/* */

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்பு போதைப் பொருளுடன் பெண் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளுடன் கென்யா நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்பு போதைப் பொருளுடன் பெண் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கோகைன் பவுடர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.90 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை கடத்தியதாக கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் பயணியை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.

உளவுத்துறையின் அடிப்படையில், டிசம்பர் 28, வியாழக்கிழமை நைரோபியில் இருந்து மும்பைக்கு கேக்யூ 204 விமானம் மூலம் வந்த கென்ய நாட்டவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கோகைன் போதைப் பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கென்ய நாட்டவரை கைது செய்தனர்.

இதில் சுமார் ரூ.14.90 கோடி மதிப்புள்ள 1490 கிராம் வெள்ளை பவுடர் கோகைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹேர் கண்டிஷனர் பாட்டில் மற்றும் பாடி வாஷ் பாட்டிலுக்குள் இரண்டு கருப்பு பாலித்தீன் பாக்கெட்டுகள் சாமர்த்தியமாக வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் உளவியல் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் விதிகளின் கீழ் பயணி கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Dec 2023 8:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு