/* */

விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிமதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

இந்த அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியா என்ற நோக்கில் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார்

HIGHLIGHTS

விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிமதிப்புள்ள  திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்
X

பிரதமர் நரேந்திரமோடி(பைல் படம்) 

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

விப்ளவ் வீருடு அல்லூரு சீதாராம் ராஜுவின் 125 -ஆவது ஆண்டு விழாவின் போது ஆந்திரப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை தான் பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: விசாகப்பட்டினம் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இது வர்த்தகம் மற்றும் வணிகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவிற்கும் ரோம் நகருக்கும் வர்த்தகப் பாதையின் ஒரு பகுதியாக இருந்ததையும் பண்டைய இந்தியாவில் விசாகப்பட்டினம் முக்கிய துறைமுகமாக இருந்தது. இன்று ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும் அர்ப்பணித்ததும் விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நம்பிக்கைகளை, விருப்பங்களை அடைவதற்கும், அடிப்படைக் கட்டமைப்பில் புதிய பரிமாணங்கள், வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், தற்சார்பு இந்தியா ஆகியவற்றுக்கும் ஒரு வழியாக இருக்கும். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு , ஆந்திரப் பிரதேசத்திற்கான அவரது அன்பும் அர்ப்பணிப்பும் எப்போதும் இணையற்றது .

கல்வி அல்லது தொழில்முனைதல், தொழில்நுட்பம் அல்லது மருத்துவப் பணி என ஒவ்வொரு துறையிலும் முக்கியமான பெயரை ஆந்திரப் பிரதேச மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அடிக்கல் நாட்டப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் மகிழ்ச்சியளிக்கிறது.. இது மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் .

இந்த 'அமிர்த காலத்தில்', 'வளர்ந்த இந்தியா' என்ற நோக்கத்துடன் நாடு வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது" .. வளர்ச்சிக்கான பாதை பல பரிமாணங்களைக் கொண்டது. இது சாமானிய மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துகிறது. மேம்பட்ட உள்கட்டமைப்புக்கான வரைபடத்தை முன்வைப்பது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசின் தொலைநோக்குப் பார்வை, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முந்தைய அரசுகளின் தனிமைப்படுத்தப்பட்ட அணுகுமுறை, பொருள்கள் கொண்டு செல்லும் செலவுகளை உயர்த்தியதோடு விநியோகத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தியது.

வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பார்வையில் கவனம் செலுத்தும் அதே வேளையில், விநியோகத் தொடர் மற்றும் பொருள்கள் போக்குவரத்து பலவகை இணைப்பைச் சார்ந்திருப்பதால், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறையை அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இன்றைய திட்டங்களிலிருந்து வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பார்வைக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. உத்தேச பொருளாதார வழித்தட திட்டத்தில் 6 வழிச் சாலைகள், துறைமுக இணைப்புக்கான தனிச் சாலை, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல் மற்றும் மாநிலத்தின் நவீன மீன்பிடி துறைமுகம். கட்டுமானம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தேசியப் பெரும் திட்டமான பிரதமரின் விரைவு சக்திக்கு வளர்ச்சியின் இந்த ஒருங்கிணைந்த பார்வை இருப்பது பாராட்டுக்குரியது. இது உள்கட்டமைப்பின் கட்டுமான வேகத்தை விரைவுபடுத்தியது மட்டுமின்றி திட்டங்களின் செலவையும் குறைத்துள்ளது. பல மாதிரியிலான போக்குவரத்து அமைப்பு ஒவ்வொரு நகரத்தின் எதிர்காலமாகும். விசாகப்பட்டினம் இந்த திசையில் ஒரு படி முன்னெடுத்துள்ளது. ஆந்திரப் பிரதேசமும் அதன் கடலோரப் பகுதிகளும் இந்த வளர்ச்சிப் போட்டியில் புதிய வேகத்துடனும் ஆற்றலுடனும் முன்னேறும்.

தெளிவான இலக்குகளின் முக்கியம். ஆந்திரப் பிரதேசத்தில் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ஆழ் கடல் ஆற்றல் பிரித்தெடுக்கப்படுகிறது. . நீலப் பொருளாதாரத்தில் அரசின் கவனத்தில் கொண்டுள்ளது. நீல பொருளாதாரம் முதல் முறையாக ஒரு பெரிய முன்னுரிமையாக மாறியுள்ளது. மீனவர்களுக்கான விவசாயக் கடன் அட்டை, இன்று தொடங்கப்பட்ட விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்குதல் போன்றவை குறிப்பிடத்தக்கது.

பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின் செழிப்புக்கான ஆதாரமாகக் கடல் உள்ளது. நமது கடற்கரைகள் இந்த செழுமைக்கான நுழை வாயிலாக செயல்பட்டது. நாட்டில் துறைமுகத்தை முதன்மைப்படுத்தி மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்றைக்குப் பிறகு மேலும் விரிவாக்கம் பெறுவது உறுதி. .21ஆம் நூற்றாண்டின் இந்தியா, வளர்ச்சியின் முழுமையான சிந்தனையை செயலுக்குக் கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி இயக்கத்தில் ஆந்திரப் பிரதேசம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பிரதமர் நரேந்திரமோடி.

இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் ரெட்டி, ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திட்டத்தின் பலன்கள்: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை சுமார் 450 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிலையம் நாளொன்றுக்கு 75,000 பயணிகளுக்கு சேவை செய்யும் மற்றும் நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்.விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்கவும் மேம்படுத்துவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 150 கோடி. மீன்பிடித் துறைமுகம், மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட பின், அதன் கையாளும் திறன் நாளொன்றுக்கு 150 டன்களில் இருந்து சுமார் 300 டன்களாக இரட்டிப்பாகும்.

Updated On: 12 Nov 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?