/* */

திருச்சியில் பட்டப்பகலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக்கொலை

திருச்சியில் பட்டப்பகலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் பட்டப்பகலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக்கொலை
X

கொலை செய்யப்பட்ட முத்துக்குமார்.

திருச்சியில் அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் மகன் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். அதிமுக முன்னாள் பகுதி செயலாளரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தவர் ஆவார்.

இவர்கள் கேபிள் தொழிலும் பன்றி வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இவர்களது மகன் முத்துக்குமார் (வயது 27 ).டிப்ளமோ இன்ஜினீயர். பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் அண்ணனான பன்றி பெரியசாமி குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பன்றி சேகரின் மகன் சிலம்பரசன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் முத்துக்குமாரை தாக்க முற்பட்டனர். அவர்களை கண்டதும் முத்துக்குமார் ஓட தொடங்கினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட விடாமல் தடுத்து ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையாளிகள் கையில் துப்பாக்கியும் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பல் முத்துக்குமாரின் முகத்தை வெட்டி சிதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அரியமங்கல காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் முத்துக்குமாரின் உடலைப் பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் பழிக்குப் பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இறந்து போன முத்துக்குமார் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 30 April 2024 11:32 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...