இந்த விஷயங்கள்ல மட்டும் கவனமா இருங்க..! சேற்றுப்புண் வர்றதை தடுக்கலாம்..!

இந்த விஷயங்கள்ல மட்டும் கவனமா இருங்க..!  சேற்றுப்புண் வர்றதை தடுக்கலாம்..!
X
சேற்றுப்புண் வராமல் தடுக்க சில வழிகளை இப்பதிவில் காணலாம்.

சேற்றுப்புண்:

சேற்றுப்புண் ( Setru pun)என்பது சேற்றுக்குள் இருக்கும் மண், கழிவு அல்லது குப்பைகளில் உள்ள கிருமிகள் மூலம் ஏற்படும் புண் ஆகும்.சேற்றில் உள்ள பாக்டீரியா, பராசைட் (Parasites), மற்றும் தொற்று காரணிகள் சருமத்தில் உள்ள வெட்டு, கீறல், அல்லது மைக்ரோ புண்ணில் புகுந்தால் அது சேற்றுப்புண் ஆகி, பின்னர் தொற்று ஏற்படலாம்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதிக்கும் . அதனால் நடக்க முடியாது கால் எரிச்சலாக இருக்கும்.ஆகையால் இந்த வழியை பின்பற்றுங்கள்.

சேற்றுப்புண் தடுக்க சில வழிகள் | Setru pun treatment

1.அடிப்படை சுத்தம்

சேற்றுப்படிந்த கால், கைகள் அல்லது பாதம் போன்ற பகுதிகளை சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி, கிருமிநாசினி பயன்படுத்தவும்.சேற்றில் உள்ள பாக்டீரியாவால் டெடனஸ் (Tetanus) போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

2.பாதுகாப்பான காலணிகள்

சேற்றில் நடக்கும்போது நல்ல ரப்பர் அல்லது ஷூஸ் அணியவும்.கால்களில் சிறு வெட்டு இருந்தால்கூட சேற்றில் கிருமி புகுந்து தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

3.சிறு புண்ணை புறக்கணிக்காதீர்கள்

ஏதேனும் குறைந்த அளவிலான புண் இருந்தால் கூட உடனடியாக சுத்தம் செய்து, கிருமி நாசினி க்ரீம் தடவி கவனிக்க வேண்டும்.புண்ணை கட்டாயம் மூடுவதற்கு பாண்டேஜ் (Bandage) பயன்படுத்தவும்.

4.வயிற்றில் பாதிப்பு | Immune System

சரியான உணவுகள் மற்றும் தண்ணீர் பருகுதல் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்.சருமத்தை வறட்சியில்லாமல் பராமரிக்கவும். வறண்ட சருமம் சேற்றுக்குள் புகுந்த கிருமிகளை எளிதாக ஏற்கும்.

5.காலிலோ அல்லது கைகளிலோ புண் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை

சேற்றால் புண் ( Setru pun) ஏற்பட்டால் அதை தாண்டி திடீர் வீக்கம், சிவப்பு, வலி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.குறிப்பாக, டெடனஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.

6. பாதங்களை எப்போதும் உலர்வாக வைத்திருங்கள்

பாதங்களை எப்போதும் உலர்வாக வைத்திருங்கள் சேற்றுப்புண் ( Setru pun) (மண் அல்லது சேற்றால் ஏற்படும் புண்) வருவதற்கான வாய்ப்பை குறைக்க உதவும் . இது ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

7.பாதங்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்

தினசரி பாதங்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து சோப்பினால் கழுவவும். குறிப்பாக கால் விரல்களுக்கு நடுவில் இடையில் இருக்கும் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். பிறகு பாதங்களை நன்றாக உலர வைக்கவும். அதே போன்று மழையில் நனைந்த பிறகும் பாதங்களை சுத்தமாக கழுவி உலரவிடவும். இறந்த சருமத்தை அகற்ற பாதங்களில் வாரம் ஒருமுறை மென்மையான ஸ்க்ரப் அல்லது பியூமிஸ் ஸ்டோன் பயன்படுத்தி தேய்க்கலாம். இதனால் பாதங்கள் தொற்று பரவாமல் பளிச்சென்றூம் இருக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

காற்றில் கலந்த மண்ணிலும் சேற்றிலும் காங் கிரீன் (Gangrene) போன்ற புற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது. பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள் மூலம் இதை தடுக்க முடியும்.இந்த 5 விஷயங்களை கவனமாக பின்பற்றி செயல்பட்டால், சேற்றுப்புண் ( Setru pun) வருவதும் அதன் தீவிர விளைவுகளும் தடுக்கப்படும்.

Tags

Next Story
ai marketing future