வெயில் காலத்தில் கூல்டிரிங்க்ஸ் குடிக்காதீங்க..! ஏன் கூடாது?

வெயில் காலத்தில் கூல்டிரிங்க்ஸ் குடிக்காதீங்க..! ஏன் கூடாது?
X

குளிர்பானம் குடிக்கும் பெண் -கோப்பு படம் 

கோடைகாலத்தில் குளிர்ச்சியாக எதுவும் குடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் எதற்காக சாகிறார்கள் தெரியுமா? தெரிஞ்சிக்கலாம் வாங்க.

உடல் ஆரோக்யம் என்பது முதலில் நமது மனநிலையில்தான் உள்ளது. உடல் ஆரோக்யமும் வயதும் கூட நம்பிக்கைக்குப் பிறகுதான். நமது நம்பிக்கையே மனநிலையை ஊக்குவிக்கும் ஒரு சக்தி. நீங்கள் ஆச்சர்யப்படும் உடல் ஆரோக்ய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

நீங்கள் சூடாக இருந்தால் குளிர்ச்சியாக ஏதாவது குடிங்க : இது சரியா..?

நீங்கள் சூடாக இருந்தால், குளிர்ச்சியாக ஏதாவது குடிப்பது உங்கள் உடலை குளிர்விக்கும் என்று வழக்கமான ஞானம் உங்களுக்கு போதிக்கப்பட்டிருக்கும். இருப்பினும், ஆனால் உண்மையில் சூடான நாளில், சூடான பானத்தை குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என்று ஆராய்ச்சி சொல்கிறது. காரணம், நீங்கள் சூடான பானத்தை குடிக்கும்போது, ​​உங்கள் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு வியர்வையை உற்பத்தி செய்கிறது. வியர்வை வெளியேறும்போது வெப்பம் வெளியேறி உடல் குளிர்ந்த நிலைக்கு மாறுகிறது.

தொடக்கத்தில் சூடான திரவத்தை குடிக்கும்போது வெப்பம் ஏற்படலாம். ஆனால் உங்கள் உடல் உற்பத்தி செய்யும் வியர்வையின் அளவு நீங்கள் குடிக்கும் திரவத்தில் இருந்து சேர்க்கப்படும் வெப்பத்தை விட அதிகமாக குளிர்விக்க வேண்டும். வியர்வை அதிகம் ஆகும்போது வெப்பம் வியர்வையாக வெளியேறிவிடுகிறது. வியர்வை உங்கள் தோலின் வழியாக வெளியேறும்போது, ​​உங்கள் உடல் வெப்பநிலை குறைகிறது.


தோழமை இதயத்திற்கு நல்லது

நல்ல உறவுகள் மற்றும் சமூகத்தின் ஆதரவை பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நீண்ட ஆயுளையும் அதிகரிக்கும். இந்த புவியில் உலக சராசரியை ஒப்பிடும்போது வழக்கத்தை விட உலகின் பல பகுதிகளில் சமூக ரீதியாக சுறுசுறுப்பாகவும், உறவுகளோடு இணைந்து வாழ்பவர்களும் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

குடும்பத்திலும் மற்றும் உடல் ரீதியான தனிமையை உணரும் ஒரு மூத்த குடிமகன் நம்மோடு வாழ்க்கையில் இருக்கலாம். மூத்தவர்கள் மூத்தவர்களோடு தோழமையாக இருக்கும்போது அந்த இரண்டு தோழர்களும் மளிகை சாமான்கள் வாங்கவும் அல்லது அவர்களை மருத்துவ பரிசோதனை செய்யும் நேரங்களில் மருத்துவமனைக்கு தங்கள் தோழர்களை கூடவே அழைத்துச் செல்வார்கள். அல்லது பிற வேலைகளுக்கும் அழைத்துச் செல்வார்கள், இது நட்பு ரீதியில் அவர்களை இணைக்கும் பாலம். அந்த உறவு மனதை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவும்.


நமது உடலில் உள்ள வலிமையான தசை எது?

நமது தசை வலிமையை வெவ்வேறு வழிகளில் அளவிடலாம். அதிக சக்தியைச் செலுத்தக்கூடிய தசையை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றால், உங்கள் கன்று தசை (முழங்கால் தசை), சோலியஸ் தசை (முழங்காலில் இருந்து கணுக்கால் வரை உள்ள பகுதி) சக்தி மிகுந்ததாக இருக்கும்.

இருப்பினும், அதிக அழுத்தத்தை செலுத்தக்கூடிய தசையை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், தாடை தசை வலிமையானதாக இருக்கும். மனித தாடை 200 பவுண்டுகள் எடையுள்ள பொருட்களை அழுத்தும் அளவுக்கு பெரிய சக்தியுடன் பற்களை மூட முடியும்.

