/* */

மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தல்

மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும்   இந்தியா வலியுறுத்தல்
X

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தி உள்ளது.

இந்திய உயர்மட்ட குழு, இலங்கை உயர்மட்ட குழு கூட்டு பணிக்குழுவின் 4 ஆவது கூட்டம் காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தொடர்பான பிரச்சனைகள், ரோந்துப் பணியில் இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.இலங்கை கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 40 மீனவர்களையும், அவர்களது 6 படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்யுமாறும், அவர்களை விடுவிக்கும் வரை தேவையான உதவிகளை வழங்கிடுமாறு இலங்கைக்கு இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது .

Updated On: 31 Dec 2020 11:46 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?