல. ஆனால், பெரும்பாலான சூழ்நிலையில் பணத்தை அடிப்படையாக வைத்தே மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது தவிர்க்க முடியாத உண்மை ...!
பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது. நிம்மதி தேடும்பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது, பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது..!
கடன் கொடுத்துப்பார் நீ எந்தளவுக்கு முட்டாள் என்று ஊருக்கே தெரியும்...! கடன் கேட்டுப்பார் ஊரில் உள்ளவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று உனக்கே புரியும்..!
![](https://www.instanews.city/h-upload/2022/12/18/1631261-money1a.webp)
வரவுக்கு மீறிய செலவு செய்யக்கூடாது. தேவையற்ற செலவுகளை தவிர்க்கனும். முதலீடுகளை பல மடங்குகள் பெருகும் இடத்தில் முதலீடு செய்யனும் போன்ற எண்ணங்கள் உங்களுக்கு அதிக சேமிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும். ஆனால், அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.
பணம் இருப்பவனை தூங்கவிடாது. இல்லாதவனை வாழவிடாது.
பணமா பாசமான்னு கேட்டா எல்லோரும் பாசமுன்னு சொல்வாங்க. ஆனால், அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்..!
பணத்தை சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம். ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வாழ முடியாது..! 'வாழ்க்கை வாழ்வதற்கே'
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல. ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல...!
பணத்தின் உண்மையான மதிப்பு, பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்..!
பல ஆறாத காயங்களுக்கு காரணங்கள் கொஞ்சம் பணமும் சில மனங்களும் தான்..!
கோடி பணம் கிடைத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்..!
![](https://www.instanews.city/h-upload/2022/12/18/1631263-money-1a1.webp)
எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் "நீ நல்லா இருப்ப" என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்புடன் ஓடச் செய்கிறது..!
பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல் திரியும் போது வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடமே பணம் சம்பாதிக்கும் சேமிக்கும் எண்ணத்தை உருவாக்கும்..!
ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்தை தங்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu