/* */

நிலவில் விழிக்குமா விண்கலன்கள் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் உலகம்

நிலவில் இந்திய விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீண்டும் விழிக்குமா என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்ப்பில் உள்ளது.

HIGHLIGHTS

நிலவில் விழிக்குமா விண்கலன்கள்  ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் உலகம்
X

பைல் படம்

நிலவின் தென்பகுதியில், உறக்க நிலையில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீது சூரிய ஒளிபடத் தொடங்கியுள்ளது. இதனால் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. நிலவு குறித்த ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியது. நிலவு குறித்த பல்வேறு ஆராய்ச்சி தகவல்களை விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் அனுப்பின. இந்தப் பணிகள் அனைத்தும், நிலவின் பகல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் நிலவில் இரவு நேரம் தொடங்கியதால், லேண்டரும், ரோவரும் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டன. தற்போது நிலவின் தென் பகுதியில் இரவு முடிந்த நிலையில், ரோவர் மற்றும் லேண்டர் மீது சூரிய ஒளிபடத் தொடங்கியுள்ளது.

மேலும் 14 நாட்கள் சூரிய ஒளி இருக்கும் என்பதால், சூரிய ஆற்றலை பெற்று ரோவர் மீண்டும் செயல்படக் கூடும் என நம்பப்படுகிறது.

விக்ரம் லேண்டர், ரோவர் ஏற்கனவே ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துள்ள போதிலும், மீண்டும் செயல்படத் தொடங்கினால், அது இஸ்ரோவுக்கு கூடுதல் ஆய்வுத் தகவல்களை அளிக்க உதவும். லேண்டர் மீண்டும் செயல்படத் தொடங்குமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

நிலவின் தென்துருவ பகுதியில் இரவு நேரத்தில் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், அதை தாங்கும் அளவுக்கு சந்திரயான்-3 விண்கலன்கள் கட்டமைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் விண்கலன்கள் மீண்டும் விழித்தெழுமா என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

Updated On: 23 Sep 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  2. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  3. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  4. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  5. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  7. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  8. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  9. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  10. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்