/* */

மதுரை அருகே 240 கிலோ கஞ்சா பிடிபட்டது -குற்றவாளி தப்பியோட்டம்

மதுரை அருகே 240 கிலோ கஞ்சா பிடிபட்டது -குற்றவாளி தப்பியோட்டம்
X

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் 240 கிலோ கஞ்சா பிடிபட்டது :முக்கிய குற்றவாளி தலைமறைவாகியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் , தனிப்படை போலீசார் அவனியாபுரம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவனியாபுரம் திருப்பதி நகரில் வசிக்கும் பாண்டி என்பவரது மகன் அருண் குமார் (வயது 32 ) மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோ மற்றும் டூவிலரில் வந்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில் 240 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளியான அருண்குமார் என்பவர் தப்பி ஓட்டம். மீதமுள்ள 4 பேரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .மேலும் , கஞ்சா கொண்டு வந்த . ஆட்டோ மற்றும் 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அருண்குமார் மீது, அவனியாபுரம் , கீரைத் துறை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Jun 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...