பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது

பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது

கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் ரவிக்குமார்.

லால்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மோகன். கடந்த 2002 ஆம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள் புரத்தில் உள்ள 94 செண்டு நிலத்தை கிரயம் பெற்றுள்ளார்.

மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்த நிலத்திற்கு உண்டான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த 5.3.2024 ஆம் தேதி லால்குடி வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். அதன் பெயரில் இவருடைய மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்து லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பி உள்ளார்.

தான் விண்ணப்பித்து ஆறு மாதங்கள் ஆகியும் தனது வேலை முடியாத காரணத்தால் மோகன் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். இறுதியாக மோகன் கடந்த 26/9/2024 ஆம் தேதி லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து தனது நிலத்திற்கான பட்டா பெயர் திருத்தம் செய்து கொடுக்குமாறு மீண்டும் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.

அதற்கு துணை வட்டாட்சியர் ரவிக்குமார் 50000 ரூபாய் கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவேன் என கூறியுள்ளார். பேரம் பேசி இறுதியாக.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மோகனின் மனுவை பரிந்துரை செய்ய முடியும் என்று துணை வட்டாட்சியர் ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் இன்று 3.10.2024 லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், மோகனிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை துணை வட்டாட்சியர் ரவிக்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் துணை வட்டாட்சியர் ரவிக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
Similar Posts
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது
டெல்லி துவாரகாவில் டேங்கர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு
வட மாநில கொள்ளையன் என்கவுன்டர்:  சினிமா பாணியில் விரட்டிய போலீஸார்
ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியிடம் மோசடி: மூவர் கைது
இந்தியா முழுவதும் பந்தயம் என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய கும்பல் கைது
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான பொருட்கள் திருட்டு: ஆறு பேர் கைது
குடிபோதையில் தந்தையை பீர் பாட்டிலால் குத்திய மகன் கைது
கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
கோவையில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 8 கல்லூரி மாணவர்கள் கைது
கொள்ளையடிக்க கோர்ஸ்: புதுசு புதுசா யோசிக்கிறாங்க
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர்கள் கைது: 149.50 பவுன் நகைகள் மீட்பு