கொரோனா தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் மாணவிகள் பங்கேற்பு
கோவிட-19 தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி போடும் மாணவிகள்.
கடந்த 10ம் தேதி, ஞாயிறு அன்று ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. அந்த முகாமில் குமாரபாளையம் JKKN நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டனர்.
JKKN கல்வி நிறுவனங்களின்,ஸ்ரீ சக்திமயில் நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி 3 மற்றும் 4ம் ஆண்டு B.Sc., நர்சிங் மாணவிகள் ஈரோடு மாவட்டம் ஓலக்கடம் ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாபேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிபாளையம், காடைச்சநல்லூர் மற்றும் கொக்கராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 100 தடுப்பூசி போடப்பட்டன.
இந்த தடுப்பூசி முகாமில் ஸ்ரீ சக்திமயில் நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவிகள் சிறப்பாக பங்கேற்று தங்களின் பங்களிப்பை வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu