விஜய் ஆண்டனி திடீர் டிவீட்! மகளைப் பற்றி கடிதம்!

விஜய் ஆண்டனி திடீர் டிவீட்! மகளைப் பற்றி கடிதம்!
தனது மகள் குறித்து விஜய் ஆண்டனி திடீர் கடிதம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது மகளின் மரணத்திற்குப் பிறகு எழுதிய கடிதத்தில், தனது மகளுடன் தான் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் பல நடிகர்களின் படங்களிலும் இசை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். தனது வித்தியாசமான இசையால் பல இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்தவர், திடீரென நடிகராகவும் களமிறங்கினார்.

தான் பிறவியிலேயே இசை அமைப்பாளர் இல்லை, பெரிய அளவில் என்னால் இசையில் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளதாக கூறிய விஜய் ஆண்டனி, தற்போது இசையமைப்பு பணிகளை குறைத்துக் கொண்டு நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், கோடியில் ஒருவன் படங்கள் கவனம் பெற்றனர். அடுத்ததாக சி.எஸ். அமுதன் இயக்கத்தில் இரத்தம் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளையும் விஜய் ஆண்டனி சமீபகாலமாக நடத்தி வருகிறார்.

கடந்த இரு வாரத்துக்கு முன்னர் கூட சென்னையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிகர்கள் ஏராளமாக திரண்டு சென்று இசை விருந்தை செவி குளிர அனுபவித்து திரும்பினர். ஏ ஆர் ரஹ்மான் நிகழ்ச்சியில் பிரச்னை ஏற்பட்டதால் விஜய் ஆண்டனி நிகழ்ச்சி அதிகம் பாராட்டைப் பெற்றது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் திடீரென விஜய் ஆண்டனிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்து சேர்ந்தது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் 2 மகள்கள் மற்றும் மனைவியுடன் விஜய் ஆண்டனி வசித்து வந்த நிலையில், அவரது மூத்த மகளான 12 ஆம் வகுப்பு படிக்கும் மீரா 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகள் மீரா 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகிலும், பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மிகவும் சோகமாக இருந்த விஜய் ஆண்டனி, தனது மகளின் நினைவாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:


"அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள்.

என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்.

உங்கள் அன்புடன்,

விஜய் ஆண்டனி"

விஜய் ஆண்டனியின் இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது மகளின் மரணத்திற்கு மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story