Amma Kavithai in Tamil-வாய்மை எனப்படுவது தாய்மையை போற்றலே..!

amma kavithai in tamil-அம்மா கவிதை (கோப்பு படம்)
Amma Kavithai in Tamil
தாய் என்பவள் தன்னுடைய வாழ்வு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், பல கோபங்கள் இருந்தாலும் அதனை தன் குழந்தைகளிடம் வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சி படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் உடையவராக காணப்படுகிறார்.
பிரசவித்த தன் குழந்தைக்கு தன்னுடைய இரத்தத்தை பாலாக தந்த குழந்தையை பாதுகாத்து வளர்க்கிறார். எதிர்பார்ப்பற்ற தூய அன்பினை தன் குழந்தையின் மேல் காட்டி அரவணைப்போடு வளர்க்கும் மனித உலகில் வாழும் தெய்வங்களாக காணப்படுகின்றார்கள்.
Amma Kavithai in Tamil
அப்படிப்பட்ட தாயை போற்றிய கவிதைகள் :
மனிதர்களுள் மேன்மையானவளாய்
தெய்வங்களே வணங்கிடும் தெய்வமாய்
நடமாடும் அழகு தேவதையாய்
அன்பின் திருவுருவமாய் விளங்குபவள் அம்மா
அம்மா என்ற ஒற்றைச் சொல்லே
பெரும் பலம் தந்திடும்
அனைத்து வலிகளையும் களைந்து விடும்
அத்தனை அன்பு வாய்ந்தவள் அம்மா
எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான்
காதல் செய்ய யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்..
காத்திருந்தால் எனக்காக சாப்பிடாமல்
என் அம்மா.!
Amma Kavithai in Tamil
நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்
வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.
இறைவன் எனக்கு கொடுத்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா.
பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறேன்
என் நெஞ்சில் அம்மா.!
Amma Kavithai in Tamil
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக..!
நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,
வேறு அமிர்தம் நான் கண்டதில்லை
அம்மா.!
கண்களை மூடி பார்த்தாலும்,
கண்களை திறந்தாலும், கனவிலும்..
என் அன்னையே..
அவள் எப்போதும் நினைப்பது
என்னையே..!
Amma Kavithai in Tamil
தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்.!
தமிழில் அம்மா என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்
அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.
என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்.
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
ஓர் உன்னதமான தெய்வம் அம்மா.!
Amma Kavithai in Tamil
கல்லறையில் உறங்க சொன்னால்
கூட உறங்குவேன்.. அம்மா நீ
வந்து தாலாட்டு பாடினால்.
உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!
Amma Kavithai in Tamil
அம்மா ஒரு வரிக்கவிதை
அம்மா- அன்பின் இருப்பிடம்
அம்மா- பாசத்தின் அடையாளம்
அம்மா- அரவணைப்பின் நிழல்
அம்மா -கண்ணீரின் ஆறு
அம்மா-புன்னகையின் மலர்
அம்மா- வாழ்வின் அர்த்தம்
அம்மா - வெற்றிக்கு வித்திடும் நம்பிக்கை
அம்மா- சோகத்திற்கு தேற்றும் அணை
அம்மா- துன்பத்திற்கு துணை
அம்மா -நல்லது கெட்டதை அறியும் கண்கள்
அம்மா- தவறுகளை மன்னிக்கும் இதயம்
அம்மா- கெட்ட பழக்கங்களை தடுக்கும் வழிகாட்டி
அம்மா- நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்
அம்மா -வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் தூண்டுகோல்
அம்மா- கஷ்டங்களை சமாளிக்க ஊக்கமளிக்கும் வலிமை
அம்மா- வாழ்க்கையில் ஓர் அற்புதமான பரிசு
அம்மா- என்றும் மறக்க முடியாத நினைவு
அம்மா- என்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும் அன்பின் வடிவம்
அம்மா -என்றும் போற்றும் தாய்
அம்மா -என்றும் மறக்க முடியாத தெய்வம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu