/* */

Sundari கார்த்திக் கொடுத்த புகைப்படம்! மண்டபத்தில் வெடித்த குண்டு!

கூட்டாளியிடம் இதனை மொய்க் கவரில் வைத்து உள்ளே மக்களிடம் கொடுக்க யோசனை கூறுகிறான். இதனை சொன்னபடியே செய்து முடிக்கிறான் கூட்டாளி. மக்கள் இந்த புகைப்படத்தை எடுத்து பார்க்கிறார்கள். என்ன இது என ஆளாளுக்கு பேசுகிறார்கள். சுந்தரியின் முகம் மாறுகிறது.

HIGHLIGHTS

Sundari கார்த்திக் கொடுத்த புகைப்படம்! மண்டபத்தில் வெடித்த குண்டு!
X

சித்துவின் மாமா மகள் ஓடிப் போய்விட்டதாக தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் ஒரு பொய்தான் அதற்கு காரணம் என சுந்தரி சொல்கிறார். இந்த வாரம் முழுக்க இதே கதையைத் தான் கொண்டு செல்வார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 24 May 2023

கார்த்திக், அருண், அவன் கூட்டாளி என மூவரும் மண்டபத்துக்கு முன் சந்திக்கிறார்கள். கார்த்தி கையில் ஃபோட்டோக்கள் சிலவற்றை வைத்திருக்கிறார். அதனைப் பார்த்த அருண் இதைப் பார்த்தா கல்யாணம் நின்னுடுமே என்று கூற, கூட்டாளியிடம் இதனை மொய்க் கவரில் வைத்து உள்ளே மக்களிடம் கொடுக்க யோசனை கூறுகிறான். இதனை சொன்னபடியே செய்து முடிக்கிறான் கூட்டாளி. மக்கள் இந்த புகைப்படத்தை எடுத்து பார்க்கிறார்கள். என்ன இது என ஆளாளுக்கு பேசுகிறார்கள். சுந்தரியின் முகம் மாறுகிறது.

மொய்க் கவரில் வைத்து கொடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒவ்வொருவரும் எடுத்து பார்க்கின்றனர். இதனால் திருமண மண்டபத்தில் ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாகிறது. ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டே சடங்குகளைச் செய்து கொண்டிருக்கிறார். பின் மணமகளை அழைத்து வரச் சொல்கிறார். மணக்கோலத்தில் மீனா அமைதியாக வருகிறாள். அவளுக்குள் நிறைய சந்தேகங்கள் இருப்பது வெட்டவெளிச்சமாக இருக்கிறது.

மீனா மணமேடையில் அமர்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் நேராக திருமணத்துக்கு வந்திருந்த மக்களிடம் சென்று தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று கூறுகிறாள். நடந்தது என்ன என்று தெரியாமல் பதைபதைக்கின்றனர் அனைவரும். சுந்தரி ஏன் மீனா என்னாச்சு என்று கேட்கிறார். அப்போது எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மீனா கூற, சுந்தரி உனக்கு பிடிச்சு தானே இந்த கல்யாணத்த ஏற்பாடு பண்ணோம்.

இந்த கல்யாணம் நடக்கணும்னா நாங்க என்னதான் பண்ணனும் என்று சுந்தரி கேட்க, அதற்கு நீண்ட நேரமாக அமைதியாக நின்று மீனா, எனக்கு ஒரு சிலர் இந்த கல்யாணத்துல கலந்துக்குறது பிடிக்க, அவங்க இந்த மண்டபத்த விட்டு வெளியில போனா நான் இந்த கல்யாணத்த பண்ணிக்குறேன் என்று கூறுகிறாள்.

அதற்கு மீனா பைத்தியம் மாதிரி பேசாதே என்று சித்து கத்துகிறான். உடனே அவனை சமாதானம் செய்கிறான் கிருஷ்ணா. உனக்கு என்ன வேணும்னு கேளு நாங்க செய்றோம் என்று கேட்கிறார்கள். மீண்டும் சுந்தரி கேட்கிறாள். அதற்கும் நீண்ட நேரம் அமைதியாக இருந்துவிட்டு, நீங்க மண்டபத்த விட்டு வெளிய போனா நான் இந்த கல்யாணத்த பண்ணிக்குறேன் என்கிறாள் மீனா. மண்டபத்தில் அனைவருமே அதிர்ச்சியடைகிறார்கள்.

