சீரான உடல் வேணுமா..? அப்ப தினமும் 'சீரகத் தண்ணீ ' குடிங்க..!

Seeragam Water Benefits in Tamil

Seeragam Water Benefits in Tamil

Seeragam Water Benefits in Tamil-சீரகத் தண்ணீர் குடித்தால் என்ன நன்மைகள் கிடைத்துவிடப்போகிறது என்று எண்ணுபவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. படீங்க.

Seeragam Water Benefits in Tamil

'உணவே மருந்து மருந்தே உணவு' என்பது தமிழ் சித்தர்கள் கூறியுள்ள கோட்பாடு. நாம் உணவு தயாரிக்கும் போது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பல பொருட்களை சேர்த்துதான் சமையல் செய்கிறோம். பொதுவாக நமது ரசம் ஆரோக்ய நலனுக்குச் சிறந்தது. காரணம் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் அத்தனையும் நற் குணங்கள் நிரம்பிய மருத்துவ பொருட்களாகும். சீரகம், மிளகு, பூண்டு, மஞ்சள் தூள் போன்றவை உடலுக்கு ஆரோக்யம் தரும் மருத்துவ பொருட்களாகும்.

jeeragam water benefits in tamil

சீர்+ அகம் = சீரகம், அகத்தை அதாவது உடலின் உட்புறத்தை சீர்படுத்தும் அரும் பொருள்தான் சீரகம்.

சீரகத் தண்ணீர் பயன்கள்

அஜீரணம்

அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடி நிவாரணம் அளிக்கும் தன்மை கொண்டது சீரகம். இரவு நேரங்களில் காலம் கடந்து உண்பதது, பசி எடுப்பதற்கு முன்பே அடுத்த வேளை உணவை உண்பது போன்ற காரணங்களால் பலருக்கு வயிற்றில் அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. இப்படியான சூழ்நிலைகளில் அரை டீஸ்பூன் சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு வேக வைத்து குடித்தால் அஜீரணம், வாயு தொந்தரவுகள் போன்ற அனைத்து பிரச்னைகளும் நீங்கும்.

தோல் பளபளப்பு

சீரகத்தில் நமது தோலில் பளபளப்பு தன்மையை உண்டாக்கும் சக்தி இருக்கின்றது. எனவே தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது சீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால், தோலின் பளபளப்புத் தன்மை கூடி, இளமையான தோற்றத்தை அதிகரிக்கிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் தடுக்கிறது.

jeeragam water benefits in tamil

ஞாபக சக்தி

சீரக தண்ணீரை தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சியடைகின்றன. இதனால் உடலில் நல்ல சுறுசுறுப்புத் தன்மை ஏற்படுகிறது. சிலருக்கு காலியில் சாப்பிட்ட சாப்பாட்டையே மறந்துவிடும் அளவுக்கு ஞாபக சக்தி மோசமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாரத்தில் ஒருமுறையேனும் சீரக தண்ணீரை குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நச்சு நீக்கி

நாம் உண்ணும் உணவு பொருட்களை எப்படித் தூய்மை படுத்தினாலும், அதில் சிறிதளவாவது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நுண்கிருமிகள், இரசாயனங்கள் இருக்கவே செய்யும். இதற்கு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சீரக தண்ணீரை குடித்து வந்தால் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

சீரகத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளுக்கும் உடலின் வெளிப்புறத்திலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்த் தொற்றைத் தடுக்கும் சக்தி உல்ளது. சீரகத்தில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரகத் தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு கூடுதல் பலமும் கிடைக்கிறது.

இரத்த சோகை

உடலில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு சீரகத் தண்ணீரை குடித்து வந்தால்,இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், இழந்த உடல் சக்தியையும் மீட்டுத் தரும்.

சளி தொந்தரவு

காலநிலை மாறுவதால், குளிர்ந்த பானங்களை அதிகம் பருகுவதாலும் சிலருக்கு நெஞ்சில் சளி சேர்ந்து மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் சுவாசிக்கவும் சிரமப்படுவார்கள். இப்பிரச்னைகளால் அவதிப் படுபவர்கள் தினமும் காலையில் இளம் சூடாக சீரக தண்ணீரை குடித்தால் சளி நீங்கி நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தூக்கமின்மை

சிலருக்கு இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். நீண்டநேரம் இரவில் விழித்திருப்பதால் உடல் ஆரோக்யமும் கெட்டுப்போகும். இப்படி தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் தினமும் இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சிறிது சீரக தண்ணீரை குடித்துவிட்டு படுத்தால் தூக்கமின்மை நீங்கும். நல்ல தூக்கம் வரும்.

நீரிழிவு

நீரிழிவு குறைபாடால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இந்த சீரக தண்ணீர் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் புண்கள் மற்றும் காயங்களையும் வேகமாக ஆற்றிவிடும்.

பால் சுரப்பு

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு சில காரணங்களினால் தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடும். இப்படி தாய்ப்பால் சுரப்பு குறையும் காலங்களில் தொடர்ந்து காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

எடை குறையும்

உடல் பருமன் நமது உணவு பழக்கவழக்கத்தால் ஏற்படுவதாகும். உடல் எடையை குரைக்காவிட்டால் பலருக்கு பல குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. உடல் எடையை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு சீரகத் தண்ணீரை தினமும் சிறிதளவு குடித்து வந்தால் உடல் எடை நன்கு குறையும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story