/* */

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு : ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனா 2வது  அலையில்  கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு : ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு
X

கர்ப்பிணிப்பெண் (மாதிரி படம்)

நமதும் நாட்டில் கொரோனா 2வது அலை பரவலில் கர்ப்பிணிப்பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தொற்று பரவலில் கர்ப்பிணிகளுக்கு இவ்வளவு பாதிப்பு வரவில்லை. ஆனால், 2வது அலையில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2வது அலையில் இந்தியாவில் இப்போது வரை 387 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 111 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சதவீத அடிப்படையில் 28.7 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், முதல் அலையில் 1,143 கர்ப்பிணிகள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 162 பெண்களுக்கு (14.2 சதவீதம் பேருக்கு) மட்டுமே தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது. இதுவே முதல் அலையில் 0.7 சதவீதமாக (8 பேர் உயிரிழப்பு) இருந்த கர்ப்பிணி பெண்களின் இறப்பு விகிதம், 2வது அலையில் 5.7 சதவீதமாக (22 பேர் உயிரிழப்பு) அதிகரித்துள்ளது. இவ்வாறு ஐ.சி.எம்.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Jun 2021 1:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  4. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...