எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரலாம்..! எது கிடைக்குமோ அது கிடைத்தே தீரும்..!

Ethirparpu Quotes in Tamil
Ethirparpu Quotes in Tamil-உறவுகளிடமான தோல்விக்கு பல காரணிகளைச் சொல்லலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்கிறோம். அந்த நம்பிக்கை இழப்பு உறவுகளின் விரிசலுக்கே வழி வகுத்துவிடும். அதனால், எந்த ஒரு செயலுக்குமான எதிர்பார்ப்புகளை நேர் மற்றும் எதிர் என இரண்டு விதமாகவும் எதிர்கொள்ளும் மன நிலையை நாம் வரத்துக்கொள்ளவேண்டும். அதாவது ஒன்று எதிர்பார்ப்பு வெற்றியடையலாம். அல்லது தோல்வியடையலாம். இந்த இரண்டையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் எல்லாமே சாத்தியம் ஆகும்.

- யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள், அவ்வாறு எதிர்பார்க்காவிட்டால் நீங்கள் அரிதாகவே ஏமாற்றமடைவீர்கள்.
- என் குடும்பத்தினர் என்னைப் பற்றிய அதிகமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் இறுதியில், என் தேர்வுகளில்தான் நான் சமாதானம் அடைய வேண்டும்.
- சிலர் மற்றவர்களிடமிருந்து அதிகமாகவும், தங்களிடம் இருந்து மட்டும் குறைவாக எதிர்பார்க்கிறார்கள்.
- நான் பார்க்கும் விதத்தில் நன்மைகள் உள்ளன. யாரும் உங்களிடம் எதையும் எதிர்பார்க்காதபோது அவர்கள் உங்களைத் தனியாக விட்டுவிடுகிறார்கள், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
- நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, ஆனால் இறுதியில் உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் இதுவரை சென்றிராத இடங்களை அடைய ஒரே வழி, நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்ய கடவுளின் வழிகாட்டுதலை நீங்கள் நம்பினால் மட்டுமே.
- எதிர்பார்ப்பு எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. ஏமாற்றம் எனக்கு ஞானத்தை தந்தது. ஏற்றுக்கொள்ளுதல், நன்றியுணர்வு மற்றும் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்துள்ளது.

- என் குணம் என் எதிரில் நிற்பவனின் குணத்தை பொறுத்தது..!
- வாழ்க்கை என்பது யாதெனில் வாழ வேண்டுமா என்று சில நேரமும்.. வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற பல நேரமும் சேர்ந்த கலவையே..!
- சோகம் மட்டும் வாழ்க்கை கிடையாது.. சந்தோஷமாகவே எந்நாளும் வாழ்ந்திடவும் முடியாது.. சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடி வெளிச்சத்தில் வாழ முடியும்..!
- இலக்குகளை குறி வை..இல்லையெனில் கேள்விக்குறி ஆகிவிடும் வாழ்க்கை..!
- நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர…திருத்தி பார்க்கும் அளவிற்கு இருத்தல் கூடாது..!
- வாழ்க்கை குறுகியது வாழுங்கள்..கோபம் தேவையற்றது அதை தூக்கி எறியுங்கள்.. பயம் மோசமானது அதை
- எதிர்கொள்ளுங்கள்.. நினைவுகள் இனிமையானவை அதை ரசியுங்கள்..!
- எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள்..அதை அதை அப்படியே விட்டு விடுங்கள் காலம்
மாற்றி விடும்..!
- நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள்.. அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவு தான்..!
- அழகான வீட்டுக்குள் அன்பான கூட்டுக்குள் அமைதியாய் காத்திருங்கள்.. சிறகடிக்க காலம் வரும் போது ஆனந்தமாகவும்..சுகந்திரமாகவும் பறக்கலாம்..!

