/* */

கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது-எடியூரப்பா

கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது-எடியூரப்பா
X

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தனது இல்லத்தில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோயை கட்டுப்படுத்துவதற்கான முறையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும். பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும். பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. பெங்களூருவில் நாள் ஒன்றுக்கு 1377 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் 16921 பேர் கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரில் மட்டும் 60,000 பேருக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோரமங்களா உள்விளையாட்டு அரங்கத்தில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 5-ந் தேதி முதல் அந்த மையம் செயல்பட தொடங்கும். தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் ஒதுக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரு நாளைக்கு 40,000 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கர்நாடகத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. இங்கு ஒரு நாளைக்கு 3000 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெங்களூருவில் ஒருநாளைக்கு 2000 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாது. மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றார்

Updated On: 30 March 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  4. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  5. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  8. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  9. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!