மீனாவின் அம்மா உடனடியாக கோபப்பட்டு சுந்தரிதான் இந்த கல்யாணத்துக்கு காரணமே என்று கூற ஆரம்பித்த நிலையில், சுந்தரி தான் இந்த கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறுகிறேன் என்கிறார். அதற்கு சித்து தனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் என்கிறான். உடனே சுந்தரி சித்துவை சமாதானம் செய்கிறாள். சித்து, சித்துவின் அப்பா மணி என அனைவரும் ஏதோ சொல்ல முயற்சிக்க அப்போதும் சுந்தரி தான் வெளியே போவதாக கூறி செல்கிறாள். கிருஷ்ணாவும், மாலினியும் அவள் கூடவே செல்கிறார்கள். ஆனால் சுந்தரி அவர்களைத் தடுத்து நீங்கள் சித்துவுக்கு ஆதரவாக இருக்கும்படி கூறிவிட்டு புறப்பட தயாராகிறார்.

அந்த நேரத்தில் சித்து தான் இந்த கல்யாணத்த பண்ணிக்க மாட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் சுந்தரி சித்துவை சமாதானப்படுத்தி கல்யாணம் செஞ்சுக்கோ என்று கூற நட்பு மீது சத்தியம் என்று செய்கிறாள்.

சுந்தரி கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே வருகிறார். அங்கு கூடியிருந்த மக்கள் அவளைப் பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்கள். இவளுக்கு அந்த பையன் மேல ஆசைனா அவளே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான அத விட்டு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்க நினைக்குறாளே என்று பேசுகிறார்கள். அங்கு கார்த்திக்கும் வந்திருக்கிறார். என்ன அத்தனை பேருக்கு முன்னாடி செருப்பால அடிச்சல்ல. இப்ப அந்த பொண்ணு உன்ன ஊருக்கு முன்னாடி செருப்பால அடிச்ச மாதிரி வெளிய தொரத்தி அனுப்பிட்டால்ல என்று கூறுகிறார்.

அந்த நேரத்தில் மணப்பெண்ணான மீனா மண்டபத்தை விட்டு வெளியே வருகிறாள். அப்போது உனக்கு இன்னும் அவமானம் முடியல உன்ன தொரத்திட்டு வருது பாரேன். மெய்ன் பிக்சரே இப்பதான் ஆரம்பிக்கப்போகுது கொஞ்சம் திரும்பி பாரேன். கதற கதற அழ ரெடி ஆகிக்கோ என்று கூறுகிறான் கார்த்திக்.

ஆனால் டுவிஸ்ட்டாக மீனா வந்த உடன் சுந்தரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள். இதனால் கார்த்திக் ஷாக் ஆகிறான். என்ன நடந்தது என்று புரியாமல் திணறுகிறான். மீனா சில பல வசனங்களைப் பேசி சுந்தரியையும் மற்றவர்களையும் மகிழ்விக்கிறார். நீங்கதான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாள். மகிழ்ச்சியின் உச்சிக்கே போன சுந்தரி, கார்த்திக்கை நோக்கி பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 23 May 2023

என் தங்கச்சிப் பொண்ணு ஓடிப்போயிட்டா. நா நம்பியிருந்த பொண்ணு இப்படி ஓடிப் போயிட்டாளே என அழுது புலம்புகிறார். சித்துவின் அப்பா டுவிஸ்ட் வைத்து சித்துவை சுந்தரி கட்டிக் கொள்ள வேண்டும் என குண்டைத் தூக்கி போடுகிறார். அவருக்கு சப்போர்ட் செய்ய ஜானகி அம்மாவும், மல்லிகாவும் இதில் இறங்குகிறார். ஆனால் சுந்தரி மாட்டவே மாட்டேன் என்கிறார். ஆனாலும் மல்லிகாவும், ஜானகியும் அவள் மனதை மாற்ற ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

மல்லிகா தான் சட்டப்படி எந்த பிரச்னையையும் எதிர்கொள்கிறேன் என்கிறார். சித்துதான் உனக்கு சரியான ஜோடி அவனை திருமணம் செய்து கொள் என்று கூறுகிறார். ஜானகி அக்காவும் சுந்தரியை எவ்வளவோ சொல்லியும் சுந்தரி கேட்பதாக இல்லை. இப்படி எவ்ளோ சொல்லியும் கேக்காம இருக்காளே என்று ஜானகி அவளை வற்புறுத்தி மேடையில் அமர்த்துகிறார். சித்துவையும் அமர வைத்துவிட்டு ஐயரிடம் மந்திரம் சொல்ல சொல்லி, கெட்டி மேளம் கொட்ட திருமண தாலியை எடுத்து கொடுக்கின்றனர்.

