/* */

’’நல்ல விலையா.. இல்ல தற்கொலையா..’’ வெங்காய விவசாயிகள் குமுறல்

வெங்காயத்திற்கு நியாயமான விலை கோரி தற்கொலை அனுமதிக்க மத்திய அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,

HIGHLIGHTS

’’நல்ல விலையா.. இல்ல தற்கொலையா..’’ வெங்காய விவசாயிகள் குமுறல்
X

நாசிக்கில் வெங்காயத்துடன் விவசாயிகள்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக குறைந்து வருவதால் தாங்கள் சிரமப்பட்டு வருவதாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெங்காயத்தின் விலை குறைந்ததால் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் புகார் கூறியதுடன், தங்கள் விளைபொருட்களை விற்று வெங்காயம் பயிரிடப் பயன்படுத்தப்படும் பணத்தை திரும்பப் பெறுவது கூட கடினமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "மண்டியில் ஒரு கிலோ வெங்காயம் 300-400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நான் ஏற்கனவே ரூ. 3.5 லட்சம் செலவழித்துவிட்டேன். என்னால் இப்போது ரூ. 1 லட்சம் கூட ஈட்ட முடியாத சூழலில் இருந்து வருகிறேன். மேலம் பணப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. மோடியின் அரசு விவசாயிகள் பிரச்சனைகளை கவனிக்க வேண்டும் .மோடிக்கு எங்களை பற்றி கவலை இல்லை.

எங்கள் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்க நாங்கள் தகுதியானவர்கள். இல்லையெனில் அரசாங்கம் எங்களை தற்கொலைக்கு அனுமதிக்க வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு 10 ரூபாய் சாக்லேட் வாங்குவதைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை" என்று அவர் கூறினார்.

பெண் விவசாயி ஒருவர் கூறுகையில், "ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் உள்ளது. தங்கத்தை அடமானம் வைத்து வெங்காயம் பயிரிட்டுள்ளேன். எனது மொத்த செலவு ரூ. 50,000, சந்தைக்கு சென்றபோது ரூ.20,000 கூட கிடைக்கவில்லை. இதற்கு மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும். மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும். எங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை எங்களால் செலுத்த முடியவில்லை. வெங்காயம் பயிரிட கடினமாக உழைக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை, எங்கள் வாழ்க்கையை முடிக்க அனுமதி வேண்டும்" என்று அந்த பெண் வேதனையுடன் கூறினார்.

மற்றொரு விவசாயி கூறுகையில், "மூன்று, நான்கு மாதங்களுக்கு முன் வெங்காயம் பயிரிடத் துவங்கினோம், தற்போது சந்தைக்கு செல்லும் போது, 300 - 400 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. விவசாயிகள், நிலத்திற்கு, 50,000 முதல், 60,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். ஒரு டிராக்டரில் ரூ. 10,000 முதல் 11,000 கிடைக்கிறது. எந்த லாபமும் இல்லை, நஷ்டத்தை மட்டுமே சந்திக்கிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பெரிய இயக்கத்தை கூட்டுவோம்" என்று விவசாயி ஆவேசத்துடன் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிர விவசாயி ஒருவர் 512 கிலோ வெங்காயத்துக்கு 2 ரூபாய்க்கான காசோலையே கிடைத்த பரிதாபம் நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Feb 2023 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  2. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  3. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  5. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  6. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  10. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்