Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது: இன்று 20,421 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 434 பேர் இறந்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் இன்றைய கொரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 37 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,44,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 33,161 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்து 65 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 005 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்த வருகிறது. அதன்படி இன்று 1,644 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்ப்டடுள்ளது.