/* */

Sundari ஓடிப்போன மீனா! சுந்தரிக்கு செக் வைத்த கார்த்திக்!

சித்துவின் மாமா மகள் ஓடிப் போய்விட்டதாக தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

HIGHLIGHTS

Sundari ஓடிப்போன மீனா! சுந்தரிக்கு செக் வைத்த கார்த்திக்!
X

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 22nd May 2023

சுந்தரியின் புத்திசாலித்தனத்தால் இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்கிறது. தன் தவறை உணர்ந்த மீனாவின் அப்பாவும் சித்து அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு ஒன்று சேர்ந்துவிட்டார். இதனால் சித்துவுக்கும் மீனாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்கின்றனர். சுந்தரியே கல்யாணத்தை முன்னின்று நடத்த கேட்டுக் கொள்கின்றனர். இதனால் சுந்தரிக்கு மதிப்பு கூடுகிறது. இதனை விரும்பாத கார்த்திக் அந்த கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறான். மீனாவைச் சந்திக்கிறான் கார்த்திக்.

சுந்தரிக்கும் சித்துவுக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சந்தேகத்தை எழ வைக்கிறான் கார்த்திக். இதனால் மீனாவுக்கு கடுப்பாக இருக்கிறது. இரவு நேரத்தில் இருவரும் சேர்ந்து சிரித்து சிரித்து பேசியதை நேரில் பார்த்த மீனா இந்த கல்யாணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்க, அடுத்த நாள் திருமணமும் நடக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன.

திருமணம் நிகழும் நாள் காலையும் வந்தது. உறவினர்கள், நண்பர்கள் என மண்டபத்துக்கு வருகை தருகின்றனர். அப்போது மல்லிகாவும் வருகிறார். சித்துவின் அப்பா, கார்த்திக் சுந்தரியை ஃபோனில் மிரட்டியதை மல்லிகாவிடம் கூறிவிடலாமா என யோசித்துவிட்டு பின் அங்குள்ள பிஸியில் மறந்துவிடுகிறார். அப்போது கார்த்திக் மீண்டும் சுந்தரிக்கு கால் செய்கிறான். அப்போது சுந்தரி இவன் ஏதோ திட்டமிட்டிருக்கிறான் என்பதை உணர்கிறாள்.

அந்த நேரத்தில் ஐயர் மணப்பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா முறை ஆட்களை அழைக்கிறார். சங்கல்பம் செய்யவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அப்படி யாரும் இல்லை சங்கல்பம் வேண்டாம் நேரடியாக கல்யாணம் செய்திடுங்கள் என்று கூறுகிறார் மீனாவின் அம்மா. மீனாவின் தோழியை அழைத்து, மேலே சென்று மீனாவைக் கூட்டி வரச் சொல்கிறார்.

கிருஷ்ணாவும், சித்துவும் மணமகன் அறையிலிருந்து கிளம்புகிறார்கள். அப்போது சுந்தரி அங்கிருந்து வருகிறார். மணமேடைக்கு வரச் சொல்றாங்க வாங்க என்று மாப்பிள்ளையை அழைத்துச் செல்கிறார். சில கேலி கிண்டல்களைத் தொடர்ந்து அப்படியே கீழே மணமேடைக்கு செல்கிறார்கள் மூவரும்.

மீனாவின் தோழி மணமகள் அறைக்குச் சென்று பார்க்கும்போது அங்கு மீனா இல்லை. நன்கு தேடிப்பார்த்தும் மீனாவைக் காணவில்லை என்பதால் பதைபதைத்துக் கொண்டே எங்கெ சென்றாள் எனத் தேட, அங்கு எழுதி மறைத்து வைக்கப்பட்டிருந்த லெட்டர் ஒன்று கிடைக்கிறது. அதில் என்னைத் தேட வேண்டாம், எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. அதனை ஓடி வந்து மணமேடையில் கூடியிருந்த உறவினர்களிடம் காட்ட, அடடே பொண்ணு ஓடிப்போச்சு என்று அனைவரும் பேச ஆரம்பிக்கின்றனர்.

