உலகை உலுக்கும் நுாறு தலை அசுரர்களை உங்களுக்கு தெரியுமா?

உலகை உலுக்கும் நுாறு தலை  அசுரர்களை உங்களுக்கு தெரியுமா?

தேனி மாவட்ட பா.ஜ.க., வர்த்தக பிரிவு தலைவர் கே.கே.ஜெயராமன் நாடார்.

அமெரிக்க டீப் ஸ்டேட் என்பது நுாறு தலைகள் கொண்ட ஒரு அசுரன். அவர்களின் கொடூரத்தை எளிதில் சொல்லி விட முடியாது.

பா.ஜ.க., தேனி மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் கே.கே.ஜெயராமன் நாடார் கூறியதாவது:

அமெரிக்க டீப் ஸ்டேட்டின் விஷத்தலை எது? அவரின் மகன் யார் என்பது இந்திய உளவுத்துறைக்கு துல்லியமாகவே தெரியும். இப்போது இவர்களின் புதுத்தலை. சிஐஏ இவரையும் இவரின் பணபலத்தையும் நம்பி, ஆட்சி மாற்றம் செய்யும் ஆசாமிகள், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை, தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் மாற்ற பல தில்லாலங்கடிகளை செய்வார்கள். இப்போது ஆபரேஷன் ரிமூவ் மோதி சூடு பிடித்து விட்டது.

இந்தியாவின் அமெரிக்க அம்பாஸிடரையும் கூட வீட்டிற்கு அனுப்பும் பணிகள் தொடங்கி விட்டன. அங்கு கமலாஹாரீஸ் ஜெயிக்கும் தூரத்தில் இல்லை என்பது நிதர்சனம். ஓபாமா போன்றவர்களுக்கு மத்தியில் ஒரு சாதாரண பெண் கிடைத்தால், ஈரானை அடிக்கலாம். அமெரிக்க புது ராணுவ தளவாடங்களை ஏவி பார்க்கலாம்.

அமெரிக்க வரிப்பணம் இப்படி மிஸைலாக மாறும். இதில் இந்த டீப் ஸ்டேட் ஆசாமிகள் எண்ணை கிணறுகளை அள்ளுவார்கள் உக்ரைனின் வளப்பமான நிலங்களை பட்டா போட்டு விட்டார்கள். யூரோப் முழுக்க எதுவும் விளைவிக்காதீர்கள் பணம் தருகிறேன் என்று செயற்கையான பஞ்சத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில்..நிழலான ஆசாமிகளை அவர்களின் வீட்டுக்கே சென்று கவனிக்கிறார்கள் அமெரிக்க டீப் ஸ்டேட்கள். இந்தியாவில் பிரிவினை பேசும் பெரும் தலைகள் முதல், விவசாயி என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பெர்மனன்ட் ஃபுல் டைம் போராளிகள் வரை டீப் ஸ்டேட்களை சந்தித்து டூல் கிட்டுகின்றனர்.

பாஜகவை ஓரம்கட்டுங்கள் என்று நட்பு கட்சிகளுக்கே மிரட்டல்கள் விடுக்கும் நாடகம் தொடங்கி விட்டது. பாஜகவுக்கு ஆதரவு தரும் ரெட்டிகள், நாயுடுவை நெருக்கும் நாடகம் ஆரம்பிக்கும் போல் இருக்கிறது. கமலாவின் உதவி பிரஸிடன்ட் எக்ஸ்ட்ரீம் இடது. இவர்கள் அதிபராக ஜெயித்தால் உலகம் நாசமாகும் என்பது உறுதி.

அமெரிக்க டீஸ் ஸ்டேட்டின் தலைவர் மகன் சவுதிவாழ் பாகிஸ்தானியை திருமணம் செய்யப்போகிறார். மர்ம நபர்கள் இந்திய தேசத்தில் பல இடங்களில் ஏதாவது விளையாட்டை நடத்துவார்கள். அடிக்கடி ரயில் விபத்து, நேற்று ஜெய்புர் வந்தே பாரத் போகும் பாதையில் கான்க்ரீட் ஸ்லாப் வைத்த மர்ம நபர்கள் போன்ற செய்திகள் அதிகம் வரலாம்.

வாட்ஸப் என்க்ரிப்டட் என்று எதையும் எழுதலாம் என்று நினைத்தால் எல்லா கண்றாவிகளையும், எவனோ படித்துக் கொண்டிருக்கலாம். டெலக்ராம் ஸேஃப் என்று நினைக்கும் போது, அதன் தலைவரை ஃப்ரான்ஸில் கைது செய்து விட்டார்கள். அவரை பலதிலும் சிக்க வைத்து பல விஷயங்களை கறக்கும் வாய்ப்பு உண்டு.

சோஷியல் மீடியா புயல் 8-9 மாசம் முன்பு, ஜெர்மனியில் இருந்து அரைகுறையாக அள்ளி விடும் துருவ் ராத்திகள் உருவானார்கள். இதைப்பார்த்த இந்திய அரசு.. வெளிநாட்டு உறவுகளில் அடித்து விளையாடுவது போல்.. உள் நாட்டு விவகாரங்களிலும் நிறைய பாலிஸி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. வக்ஃபு முதல் அக்னிவீர் வரை. அக்னி வீர் ஒரு டாக்டிகல் மூவ். இதை பல மூதேவிகள் எதிர்ப்பதில்கூட இந்த DS (டீப் ஸ்டேட்) பங்கு இருக்கிறது.

இந்தியாவின் பிளவுக்கோடுகளை இவர்கள் மிகச்சரியாக, ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கு உபயோகிப்பார்கள். பங்களாதேஷ் போன்று இங்கு ஒரு சிவில் வார் வருமா என்றால் தெரியாது. ஆனால் இந்தியாவில் பல இடங்களில் விஷச்செடியை நட்டு வைத்து விட்டது.

நாம்.. டெபாஸிட் வட்டி, இன்டக்ஸேஷன், வரி, ஜிஎஸ்டி, என்று கடுப்பில்.. சரியாக ஓட்டு போடாமல்.. ஷேத்ராடனம் போகும் நேரத்தில்.. நம் வீடு, தேசம் அனைத்தையும் மொத்தமாய் இழந்திடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. கவனமாக இருங்கள் இந்தியர்களே. ஒரு நல்ல ஆட்சியை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறான். மோடி தலைமையில், ஒரு பெரிய டீம் நம் நாட்டை காப்பாற்ற போராடிக் கொண்டு உள்ளது.

நாம் அவர்களுக்கு உதவினால் மட்டுமே வாழ முடியும். நாம் உதவாவிட்டால், எத்தனை கோடி சொத்துக்கள் வைத்திருந்தாலும், எந்த பலனும் இல்லை. நாடு பாதுகாப்பாக இல்லாவிட்டால், எல்லா சொத்துக்களும் வீணாகப் போய் விடும். நல்ல வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளோம்.

சில கைக்கூலிகளின் பேச்சைக் கேட்டு மனம் மாறி, நாட்டை கெடுத்து விடாதீர்கள். இதனால் வீணாகிப்போவது உங்கள் குழந்தைகளின், பேரக்குழந்தைகளின் எதிர்காலம் என்பதை எண்ணிப்பாருங்கள். இறைவன் கொடுத்த இந்த வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உள்நாட்டிலேயே அகதியாக மாறி, சோத்துக்கே கையேந்த வைத்து விடுவார்கள். இந்தியர்கள் அத்தனை பேரும் சுதாரிக்க வேண்டிய நேரம் இது. நான் சொல்வதை சொல்லி விட்டேன். கேட்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story