கிலோனாசெபம் (Clonazepam) மருந்தின் பயன்பாடும் பக்கவிளைவுகளும்..!

clonazepam tablet uses in tamil-கிலோனாசெபம் மாத்திரைகளின் பயன்பாடுகள் மற்றும் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து இங்கு தரப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கிலோனாசெபம் (Clonazepam) மருந்தின் பயன்பாடும் பக்கவிளைவுகளும்..!
X

clonazepam tablet uses in tamil-மாத்திரைகள்.(கார்ட்டூன் படம்)

clonazepam tablet uses in tamil-கிலோனாசெபம் (Clonazepam) மருந்து வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிப்பதிலும், தடுப்பதற்கும் பயன்படுகிறது. அது ஒரு வலிப்பு எதிரப்பு மற்றும் நடுக்க எதிர்ப்பு மருந்தாகும். இந்த மருந்து மனதில் எழும் பயம் மற்றும் நடுக்கத்தை கட்டுப்படுத்த பயனாகிறது. பென்சோயிடையாசெப்பைன்கள் என்றழைக்கப்படும் மருந்துத் தொகுப்பைச் சார்ந்தவை. கிலோனாசெபம் (Clonazepam) மருந்து நரம்புகள் மற்றும் மூளையில் ஏற்படும் பதற்றத்தை சாந்தப்படுத்தும் விளைவை தூண்டி விடுகிறது.

இந்த மருந்தின் அளவு குறிப்பிட்ட மருத்துவ நிலையைப் பொறுத்தது. சிகிச்சை மற்றும் வயதுக்கேற்ப உடலின் எதிர்வினை ஆகியவற்றைப் பொறுத்து செயலாற்றுகிறது. குழந்தைகளுக்கு இந்த மருந்தை வழங்கும்போது அவர்களது எடையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக, பக்க விளைவுகளை ஏற்படாமலும் வேறு எந்த சிக்கலும் ஏற்படாமல் தடுக்க வயது முதிர்ந்தவர்களுக்கு குறைந்த அளவு மருந்தே பரிந்துரைக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் அளவைவிட மருந்தின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

கிலோனாசெபம் (Clonazepam) மருந்து ஒருவருக்கு தற்போதுள்ள நிலையை கருத்தில்கொண்டு மருந்தை வழங்கி, பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க படிப்படியாக மருந்தின் அளவைக் குறைக்கவேண்டும். மேலும், திடீரென இந்த மருந்தை நிறுத்தினால் மனநிலை மாற்றங்கள், வலிப்பு, தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் போன்றவை ஏற்படுத்தும்.

பொதுவாக, கிலோனாசெபம் (Clonazepam) மருந்தின் நீண்டகாலப் பயன்பாடு அது அளித்துவந்த பலனைப் பாதிக்கலாம். இந்த மருந்து சில சந்தர்ப்பங்களில் உங்கள் வலிப்புத்தாக்கங்களை மோசமாக்கும். எனவே, இதுபோன்ற வலிப்புத்தாக்கங்களை கட்டுக்குள் வைத்திருக்க ஏற்கனவே பயன்படுத்தும் மற்ற மருந்துகள் குறித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பக்கவிளைவுகள்

அயர்வு, தலைசுற்றல், சோர்வு, கவனம் குறைதல் மற்றும் வாயில் எச்சில் சுரப்பு அதிகரித்தல் ஆகியவை பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். நல்ல நிலைக்கு மருத்துவர் இந்த மருந்தை அறிவுறுத்தியிருக்கக்கூடும், ஆனால், சில மோசமான எதிர் செயல்பாடுகள், மனச்சோர்வு சார்ந்த எண்ணங்கள் மற்றும் தற்கொலை போக்குகளையும் இது ஏற்படுத்தக்கூடும்.

clonazepam tablet uses in tamil-எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் அல்லது சுற்றி உள்ள மக்களுடன் நடந்து கொள்ளும் முறையில் ஏதேனும் மாற்றத்தையும் மனச்சோர்வையும் உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் சென்று நிலையை கூறவேண்டும். தோல் தடிப்புகள், அரிப்பு, தொண்டை புண் மற்றும் காய்ச்சல் போன்ற மற்றவை லேசான பக்கவிளைவுகள் ஆகும்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Neurologist-ஐ அணுகுவது நல்லது.

பொதுவான எச்சரிக்கை

எந்த மருந்தாக இருந்தாலும் அதை பயன்படுத்துவதற்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.

Updated On: 24 July 2022 6:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  2. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  3. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  4. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  5. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  6. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
  7. நாமக்கல்
    புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
  8. நாமக்கல்
    மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு
  10. தேனி
    தேனியில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள்...