/* */

5 திருமணம் செய்து, 6-வதில் சிக்கிய போலி சாமியார் கைது : இது உத்தரபிரதேசத்தில்

5 திருமணம் செய்து, 6-வது திருமணம் செய்வதற்குள் போலீசாரிடம் போலி சாமியார் சிக்கி, கைதானார்.

HIGHLIGHTS

5 திருமணம் செய்து, 6-வதில் சிக்கிய போலி சாமியார் கைது : இது உத்தரபிரதேசத்தில்
X

போலி சாமியார் கைது (மாதிரி படம்)

உத்தர பிரதேசத்தில் ஒரு போலி கில்லாடி சாமியார் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார் ஒருவர் மெயின்புரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை 2005ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொள்ள விண்ணப்பித்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதல் மனைவியை விவகாரத்து பெரும் முன்னரே 2010ம் ஆண்டு பரேலியில் இருந்து இன்னொரு பெண்ணை அனுஜ் சேட்டன் திருமணம் செய்தார். விதி விட்டதா..? அந்த பெண்ணுக்கும் போலி சாமியாரோடு, வாழ பிடிக்காமல் விவாகரத்து வரை சென்றது.

சாமியார் சும்மா இருப்பாரா 2014ம் வருஷத்துல மீண்டும் அனுஜ் திருமணம் செய்தார். அந்த மூணாவது மனைவியுடனும் வாழவில்லை. 3வது மனைவியின் உறவு பெண்ணுடன் மற்றும் ஒரு திருமணம். இத்தோடு போலி சாமியார் 4 திருமணம் செய்துவிட்டார். 4வது மனைவிக்கு போலி சாமியாரின் முந்தைய திருமணம் குறித்து தெரிய வந்ததால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

போலி சாமியாரும் சளைக்கவில்லை. 2019ம் ஆண்டில் மீண்டும் 5வது திருமணம் செய்தார். அந்த பெண்ணை போலி சாமியார் அனுஜ் துன்புறுத்தி கொடுமை செய்துள்ளார். அந்த பெண் மட்டுமே துணிந்து போலீசில் புகார் அளித்தார்.

இது தெரிய வந்ததும் அவரது மற்ற மனைவிகளுக்கும் போலி சாமியாரின் லீலைகள் தெரியவந்தது. ஒரு முதல் மனைவியிடம் இருந்தே இன்னும் விவகாரத்து பெறாத நிலையில் 5 திருமணம் செய்து ஒவ்வொருவரையும் ஏமாற்றியுள்ளார். இவரிடம் பாதிக்கப்பட்ட எல்லா மனைவிகளும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், மீண்டும் 6வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தது தெரிய வந்ததால் போலீசார் கைது செய்தனர். இன்னும் பல பெண்களை வலையில் வீழ்த்த திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

Updated On: 20 Jun 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்