சளி தொல்லைக்கு பாட்டி சொல்லும் வைத்தியம் : அட.. வீட்டு வைத்தியமுங்க

பாட்டி வைத்தியம் மாதிரி படம்.
.பாட்டி வைத்தியம் சொல்றேன் பேராண்டிகளா..அதை செஞ்சு பாருங்க. உங்களுக்கு உடனே குணமாகிடும். அந்த காலத்துல நாங்க எதுக்கு எடுத்தாலும் மருந்து கடைக்கும், டாக்டர் கிட்டயுமா ஓடினோம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நாங்க உடல் ஆரோக்கியமா இருந்தோம்.
காரணம் வீட்டில நம்ம சமையல் கட்டுலயே அத்தனை மருந்துகளும் இருக்கு. இன்னிக்கு நெஞ்சு சளிக்கு என்ன செய்யலாம்னு பார்ப்போம்.
நெஞ்சு சளி இருந்தால், தேங்காய் எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கங்க. ஒரு அலுமினிய கரண்டியில் அந்த எண்ணெயை ஊற்றுங்க. அதோடு கற்பூரம் ரெண்டு கட்டி சேர்த்து நல்லா சுட வையுங்க. சுட வைக்கும்போது தேங்காய் எண்ணெயோடு கற்பூரம் சேர்ந்ததும் ஒரு நல்ல வாசம் வரும். நல்லா சுட்டதும், அதை நன்றாக ஆற வையுங்க. நல்லா ஆறியதும், நெஞ்சிபகுதி, நெற்றிப்பொட்டு, காதின் பின் மடல் பகுதியில தடவுங்க. சளி இருக்கற இடம் தெரியாம ஓடிப்போயிடும்.
சரி பேராண்டிகளா..என்னைய தாத்தா தேடுவாக. நான் திரும்ப நாளைக்கு வர்றேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu