/* */

இயக்குனர் ஷங்கருக்கு சம்மன்: 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் அமலாக்கத்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

இயக்குனர் ஷங்கருக்கு சம்மன்: 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை
X

இயக்குனர் ஷங்கர் 

தமிழ் திரையுலகில் பல்வேறு பிரம்மாண்ட படங்களை தந்தவர், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர். சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, புகார் எழுந்தது.

இதனிடையே, சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள், இயக்குனர் ஷங்கருக்கு 'சம்மன்' அனுப்பி இருந்தனர். இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஷங்கர் நேற்றிரவு ஆஜரானார்.

அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனா, சுமார் 3 மணி நேரம் ஷங்கரை விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு இயக்குனர் சங்கர் ஆஜரான தகவல் அறிந்த நிருபர்கள் அங்கு குழுமினர். இதையடுத்து, நிருபர்கள் சந்திப்பை தவிர்க்கும் பொருட்டு, வேறு வழியாக வாடகைக்காரில் இயக்குனர் ஷங்கர் புறப்பட்டு சென்றார்.

மீண்டும் இயக்குனர் ஷங்கரிடம் விசாரணை மேற்கொள்ள, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 19 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!