- குறை கூறவே சிலர் காத்துக்கொண்டிருக்கும் உலகம் இது. உன்னைப் பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை..அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீ கோழையும் இல்லை..!
- நாம் இந்த உலகத்தில் தங்கி செல்வதற்கான வாடகை..மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே..!
- ஒருவர் ஏமாற்றுகிறார்..இன்னொருவர் வழிகாட்டுகிறார்..மற்றொருவர் உதவுகிறார்..இந்த வாழ்க்கை தான் எவ்வளவு சுவாரசியமானது..!
- உனக்கு மேலே உள்ளவனை பார்த்து ஏங்காதே.. தாழ்வு மனப்பாங்கு வரும்..! உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே.. தலைக்கனம் வரும்..! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு..
தன்னம்பிக்கை வரும்..!
- எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்..இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..!
- உலகில் மிக எளிமையானது பிறரிடம் குறை காண்பது..உலகிலேயே மிகக் கடினமானது தன் குறையை தானே உணர்வது..!
- பாசத்தைக் கொண்டு பல நாள் பயணிக்கலாம்.. நேசத்தை கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்..
ஆனால் வேஷத்தைக் கொண்டு ஒரு நாளும் பயணிக்க முடியாது..!
- நம்மை பற்றி யார் என்ன நினைத்தால் நமக்கு என்ன..? நம்மை பற்றி நாம் அறியாததையா அவர்கள் அறிந்திட போகிறார்கள்..!
- நிம்மதி என்ற நிழல் உன்னை தொடரும்.. நேர்மை என்ற வெளிச்சம் உள்ளவரை..!
- கயிறு அறுந்த போது தான் பட்டத்துக்கு தெரிந்தது உயரம் தனதல்ல என்று..தலைக்கனம் தவிர்..!
- ஆழம் குறைவோ.. அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே..! சோதனைகள் ஒன்றோ.. பலவோ..
செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே..!
- யாரையும் பொருளாதாரத்தை வைத்து கிண்டல் பண்ணாதீர்கள்...கிடைக்க வேண்டிய வயசுல
- நியாயமா கிடைக்க வேண்டிய சந்தோசம் கூட கிடைக்காம அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்...
- ரணப்படுத்துவது எல்லாம் ஆயுதங்கள் அல்ல. அதீத அன்பினால் கூட இருக்கலாம்...!
- பிரிவுக்கு மிகமுக்கியமாக அமைவது எதுவென்று யோசித்தால் ஆரம்பத்தில் ஆர்வம் மிகுதியில்
உளறிய சில உண்மைகளாக இருக்கும்..!
- உறவாட உறவுகளும் இங்கு இல்லை...உறவாடிய உயிரும் இங்கு இல்லை...உறவே உந்தன் உயிர்காண இங்கு வழி இல்லை...உறவே உறவே உறைந்துவிட்டாயா இல்லை மறைந்துவிட்டாயா...?
- சிலருக்கு கேள்வி கேட்கவும் தெரியாது...எதிர்த்துப் பேசவும் தெரியாது...விலகி நடக்கவும் தெரியாது...
நினைத்து நினைத்து அழ மட்டுமே தெரிகிறது...!

- கடந்து போன நிமிடம், விட்டு சென்ற நினைவு,உடைந்து போன நம்பிக்கை, பேசி விட்ட வார்த்தை
என்றைக்கும் நம்மால் திரும்ப பெற முடிவதில்லை..!
- காத்திருக்க கற்றுக்கொள் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது அவசரப் படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை...!
- மனிதர்கள் எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும்...காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான குணத்தை...காட்டிக் கொடுத்து விடும்..!
- நிறை என்பது நிசப்தமாகவும்...குறை என்பது கூச்சல் இடுவதுமாக அமைகிறது...!
- விலகி போக நினைப்பவர்களை விளக்கம் கேட்டு தடுக்காதே...புரிந்து கொள்ளாத ஜென்மங்கள்
பிரிந்து போவதே மேல்...!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu