/* */

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம்: குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பெருமிதம்

இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு இயற்கையான வாயிலாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

HIGHLIGHTS

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம்:  குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பெருமிதம்
X

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு இயற்கையான வாயிலாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

விடுதலைப்பெருவிழாவின் ஒரு பகுதியாக அசாம் தலைநகர் குவஹாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு திருவிழாவின் நிகழ்ச்சியில் அவர் நேற்று உரையாற்றினார். பல்வேறு அண்டை நாடுகளையும், 5300க்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவிலான சர்வதேச எல்லைகளையும், கொண்டதாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது மகத்துவமானது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்காக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மக்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். சுதந்திரப் போராட்டம் குறித்து எடுத்துரைப்பதால் குடிமக்கள் தியாகிகளின் பங்களிப்பு குறித்து நினைவுகூர முடியும். அத்துடன் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், அவர்களுடைய தியாகம் இல்லாமல் பெரிய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றிருக்காது என்றும் கூறினார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை அறிவதன் மூலம் நமக்கு உத்வேகம் ஏற்பட்டு எதிர்காலத்தில் நாட்டை சிறப்பாக கட்டமைக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

Updated On: 5 May 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!