பாதிக்கும் மேற்பட்ட எலும்புகள் நமது கைகளிலும் கால்களிலும் அமைந்துள்ளன

நாம் ஏறக்குறைய 300 எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளுடன் பிறக்கிறோம். அவை இறுதியில் நாம் முதிர் வயதை அடையும் நேரத்தில் ஒன்றாக இணைகின்றன. வயது வந்த மனித உடல் 206 எலும்புகளைக் கொண்டுள்ளன. இந்த எலும்புகளில் 106 எலும்புகள் நம் கை மற்றும் கால்களில் அமைந்துள்ளன.

கைகளில் உள்ள எலும்புகள் பொதுவாக உடையக்கூடிய எலும்புகளில் ஒன்றாகும். அதனால்தான் பெரியவர்களின் எலும்பு காயங்கள் ஏற்படுவதற்கு கிட்டத்தட்ட பாதிக்கு இதுவே காரணமாகிறது.

உங்கள் பாதங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் கண்ணாடி போன்றது

வயது முதிரும்போது கடுமையான கால் பிரச்சினைகள் உருவாகலாம். இது அவர்களின் ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் நல்வாழ்வு போன்ற சிறந்த வாழ்க்கை வாழும் நிலையை தவிர்த்து ஆபத்தில் ஆழ்த்துகிறது. நீரிழிவு நோய், நரம்பு பாதிப்பு, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் மூட்டுவலி போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி நமது பாதங்கள் முன்கூட்டியே நமக்கு எச்சரிக்கலாம். அதை அறிந்து நாம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.


அதிக கொலஸ்ட்ராலை உடல் ரீதியாக காண முடியும்

உங்கள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகளைக் காணலாம். சாந்தெலஸ்மாட்டா அல்லது சாந்தெலஸ்மா, உங்கள் தோலின் கீழ் கொலஸ்ட்ரால் நிரப்பப்பட்ட புடைப்பகளாக உருவாகும். இது சாத்தியமான இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த புடைப்புகள் உடல் முழுவதும் காணப்படும். இது வயதானர்களின் தோலில் தோன்றும். இது நீரிழிவு அல்லது பிற இதய நோய் பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.

குளிர்ச்சியான வெப்பநிலை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது

நீங்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறீர்கள் என்றால், குளிர் காலநிலை பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் குளிர்ந்த வெப்பநிலை உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளிர்ச்சியான வெப்பநிலை ஒவ்வாமை மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். மேலும் இது உங்களுக்கு மிகவும் தெளிவாகச் சிந்திக்கவும் தினசரி பணிகளைச் சிறப்பாகச் செய்யவும் உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. குளிர் நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்; ஜிகா, வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் குளிர்காலத்தில் இல்லை என்பதை அறிக


வாழைப்பழம் உங்கள் மனநிலையை (மூட்)மேம்படுத்த உதவும்

ஒரு வாழைப்பழத்தில் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் பி6 தினசரி உட்கொள்ளலில் சுமார் 30சதம் உள்ளது. வைட்டமின் பி6 மூளை செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இது மனநிலைக்கு நிலைப்படுத்தியாக செயல்படுவதாக கருதப்படுகிறது. செரோடோனின் உங்கள் மோட்டார் திறன்களையும் உணர்ச்சிகளையும் கட்டுக்குள் வைக்கிறது. இது உறங்கவும், உணவை ஜீரணிக்கவும் உதவும் இரசாயனமும் இதுவே. வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் உடலில் செரோடோனின் அளவை தூண்டுவதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை போக்க உதவும்.

காய்ச்சலின் அறிகுறிகள் தோன்றிய ஏழு நாட்கள் வரை பாதிக்கப்பட்டவர் தொற்றுநோய் உடையவராக இருப்பார்

இதனாலேயே காய்ச்சல் பணியிடத்திலோ அல்லது வீட்டிலோ மிக விரைவாகவும் எளிதாகவும் பரவுகிறது. எந்த நேரத்திலும் எச்சரிக்கை இல்லாமல் காய்ச்சல் தோன்றலாம். காய்ச்சல் அறிகுறிகள் முழுமையாக குணமடைய ஐந்து முதல் 10 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

நம்பிக்கை நீண்ட காலம் வாழ உதவும்

கண்ணாடி பாதி நிரம்பியதைப் பார்ப்பது நீண்ட காலம் வாழ உதவுமா? புற்றுநோய், நோய்த் தொற்று மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவதற்கு நம்பிக்கையின் அளவு அதிகரிப்பதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இருதய நோய்களுக்கு இது முற்றிலும் உண்மையாக இருக்கிறது. அதிக நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 40சதவீதம் குறைவாக இருந்தது.

உடல்நலம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இது உங்களுக்குப் பிடித்த ஆரோக்கிய உண்மைகள்.

Tags

Next Story