/* */

மகாராஷ்டிராவில் 7 தேசியநெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் நிதின்கட்கரி

மகாராஷ்டிராவில் 7 தேசியநெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் நிதின்கட்கரி
X

மகாராஷ்டிராவின் முக்கிய தொழில் மற்றும் கல்வி மையங்களில் ஒன்றான அவுரங்காபாத் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான மற்றுமொரு நடவடிக்கையாக ரூ 5569 கோடி மதிப்பிலான 7 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தண்ணீர் தட்டுப்பாடு மிக்க அவுரங்காபாத் மாவட்டத்தின் பிரச்சினையை போக்குவதற்காக சாலை திட்டங்கள் மூலம் முயற்சி எடுக்கப்படுவதாக அவர் கூறினார். சாலைகள் கட்டமைக்கப்படும் போது நிறைய குளங்களும் கட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குளங்களை வெட்டும்போது கிடைக்கும் மண் மற்றும் கற்களைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர், இதனால் இரட்டை பலன்கள் கிடைப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய கட்கரி, அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நிலத்தடி நீர் அளவு அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு குறைந்து வருவதாக கூறினார். மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள குளங்களின் காரணமாக இதுவரையில் 14 லட்சம் கியூபிக் மீட்டர்கள் எனும் அளவுக்கு நீர் திறன் அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Updated On: 24 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு