மாதவன் கேரக்டரில் சூர்யா; 'சில்லுன்னு ஒரு காதல்' பின்கதை இதுதானா?

மாதவன் கேரக்டரில் சூர்யா; சில்லுன்னு ஒரு காதல் பின்கதை இதுதானா?
X

suriya news, r madhavan news - ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் சூர்யா - ஜோதிகா.

suriya news, r madhavan news- பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில், சூர்யா நடித்த கேரக்டரில், நடிகர் மாதவன் நடிக்க இருந்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

suriya news, r madhavan news- வாழ்க்கையில் சில வாய்ப்புகள் அமைவதும், அமையாமல் போவதையும் அந்தந்த நேரத்து வாழ்க்கை சூழல்களே தீர்மானிக்கிறது. சினிமா வாழ்க்கையிலும் அது பொருந்தும்.

உதாரணமாக, 'எங்க சின்ன ராசா' படத்தில், 'மண்ணாங்கட்டி' என்ற கேரக்டரில் சுப்பிரமணி என்பவர் நடித்திருப்பார். பண்ணையாளரான பாக்யராஜ் உடன் எந்நேரமும் இருக்கும் பண்ணை ஆளாக நடித்த அவர், நல்ல நடிகர். அவருக்கு, 'சின்னக்கவுண்டர்' படத்தில், விஜய்காந்த் தோட்டத்தில் வேலைக்காரனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அவரால் நடிக்க முடியவில்லை.

இதையடுத்து, அந்த கேரக்டரில் நடிகர் வடிவேலு நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான 'கேப்டன்' விஜய்காந்த் படத்தில் நடித்ததால், வடிவேலு ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளால், முன்னணி காமெடி நடிகராக வெற்றி பெற்றார் வடிவேலு. இன்றும் காமெடி நடிகர் எனில், அதில் முதல் இடத்தில் இருப்பவர் வடிவேலுதான்.

அதே போல்தான், மாதவன் நடிக்க வேண்டிய படத்தில், சூர்யா நடித்து பெரிய நடிகராக முன்னேறினார். அதே வேளையில், மாதவனும் முன்னணி நடிகராக வெற்றி பெற்றுள்ளார்.


என்.கிருஷ்ணன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 2006 -ம் ஆண்டு வெளியானது 'சில்லுன்னு ஒரு காதல்'. இப்படத்தில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய "முன்பே வா" பாடல் தற்போது வரை ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இருந்து வருகிறது.

'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக சூர்யா அருமையாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் என். கிருஷ்ணன் முதலில் மாதவனை நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் சில காரணத்தால் மாதவனால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகுதான் இப்படத்தில் சூர்யா நடிக்க படம் 'சூப்பர் ஹிட்' ஆனது.


இதேபோல 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் பூமிகா நடித்து இருந்த கதாபாத்திரத்தில் முதலில் அசின் தான் நடிக்கவிருந்தது. ஆனால் அந்த ரோல் பிடிக்கவில்லை என அவர் வெளியேற, அதன்பின் தான் பூமிகா நடித்தார்.


இப்போதும் இந்த படம், டிவியில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் சூர்யா படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தில், இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் மக்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த படத்தில், 'இடுப்பை கிள்ளியதாக' பஞ்சாயத்தில் நிறுத்தப்படும் வடிவேலு, தம்பி ராமையா, நெல்லை சிவா உள்ளிட்ட தனது சகாக்களுடன் செய்யும் காமெடி அலப்பரை, நகைச்சுவை சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகிறது. இதில், சூர்யா - பூமிகா பிளாஸ்பேக் காட்சிகளில், நடிகர் சந்தானமும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம், பூமிகாவுக்கு மட்டுமின்றி ஜோதிகாவுக்கும் நல்ல ஒரு நடிப்பை தர வாய்ப்பளித்த படமாகவே அமைந்தது.

Tags

Next Story