மணக்கோலத்தில் சித்து, சுந்தரிக்கு தாலி கட்டுகிறான். அனைவரும் மகிழ்ச்சியுடன் அவர்களை வாழ்த்துகின்றனர். திடீரென யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அண்ணா அண்ணா என சித்துவின் அத்தை கதவைத் தட்டுவதை கேட்டு மணி எழுந்து வருகிறார். சித்துவைக் காணவில்லை என்று அவரிடம் தங்கை சொல்வதை கேட்டு என்னது காணாம போனது சித்துவா. மீனா காணாமல் போகலியா என்று கேட்க, அடுத்து மண்டபமே பதைபதைத்து நிற்கிறது.

மணி சித்துவின் நண்பர்களிடம் பேச கால் செய்யலாம் என போனை எடுக்க, கொஞ்ச நேரத்தில் சித்து அங்கிருந்து வண்டியில் வருகிறான். அதைப் பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படி சித்து வந்ததும் எங்க போன சித்து என்று கேட்க, சுந்தரிகிட்ட சொல்லிட்டுதான போனேன் என்று கூறுகிறான். அந்த நேரத்தில் மீனாவும் அதைக் கேட்டு பொறாமைப் படுகிறார்.

சுந்தரி அவர்களை உள்ளே வரச் சொல்லிவிட்டு, மணமகள் அறைக்கு செல்கிறார். அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருக்கிறாள் மீனா. கூடவே அவளது தோழியும் இருக்கிறாள். லிப்ஸ்டிக் ஓகே வா.. டிரெஸ் ஓகே வா என்று கேட்டு ஒட்டியாணம் கலர் ஓகே வா வேற கலர் மாத்திக்கலாமா என்று கேட்க எல்லா கேள்விக்கும் பட்டும் படாமலும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் மீனா.

சுந்தரிக்கு இதனால் கொஞ்சம் மனக்குழப்பம் ஏற்பட்டு அதை சித்துவிடம் கூறுகிறாள். ஒருவேளை மீனாவுக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லையோ என்று யோசிக்க அது அப்படி இல்லை மீனா உன்னத்தான் கட்டிப்பேன்னு அடம்பிடிச்சி ஓடி வரக் கூட தயாரா இருந்தா என சுந்தரி கூறுகிறாள். இதனிடையே சித்துவின் அப்பா மணி கண்ணீருடன் இருக்க அங்கே வந்த மல்லிகா ஏன் அழுகிறீங்க என்று கேட்கிறாள். அதற்கு தன் மனைவியை நினைத்து அழுவதாக கூறுகிறார் மணி. அவள் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்கிறார். அதற்கு மல்லிகா ஆறுதல் தெரிவிக்கிறார்.

கார்த்திக், அருண், அவன் கூட்டாளி என மூவரும் மண்டபத்துக்கு முன் சந்திக்கிறார்கள். கார்த்தி கையில் ஃபோட்டோக்கள் சிலவற்றை வைத்திருக்கிறார். அதனைப் பார்த்த அருண் இதைப் பார்த்தா கல்யாணம் நின்னுடுமே என்று கூற, கூட்டாளியிடம் இதனை மொய்க் கவரில் வைத்து உள்ளே மக்களிடம் கொடுக்க யோசனை கூறுகிறான். இதனை சொன்னபடியே செய்து முடிக்கிறான் கூட்டாளி. மக்கள் இந்த புகைப்படத்தை எடுத்து பார்க்கிறார்கள். என்ன இது என ஆளாளுக்கு பேசுகிறார்கள். சுந்தரியின் முகம் மாறுகிறது.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 25 May 2023

சித்து, மீனா திருமணத்தை நிறுத்தி சுந்தரியை அவமானப்படுத்த நினைக்கிறான் கார்த்தி. அவன் திட்டப்படி சுந்தரி, சித்து இடையே தவறான உறவு இருப்பதாக மீனாவின் மனதில் வன்மத்தை இறக்கிவிட்டிருக்கிறான். இதனை சமாளித்து சித்து, மீனா திருமணத்தை நடத்தி வைப்பாரா சுந்தரி.

Updated On: 24 May 2023 2:01 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...