எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது..இன்னல்கள் சூழ்கின்றன..!
எதிர்பார்ப்புகள் என்பது ஆசையின் மறுபெயர். அது அளவோடு இருந்தால் வலிமையைத் தரும். எதிர்பார்ப்புகள் அதிகமாகி நிறைவேறாமல் போனால் வேதனை வெடிக்கிறது.
HIGHLIGHTS
Expectation Hurts Quotes
எதிர்பார்ப்பு என்பது வாழ்க்கையில் நிறைவேறாத ஒன்றை எதிர்நோக்கி காத்திருப்பது. அல்லது அதைநோக்கி நகர்வது. அதற்காக உழைப்பது. நம்பிக்கையோடு இருப்பது. இப்படி பல விளக்கங்களைக்கூறலாம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். கல்வி கற்பவர்களுக்கு வெற்றி எனும் எதிர்பார்ப்பு. அதை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பெற்றவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு. பிள்ளைகளுக்கு ஒரு எதிர்பார்ப்பு. திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று ஏதிர்பார்ப்பு.
Expectation Hurts Quotes
ஏழைகளுக்கு ஒரு எதிர்பார்ப்பு, பணக்காரர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு என்று எதிர்பார்ப்பு கணக்கில் அடங்காதவைகள். இருப்பினும் எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது அதற்கான எதிர்வினை இருக்கத்தான் செய்யும். வேதனை, கவலை, வலி என பல இன்னல்கள் வந்தது வாட்டும்.
அதனால் எதிர்பார்ப்பு இல்லாத மனிதரே துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்பார்கள். அதையே புத்தன் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்கிறார். எதிரிபார்ப்பு இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா என்ற ஒரு கேள்வி எழலாம்.
எதிர்பார்ப்பு இருக்கவேண்டும். அது நம் சக்திக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். வீடே இல்லாத ஒருவர் மாளிகை கட்ட நினைப்பதைவிட, குறைந்தபட்சம் ஒரு கூரை வீடு கிடைக்க நினைப்பது நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால், அதுவே அவர் மாளிகை வேண்டும் என்பது சக்திக்கு அப்பாற்பட்ட ஆசை அல்லது எதிர்பார்ப்பு. அது கிடைக்காதபோது எண்ணங்களை அசைத்துப்பார்க்கிறது. தேவை இல்லாத கவலைகள் மனதில் சூழ்கிறது.
Expectation Hurts Quotes
ஆகவே எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வதே சிறந்தது. இதோ உங்களுக்காக எதிர்பார்ப்புகள் நிறைவேறாத மேற்கோள்கள்.
சுலபமாக கிடைத்து விடும்
பொருளுக்கு இந்த உலகில்
மதிப்பு என்பதே கிடையாது.
அது அன்பாக இருந்தாலும் சரி.
அன்பு என்பது ஒரு மருந்து.
தேவையான அளவு இருந்தால்
வாழ்வை அழகாக்கும்.
அளவுக்கு மீறினால் விஷமாகி
வாழ்க்கையை அழித்துவிடும்.
வாழ்வில் ஆயிரம்
பேரைச் சந்தித்தாலும்,
சிலர் மட்டுமே நம்
நினைவில் இருப்பார்கள்.
அதில் நாம் நேசித்தவர்களும்
வெறுத்தவர்களும் அடங்கும்.
Expectation Hurts Quotes
சின்ன சின்ன வலிகளுக்கு
மருந்தே இல்லை என்று தெரிந்தும்
மறைத்து வைத்து கொள்கிறேன்
சிறு புன்னகையில்.
சில உறவுகளினால்
வாழ்க்கை துளிர்விடுகிறது.
சில உறவுகளினால்
வாழ்க்கை துவண்டு விடுகிறது.
வாழ்க்கையில்
வலிகளும் காயங்களுமே
மனிதனை மாற்றுகிறது
சிலரை அரக்கனாகவும்
சிலரை அமைதியாகவும்
நான் கரை தேடும் ஓடம்.
