ரத்த அழுத்தம் குறைய டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை..! பக்கவிளைவுகள் என்ன? பார்ப்போமா..?

telmisartan tablet uses in tamil-டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை எதற்கு பயன்படுத்தப்படுகிறது? எப்படி உட்கொள்ளவேண்டும் போன்றவை பற்றி பார்ப்போமா..வாங்க.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ரத்த அழுத்தம் குறைய டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை..!  பக்கவிளைவுகள் என்ன? பார்ப்போமா..?
X

telmisartan tablet uses in tamil-மாத்திரைகள் கார்ட்டூன் படம்.

டெல்மிசார்டன் மாத்திரை பற்றிய பொது விளக்கம்

telmisartan tablet uses in tamil-டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை (Telmisartan 40 MG Tablet) உயர் இரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் குடும்பத்திற்கு சொந்தமானது. பக்கவாதம், மாரடைப்பு, இதயத்தின் மோசமான நிலைகள் மற்றும் மரணம் தருவாயிலும் அபாயத்தை குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை ஒருவரின் உடலில் சீரான இரத்த அழுத்தத்தின் அளவை பராமரிக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

பயன்பாடு

டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை இரத்த நாளங்களை விரிவுபடுத்துவும், ரத்தத்தை நீர்மமாக்கவும் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது அதிக உப்பு மற்றும் சிறுநீரை வெளியேற்ற உதவுகிறது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது. ஆகையால், உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதில் டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை (Telmisartan 40 MG Tablet) மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை (Telmisartan 40 MG Tablet) என்பது ஆஞ்சியோடென்ஸின் ஏற்பி தடுப்பானாக அல்லது ARB என்றும் அழைக்கப்படும் மருந்து ஆகும். இந்த மருந்து மிக அதிக இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதய நோய்கள், பக்கவாதம், மற்றும் மாரடைப்பு போன்றவற்றில் ஆபத்தை குறைக்க நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

மருத்துவர் பரிந்துரை

டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை வழக்கமான பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு ஒரு முறை எடுக்கப்படும் மாத்திரை ஆகும். இதயம் மிகவும் கடுமையான நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவர் 80 மில்லி வரை மருந்தளவினை அதிகரிக்கலாம். கொடுக்கப்பட்ட காலம் வரை நீங்கள் நிச்சயமாக மருத்துவரின் பரிந்துரைப்படி இந்த மருந்தை எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும். நீங்கள் ஒரு வேளை மருந்து எடுத்துக்கொள்ள தவறினால் அல்லது மறந்துவிட்டால், அதனை ஈடு செய்ய அடுத்த வேளைக்கு கூடுதலாக இந்த மருந்தினை எடுத்துக் கூடாது.

யார் பயன்படுத்தக்கூடாது

கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கருவுற எண்னியிருக்கும் பெண்கள் இந்த மருந்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது குழந்தையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். இந்த மருந்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது. ஏனெனில் இந்த மருந்து உட்கொள்வதன் மூலம் கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய், நீரிழிவு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீங்கினை ஏற்படுத்தலாம். இது போன்ற நிலைமைகள் ஏதேனும் இருந்தால் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னரே, உங்கள் மருத்துவரிடம் அதைப்பற்றி தெரிவிக்க வேண்டும்.

டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரையின் பக்க விளைவுகள் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தியெடுத்தல், குமட்டல், மார்பு நெரிசல், சோர்வு, உடல் மற்றும் தசை வலி போன்றவை ஆகும். இதன் பக்க விளைவுகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் மறைந்து விடும். ஒருவேளை நீண்ட காலம் இவை நீடித்தால், உங்கள் மருத்துவரை அணுகி கலந்தாலோசிக்கவும்.

பொதுவான பக்கவிளைவுகள்

telmisartan tablet uses in tamil-மயக்கம், குமட்டல், கைகளில் வீக்கம், கணுக்கால் அல்லது பாதம் மற்றும் திடீர் எடை அதிகரிப்பு ஆகியவை இதன் முக்கிய பக்கவிளைவுகள் ஆகும். இந்த டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை உட்கொள்வதால் ஒவ்வாமை இருந்தால், உங்களுக்கு நாக்கு, தொண்டை அல்லது முகம் ஆகியவற்றில் வீக்கம், தடிப்புகள், அரிப்பு மற்றும் சுவாச சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும்.டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரை (Telmisartan 40 MG Tablet) உடன் ஒவ்வாமை எதிர்வினை இருந்தால், இந்த மருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் மருத்துவரை உடனே தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மருந்து மற்ற மருந்துகளுடனும், மதுவுடனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால், டெல்மிசார்டன் 40 மிகி மாத்திரையை எடுத்துக் கொள்ளும் முன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகளைப் பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Cardiologist - ஐ அணுகுவது நல்லது.

பக்கவிளைவுகள்

பார்வையில் மாற்றங்கள் (Changes In Vision)

தலைச்சுற்றல் (Dizziness)

அதிகரித்த இதய துடிப்பு (Increased Heart Rate)

சிரமத்துடன் கூடிய அல்லது வலிமிகுந்த சிறுநீர் கழிப்பு (Difficulty Or Painful Urination)

வயிற்று வலி (Abdominal Pain)

வயிற்றுப்போக்கு (Diarrhoea)

முதுகு வலி (Back Pain)

பலவீனம் (Weakness)

தசை வலி (Muscle Pain)

காய்ச்சல் (Fever)

பொதுவான எச்சரிக்கை

எந்த மருந்தாக இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வதே பாதுகாப்பானது.

Updated On: 14 Aug 2022 7:58 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
  3. இந்தியா
    உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் இல்லனா என்ன இந்த சட்னி செய்து பாருங்க...!
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  7. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்