மண்டபமே பரபரக்கிறது. நான்லாம் சொன்னேன்ல எப்ப பாத்தாலும் மாப்ள பக்கத்துல ஒரு பொண்ணு இருக்குன்னு. கல்யாண பொண்ணுக்கு இந்த விசயம் தெரிஞ்சதும் ஓடி போச்சுப்போல. ஃபிரண்டுங்குற பேர்ல இப்படி ஒரு பொண்ண கூடவே மாப்பிள்ள வச்சிருந்தா எந்த பொண்ணுதான் பொருத்துக்கும் என ஆளாளுக்கு பேச மீனாவின் அப்பாவும், அம்மாவும் அழுது மன்னிப்பு கேட்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சித்துவின் அப்பா, மீனா மீது கோபத்தில் இருக்கிறார்.

இதில் கார்த்திக்கின் வேலை நிச்சயமாக இருக்கிறது. அதற்காகத்தான் அடிக்கடி கால் செய்துகொண்டே இருந்திருக்கிறான் என்று சுந்தரி உணர்வதற்குள் மீண்டும் கால் செய்கிறான் கார்த்திக்.

சித்துவின் அப்பா மணி சித்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். மீனாவும் இதனை ஒத்துக் கொண்டுதான் கல்யாணத்துக்கு சம்மதித்தார் என்று நினைத்தேனே. கலெக்டர் ஆகி கௌரவமாக வாழ வேண்டிய மகனை நானே அசிங்கப்படுத்திட்டேனே என்று அழுகிறார். கார்த்திதான் இதற்கு காரணம் என்று சுந்தரி சொல்லியும் சித்துவின் அப்பா மணி குத்துவிளக்கை எடுத்து குத்திக் கொண்டு சாக நினைக்கிறார். மண்டபமே நிலைகுலைந்து போகிறது.

என் தங்கச்சிப் பொண்ணு ஓடிப்போயிட்டா. நா நம்பியிருந்த பொண்ணு இப்படி ஓடிப் போயிட்டாளே என அழுது புலம்புகிறார். சித்துவின் அப்பா டுவிஸ்ட் வைத்து சித்துவை சுந்தரி கட்டிக் கொள்ள வேண்டும் என குண்டைத் தூக்கி போடுகிறார். அவருக்கு சப்போர்ட் செய்ய ஜானகி அம்மாவும், மல்லிகாவும் இதில் இறங்குகிறார். ஆனால் சுந்தரி மாட்டவே மாட்டேன் என்கிறார். ஆனாலும் மல்லிகாவும், ஜானகியும் அவள் மனதை மாற்ற ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 20th May 2023

அருண் கார்த்திக்கை சந்திக்க விரும்புவதாக கூறி பொது இடம் ஒன்றுக்கு வரச் சொல்லியிருக்கிறான். காரில் வந்து இறங்கும் கார்த்தி அவன் மீது கோபப்படுகிறான். நீங்க சுந்தரி, கிருஷ்ணா கண்ணுல மாட்டிக்க கூடாதுனுதான் இங்க வராதனு சொன்னேன் என்று கூறினார். அப்போது அருண் கோபப்படுகிறான். நீ வேடிக்கைதான் பாத்துக்கிட்டு இருக்க, சுந்தரி நல்லா சந்தோஷமாதான் இருக்கா என்று கோபப்படும் அருணிடம் கல்யாண மண்டபத்துல என்ன நடக்குதுனு மட்டும் பாரு என்று கூறிவிட்டு செல்கிறான் கார்த்திக்.

மீனா பியூட்டி பார்லருக்கு செல்கிறாள் அங்கு தன் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தன் தோழியிடம் கூறிக் கொண்டிருக்கிறாள். அங்கு பேசியல் முடிந்து மீனா வெளியில் கிளம்பும்போது யாரோ ஒருவர் மேகஸினை மடித்து தன் முகத்தை வெளிப்படுத்திகிறார். அது நம்ம கார்த்திக் தான். அடுத்து கார்த்தி என்ன என்ன ஆட்டம் ஆடப்போறானோ?