என்னுடன் பயணம்
செய்ய நினைக்காதே!
நீயும் தொலைந்து போவாய்
என்னைப் போல்.
Expectation Hurts Quotes
சிலரின் அமைதி திமிரல்ல அது
அவர்களுக்குள் இருக்கும் வலி.
ஒரு துளி அன்பை கொடுத்து
நூறுதுளி கண்ணீரை விலை
கேட்பதுதான் இந்த வாழ்க்கை.
விதியே
ஒரு நாளாவது என்னை
நிம்மதியாக நீ உறங்க வை
என் மரணமாக அது
இருந்தாலும் பரவாயில்லை
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்
ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்.
எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்று
பிறகு எத்தனை முறை கிடைத்தாலும்
சந்தோசத்தை தராது.
Expectation Hurts Quotes
எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும்
அது உண்மை அதனால்
எதிர்பார்ப்பு இல்லாமல்
வாழ முடியாது.ஆனால்
யாரிடம் எதிர்பார்க்க வேண்டும்
என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்புகள் இல்லாமல்
வாழ கற்று கொள்கிறேன்.
ஏமாற்றங்களை சந்தித்த பின்.
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாறுவதை விட
எதிர்பார்க்காமல் இருப்பதே
நல்லது.
உங்களுக்கு எதிர்பார்ப்புகள்
இருக்கும்போது நீங்கள் ஏமாற்றத்திற்கு
உங்களை அமைத்துக் கொள்கிறீர்கள்.
மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை
நீங்கள் ஏற்றுக்கொண்டால்
குறிப்பாக எதிர்மறையானவைகளை.
நீங்கள் ஒருபோதும்
முடிவை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்.
Expectation Hurts Quotes
மற்றவர்களின் எதிர்பார்ப்புகளின்
அடிப்படையில் உங்கள்
வாழ்க்கையை அமைக்க முடியாது.
ஒருவரின் எதிர்பார்ப்புகள்
பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்போது
ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும்
உண்மையிலேயே பாராட்டுகிறார்.
உங்கள் எதிர்பார்ப்புகளை
குறைத்துக்கொள்ளுங்கள்.
இது சொர்க்கம் அல்ல.
எனவே,இது இங்கு எனக்குக்
கிடைக்கும் என்று
எதிர்பார்க்க வேண்டாம்.
மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை.
மரணம் ஒருமுறை தான் கொல்லும்.
மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.
Expectation Hurts Quotes
சிலரின் மௌனம் திமிரல்ல
அவர்களுக்குள் இருக்கும் வலி.
பழகிய மிருகங்களிடம் இருக்கும்
பாசம் கூட பழகிய
மனிதர்களிடம் இருப்பதில்லை.
ஒருதுளி அன்பை கொடுத்து
நூறுதுளி தண்ணீரை
விலை கேட்பதுதான்
இந்த வாழ்க்கை.
காயங்களின்றி காலம்
எதையும் கற்றுக்கொடுப்பதில்லை.
உயிரோடு இருக்கிறேன்
ஆனால் உடைந்து இருக்கிறேன்
என்னவென்றே தெரியாத
பல காரணங்களால்.
விதியே,
ஒருநாளாவது என்னை
நீ நிம்மதியாக உறங்க வை.
அது என் மரணமாக
இருந்தாலும் பரவாயில்லை.
நான் நேசிக்கும் ஒரு உறவும்
எனக்கு நிரந்தரமில்லை என்பது
கடவுளால் அளிக்கப்பட்ட
சாபம் போல…!
நானே வறுமையில் வாழ்கிறேன்
வறுமையோ என்னிடம்
வசதியாய் வாழ்கிறது.
Expectation Hurts Quotes
ஏமாற்றம் எனக்கு புதிதல்ல.
நான் ஏமாறும் விதம்தான் புதிது
சிலநேரம் அன்பால்
சிலநேரம் நம்பிக்கையால்.