ஏழைகளின் பாதாம் நிலக்கடலை!
![ஏழைகளின் பாதாம் நிலக்கடலை! ஏழைகளின் பாதாம் நிலக்கடலை!](https://www.nativenews.in/h-upload/2023/02/11/1658426--.webp)
புரதச்சத்து மிகுந்த நிலக்கடலை சாப்பிடுங்க...!
நிலக்கடலை ‘பேபேசீஸ்’ என்னும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இவை மல்லாட்டை, கச்சான் என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது. நிலக்கடலை தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டதுடன், உலகின் பல்வேறு நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.
மாமிசங்கள், முட்டை, காய்கறிகளைவிட இந்த வேர்க்கடலையில் அதிக புரதச் சத்து கிடைப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வேர்க்கடலை மணலில் வறுத்தும், நீரில் வேக வைத்தும், உணவில் பரிமாறியும் மக்கள் சாப்பிட்டு வரும் நிலையில், இந்த வேர்க்கடலையை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து சாப்பிடும் போது, உடலுக்கு நன்மை அதிகம் எனவும் கூறப்படுகிறது.
வேர்க்கடலையில், புரதச் சத்துகள் மட்டுமின்றி, பொட்டாசியம், பாஸ்பரஸ், விட்டமின் பி, மெக்னீசியம் ஆகிய சத்துகளும் உள்ளதாகவும், முக்கிய ஆரோக்கிய தீனியாகவும் இது உள்ளது. வெளிநாடுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பாதாம், பிஸ்தா உள்ளிட்ட எந்த விலை உயர்ந்த ஒரு நட்ஸ் வகைகளும் இந்தியாவில் குறைந்த விலையில் விற்கப்படும் வேர்க்கடலைக்கு ஈடாகவே ஆகாது.
எனவே, அனைத்து வயதினரும், வேர்க்கடலையினை ‘ஸ்நாக்ஸ்’ ஆக சாப்பிடுவதன் மூலம் தேவையான புரதசத்து உள்ளிட்ட அத்தனை சத்துக்களையம் பெற முடியும். தவிர, நிலக்கடலை சாப்பிடும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் இனப்பெருக்க உறுப்புகள் மிகவும் சிறப்பாக வளர்ச்சி பெறும். ஆண்மைக்குறைவோ, பெண்மைக்குறைவோ ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே திருமணம் ஆனதும், குழந்தைகள் பெற மருத்துவமனைகளையும் நாட வேண்டிய அவசியம் இருக்காது. நிலக்கடலை குறைந்த விலையில் நடக்கும் கிடைத்துள்ள பொக்கிஷம் என, டாக்டர்கள் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu