/* */

வாட்ஸ்அப் புதுப்பிக்கப்பட்டதனியுரிமைக் கொள்கை -திரும்ப பெற நோட்டீஸ்.

ஏழு நாட்களுக்குள் உரிய பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை.

HIGHLIGHTS

வாட்ஸ்அப் புதுப்பிக்கப்பட்டதனியுரிமைக் கொள்கை -திரும்ப பெற நோட்டீஸ்.
X
வாட்ஸ் அப் (கோப்புபடம்)

வாட்ஸ் ஆப்-இல் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை (privacy policy) திரும்ப பெறக்கோரி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

#இது பழைய வரலாறு தான் இது நீங்கள் தெரிந்து கொள்வதற்காக..

வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் (Terms of Service) மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கையில் (privacy policy) மாற்றங்களை கடந்த ஜனவரி மாதம் கொண்டுவந்தது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பவும் தொடங்கியது. பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் இந்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளதாக நினைத்தோம்.

அதே போல வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் (Terms of Service), தனியுரிமைக் கொள்கையையும் (privacy policy) புதுப்பித்து வருவதாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டது. இந்த செய்தி Android மற்றும் iOS பயனர்களுக்கு அனுப்பப்பட்டது. மாற்றங்களைப் பொறுத்தவரை, வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பயன்பாடு பயனர் தரவை எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் கையாளுகிறது என்பதற்கான கூடுதல் தகவல்களை வழங்குகிறது.

இந்த ஆப் மூலம் துல்லியமான தரவு சேகரிப்பு குறித்த விவரங்களை வழங்க பரிவர்த்தனைகள் (Transactions) மற்றும் பேமெண்ட் (Payments) தரவு மற்றும் இருப்பிட தகவல் உள்ளிட்ட புதிய பிரிவுகளும் உள்ளன. வாட்ஸ்அப் தனது செய்தியிடல் ஆப் மூலம் நடைபெறும் வணிக தொடர்புகள் (Business Interactions) குறித்த குறிப்பிட்ட தகவல்களையும் சேர்த்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட் கடந்த பிப்ரவரி மாதம் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்த விதிமுறைகளையும் மாற்றங்களையும் ஏற்க (Accept) வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதன் பொருள் ஒரு பயனர் புதிய மாற்றங்களை ஏற்கவில்லை என்றால், அவர்கள் பயன்பாட்டிற்கான அணுகலை(தொடர்பு) இழக்க நேரிடும். இந்த புதிய தனியுரிமை விதிகளின் கட்டாய தன்மையை ஆரம்பத்தில் டிராக்கர் WABetaInfo மூலம் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் இரண்டிலும் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்னவென்றால் பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் வாட்ஸ்அப் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்பதை குறிக்கிறது.

இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்ததாவது பிற பேஸ்புக் நிறுவனங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் உங்கள் கணக்கு பதிவு தகவல் (அதாவது தொலைபேசி எண் போன்றவை), பரிவர்த்தனை தரவு, சேவை தொடர்பான தகவல்கள், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது மற்றவர்களுடன் (வணிகங்கள் உட்பட) நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள், மொபைல் சாதனத் தகவல், உங்கள் IP அட்ரஸ், மற்றும் 'நாங்கள் சேகரிக்கும் தகவல்' (Information We Collect) என்ற தலைப்பில் தனியுரிமைக் கொள்கை பிரிவில் அடையாளம் காணப்பட்ட அல்லது உங்களுக்கு அறிவிக்கப்பட்டபின் அல்லது உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் பெறப்பட்ட பிற தகவல்கலும் உள்ளடங்கும் என தெரிவித்தது.

அந்தஅப்டேட்டுக்கு முன்னர், ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு தங்கள் வாட்ஸ்அப் கணக்குத் தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதைத் தேர்வு செய்யும் விருப்பமும் வழங்கப்பட்டது.

இருப்பினும், இந்த முறை அப்படி இருக்காது எனவும் அறிந்தோம். இதேபோல, வாட்ஸ்அப் தனது வலைத்தளத்தையும் புதுப்பித்தது. இது சரியாக என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது பற்றிய விரிவான தகவல்களை மக்களுக்கு வழங்கியது. நிறுவனம் செய்த பல மாற்றங்களில் ஒன்று, அது சேகரிக்கும் தகவலுடன் தொடர்புடையது.

ஒரு பயனர் ஏதேனும் ஒரு அரட்டையில் மீடியா பைலை அனுப்பும்போது, கூடுதல் முன்னோக்குகளை திறம்பட வழங்குவதற்கு அந்த ஊடகத்தை தற்காலிகமாக மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் எங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கிறோம் என நிறுவனம் தெரிவித்தது..

வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதற்கு வாட்ஸ்அப் பயனர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து வாட்ஸ்அப் பயனர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

இதனையடுத்து வாட்ஸ்அப், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்த மாற்றத்தை அமல்படுத்துவதை மே 15ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது. இதன் தொடர்ச்சியாக மாற்றப்பட்ட வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகள் கடந்த 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.'

இது இன்றைய வரலாறு தான் இதுவும் தெரிந்து கொள்வதற்காகத்தான்..

இன்று வாட்ஸ் ஆப்-இல் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை (privacy policy) திரும்ப பெறக்கோரியும் ஏழு நாட்களுக்குள் உரிய பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதாவது வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது எல்வேருக்கும் தெரியும் இதற்கு வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து வாட்ஸ்அப் பயன்கடுத்துவோர் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு ஆப்களுக்கு மாறத் தொடங்கினர். இதனையடுத்து வாட்ஸ்அப், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்த மாற்றத்தை அமல்படுத்துவதை மே 15 ம் தேதிக்குத் தள்ளி வைத்து மாற்றப்பட்ட வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகள் கடந்த 15 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.'

இந்நிலையில், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்களைத் திரும்பப் பெறுமாறு ஏற்கனவே இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்பை வலியுறுத்தியிருந்த நிலையில், மீண்டும் அந்த அமைச்சகம் வாட்ஸ்அப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இதுகுறித்து அந்த தகவல் அறிந்த வட்டாரங்கள், கூறும்போது "வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கை எவ்வாறு இந்திய அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளை மீறுகிறது என்பதை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கொண்டு சென்றுள்ளதாகவும் தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்குப் பதிலளிக்க அந்த நிறுவனத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து திருப்தியான பதில் கிடைக்காவிட்டால், சட்டத்திற்கு உட்பட்டு வாட்ஸ்அப் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் கூறுகின்றனர்...

Updated On: 19 May 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்