தொழிலாளிகளின் முதலாளி ரத்தன் டாடாவின் மனிதநேயம்

தொழிலாளிகளின் முதலாளி ரத்தன் டாடாவின் மனிதநேயம்
தொழிலதிபர் ஒருவரின் மறைவுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் கண்ணீர் வடிப்பது இதுதான் முதன்முறை உள்ளது.

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தன் டாடா இயற்கை எய்தியிருக்கிறார். அவருக்கு வயது 86. தொழிலாளிகளின் முதலாளி என தொழில்துறைகளில் சிலரை குறிப்பிடுவார்கள். அதில் முதல் முக்கியமான இடத்தை ரத்தன் டாடாவுக்கு வழங்கி அழகு பார்த்தனர் தொழில்துறை ஆளுமைகள். தொழிலாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை இவர் டாடா குழுமத்தின் தலைமை பெறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு செய்திருக்கிறார். இந்த மனிதநேயவாதி தற்போது மாய்ந்திருக்கிறார்.

மும்பையில் 1937-ம் ஆண்டு பிறந்த இவர் 10-ம் வயதிலேயே குடும்பத்தில் பல கடினமான சூழல்களை சந்தித்திருக்கிறார். ஆம், இவருக்கு 10 வயது இருக்கும்போதே இவரின் தந்தையாரும் தாயாரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பிறகு, பாட்டியின் அரவணைப்பில் தான் ரத்தன் டாடா வளர்ந்திருக்கிறார்.

கார்னல் பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பை முடித்ததும் இவருக்கு ஐ.பி.எம் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ரத்தன் டாடாவின் கவனம் தன்னுடைய குடும்ப நிறுவனத்தில் தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு கல்லூரி படிப்பையெல்லாம் முடித்து விட்டு தன்னுடைய குடும்ப நிறுவனமான டாடாவிலேயே தனது பணியைத் தொடங்கினார் .

`Born in silver spoon' என்ற வாக்கியம் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். அதாவாது பெரிய பணக்காரர்களின் குடும்பத்தில் பிறந்து அந்த ஆடம்பர வாழ்க்கையிலேயே வாழ்பவர்களை இந்த வாக்கியத்தைக் கொண்டு குறிப்பிடுவார்கள். ரத்தன் டாடா நினைத்திருந்தால் அவரும் இப்படியான சூழலிலேயே தனது பணியை தொடங்கியிருக்கலாம். ஆனால், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வெடிப்பு உலை மற்றும் சுண்ணாம்புக்கல் கலவையை மேற்பார்வையிடும் வேலையை தான் முதலில் முழுமையாக கவனித்து வந்திருக்கிறார். இந்த பணியின் மூலமாக 1962-ம் ஆண்டு டாடா குழுமத்திற்குள் வந்தார். ஜே.ஆர்.டி டாடாவுக்கு பிறகு 1991-ம் ஆண்டு டாடா குழுமத்தின் சேர்மன் பதவியில் அமர்ந்தார்.

1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் சேர்மனாக இருந்திருக்கிறார். இவர் இந்த பதவியில் இருக்கும் போது டாடா குழுமத்தின் லாபம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. கிட்டதட்ட ரத்தன் டாடா தலைமையில் குழுமத்தின் வருவாய் 40 மடங்கு உயர்ந்திருக்கிறதாம்.

`டெட்லி - டாடா டீ, டாடா மோட்டார்ஸ் - லேண்ட் ரோவர் ஜாகுவார், டாடா ஸ்டீல் - கோரஸ் ' போன்ற முக்கியமான இணைப்பு நிறுவனங்கள் இவர் தலைமையில் இருக்கும் போது தான் உருவாகின. நடுத்தர குடும்பங்களுகாக 1 லட்ச ரூபாய்க்குள் கார் டிசைன் செய்ய வேண்டும் என இவர் கனவுடன் திட்டமிட்டிருக்கிறார். திட்டமிட்டப்படி ரத்தன் டாடாவின் கனவு `டாடா நானோ' கார் மூலம் நனவாகியிருக்கிறது. இப்படி பல விஷயங்களை இவர் டாடா குழுமத்தின் தலைமையில் இருக்கும் போது சாத்தியப்படுத்தினார்.

மக்களின் நலனுக்காக பல லட்ச ரூபாயை நன்கொடையாக அறக்கட்டளைகளுக்கு வழங்கியிருக்கிறார். கிட்டதட்ட `டாடா சன்ஸ்' குழுமத்தின் வருவாயிலிருந்து 66 சதவிகிதத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என கிராமப்புற வளர்ச்சிக்காகவும் சில முன்னெடுப்புகளை ரத்தன் டாடா தலைமையில் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர் படித்த கார்னெல் பல்கலைகழகத்துக்கு இந்தியாவிலிருந்து பலரும் படிப்பதற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பல்கலைகழகத்துக்கு மொத்த தொகையை இவர் வழங்கியிருக்கிறார்.

அனைவருக்கும் சமமாக கல்வி கிடைக்க வேண்டும் என்ற கனவுடன் கல்விக்காக பல விஷயங்களையும் செய்திருக்கிறார் ரத்தன் டாடா. தொழிலாளர்கள் நலனுக்காக இவர் செய்த விஷயங்களை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியந்து போனது. அந்த அளவுக்கு இவர் தொழிலாளர் நலனின் அக்கரையோடு இருந்தார். இவரை போல் நல்ல முதலாளி கிடைக்க இன்னும் பல நுாறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என டாடா குழும தொழிலாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

Tags

Next Story
Similar Posts
யுரேனஸ்: சூரிய குடும்பத்தில் மிகவும் குளிரான கிரகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ரத்தன் டாடாவை கவர்ந்த இளம் நண்பர் சாந்தனு : கண்ணீர் அஞ்சலி..!
ரத்தன் டாடா ஏன் உலகப் பணக்காரர்  பட்டியலில் இல்லை?
தொழிலாளிகளின் முதலாளி ரத்தன் டாடாவின் மனிதநேயம்
நோபல் பரிசு அறிவிப்புகளில் கவனத்தை ஈர்த்த செயற்கை நுண்ணறிவு
கேரள பா.ஜ.க.,வில்  இணைந்த ஐ.பி.எஸ்...!
நாஸ்டர்டாமின் தீர்க்க தரிசனங்கள் :  இஸ்ரேல் மூன்றாம் உலகப்போர்..!
செயற்கை நுண்ணறிவு மூலம்  புரத புதிருக்கான  தீர்வு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றது
நாஸடர்டாமின் கணிப்பு :  குருவாக உருமாறும் பாரதம்..!
கடுமையான சூரியப் புயல் இந்த வாரம் பூமியைத் தாக்கலாம்!
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரால்  ஹரியானாவை வென்ற பாஜக..!
ரத்தன் டாடாவின் புகழ்பெற்ற வாழ்க்கை: ஒரு பார்வை
இந்தியாவின் மிகப்பெரிய டாடா நிறுவன தொழில் அதிபர் ரத்தன்  டாடா காலமானார்..!