சுந்தரிக்கும் சித்துவுக்கும் இடையில் என்ன உறவு என மீனாவின் அப்பா, அம்மாவுக்கு லைட்டாக சந்தேகம் வருகிறது. இதனைக் கேட்கத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடம் கேட்பது எப்படி கேட்பது என தயக்கத்திலேயே இருக்கிறார்கள். கிருஷ்ணாவை அழைத்து தயங்கி தயங்கி கேட்கிறார்கள். சித்துவும் சுந்தரியும் காதலிக்கிறார்களா என்று தயங்கி கேட்டவர்களிடம் முழு கதையையும் சொல்கிறான் கிருஷ்ணா.

சுந்தரி ஐஏஎஸ் படிக்க சென்றது, அங்கே சுந்தரியும் சித்துவும் நண்பர்களானது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தபோது சித்துவுக்கு சுந்தரி மீது இன்டரெஸ்ட் வந்தது. அதை தன் அப்பாவிடம் சொல்ல, அவரோ நேரடியாக சுந்தரியை பொண்ணு கேட்க முருகன் வீட்டுக்கு சென்று அங்கே பிரச்னை ஆனது என தொடர்ந்து கதையைக் கூறினார். போலீஸ் ஸ்டேசனில் இருந்து சண்டைப் போட அங்கேதான் சுந்தரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை அறிந்து கொள்கிறார் சித்துவின் அப்பா. இதனால் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து முருகன் காலில் விழ, இருவரது குடும்பமும் அப்போதிருந்து நட்பு பாராட்டத் தொடங்கிவிட்டது.

சித்துவிடம் சுந்தரி சண்டை போட்டது இனிமேல் தன்னிடம் பேசக்கூடாது என்று சொன்னது, பின் சித்துவின் உண்மையான குணத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தது என அனைத்தையும் சொல்கிறான் சித்து. இதிலிருந்து மீனாவின் அம்மா, அப்பா இருவரும் உண்மையைப் புரிந்து கொள்கின்றனர். புரிந்துகொண்டதை அடுத்து தங்களுக்கு இப்போது சந்தேகம் விளங்கிவிட்டது. சித்துவுக்கு ஒருவேளை சுந்தரியை பிடித்து நாங்கள் குறுக்கே வந்துவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது. அதற்காகத்தான் கேட்டோம் என்று கூற, நீங்களே சொல்லுங்க அப்படி ஒன்னு சித்து மனசுல இருந்தா, சித்துவ கேக்காம அவரு அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவாரா அத சுந்தரியே நடத்தி வைப்பாளா. என் தங்கச்சி அப்படிபட்டவ இல்ல என்று கூறுகிறார்.

இரவு வேளையில் மீனா தன் அறையின் கதவைத் திறந்து பார்க்கிறாள். அங்கே அப்போதுதான் சித்துவுடன் சுந்தரி நின்று பேசிக்கொண்டிருக்கிறாள். இரவு இத்தனை மணி ஆகியும் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று மீனா கடுப்பாகி நிற்கிறாள். இதனால் சுந்தரி மீது மீனாவுக்கு கோபம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் ஏன் இவர்கள் பேச வேண்டும் என தனது மனதில் சந்தேகப் பேய்க்கு இடம் கொடுக்கிறாள் மீனா. இது கல்யாண மண்டபம் வரை எதிரொளிக்கிறது.

சித்துவின் திருமணம் நடக்குமா அல்லது பிரச்னையில் முடியுமா என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அருணுடன் சேர்ந்து கார்த்திக் செய்யும் செயல்களால் சுந்தரிக்கு மேலும் மேலும் சிக்கல் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாளைய எபிசோடில் பெரிய டிவிஸ்ட் காத்திருக்கிறது.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 23rd May 2023

சித்து, மீனா திருமணத்தை நிறுத்தி சுந்தரியை அவமானப்படுத்த நினைக்கிறான் கார்த்தி. அவன் திட்டப்படி சுந்தரி, சித்து இடையே தவறான உறவு இருப்பதாக மீனாவின் மனதில் வன்மத்தை இறக்கிவிட்டிருக்கிறான். இதனை சமாளித்து சித்து, மீனா திருமணத்தை நடத்தி வைப்பாரா சுந்தரி.

Updated On: 22 May 2023 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது