/* */

இழிவுபடுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

'சமூக ஊடகங்களை பயன்படுத்தி, நீதித் துறை அதிகாரிகளை யாரும் இழிவுபடுத்தக் கூடாது' என, உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

இழிவுபடுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
X

பைல் படம்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ரகுவன்ஷி என்பவர், கோயில் தொடர்பான விவகாரத்தில், மாவட்ட நீதிபதி குறித்து, சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்'பில், ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த விவகாரத்தில், தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரித்த ம.பி., உயர் நீதிமன்றம், கிருஷ்ணகுமார் ரகுவன்ஷிக்கு, 10 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, கிருஷ்ண குமார் ரகுவன்ஷி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: உச்ச நீதிமன்றத்திற்கு சட்டப்படி முடிவு எடுக்க வந்துள்ளோம்; கருணை காட்ட வரவில்லை. நீதிபதி குறித்து அவதுாறு தெரிவிப்பதற்கு முன், மனுதாரர் யோசித்திருக்க வேண்டும். நீதிபதியின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பை பற்றி சிந்தியுங்கள். சாதகமான உத்தரவு கிடைக்காததால், நீதித் துறையை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. இந்த வழக்கு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Updated On: 31 May 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  3. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  8. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  10. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி