/* */

பழநி சென்ற ராகவா லாரன்ஸ்! சந்திரமுகிக்காக சாமி தரிசனம்!

சந்திரமுகி படத்தின் வெற்றிக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் பழநி கோவிலுக்கு சென்றுள்ளார்.

HIGHLIGHTS

பழநி சென்ற ராகவா லாரன்ஸ்! சந்திரமுகிக்காக சாமி தரிசனம்!
X

பழநி மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். தான் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் வெற்றிக்காக சென்றிருப்பதாக தகவல்.

2005 இல் வெளியான பி.வாசுவின் சின்னத்திரை திகில் படமான சந்திரமுகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த், ஜோதிகா நடித்த இப்படம் மலையாளத்தில் வெளியான மணிசித்ரதாழு படத்தின் ரீமேக் ஆகும்.

2012 செப்டம்பரில், சந்திரமுகியின் தொடர்ச்சிக்கான திட்டம் இருப்பதாக வாசு அறிவித்தார். இருப்பினும், திட்டம் நிறைவேற பல ஆண்டுகள் ஆனது. ஜனவரி 2020 இல், வாசு அதன் தொடர்ச்சிக்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டதாகவும், ஒரு தயாரிப்பாளர் படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் படத்தின் கதை தயாராகி படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து இன்று ஒருவழியாக ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பழநி கோவிலுக்கு சென்றுள்ளார்.


ரஜினியும் வடிவேலுவும் இணைந்து டெம்ப்ளேட் காமெடி டிராக்காக சில காட்சிகளை பி வாசு சந்திரமுகி படத்தில் வைத்திருப்பார். அந்த படத்தின் வெற்றிக்கு இந்த காட்சிகள்தான் மிகப் பெரிய அளவில் காரணமாக அமைந்தது. ஆனால் அதையே மீண்டும் முயற்சித்து வடிவேலு - ராகவா லாரன்ஸ் இணையை நடிக்க வைத்த பி வாசு இம்முறை தோற்றுவிட்டார். இதற்கு ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்களின் காமெடி காட்சிகளே தேவையில்லை என்பது போல ஆகிவிட்டது.

ஒவ்வொரு காட்சிக்கும் வடிவேலு காமெடியை நினைத்து சிரிப்பதற்கு பதிலாக எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆகிட்டாரே என நினைத்து அழுகைதான் வருகிறது. பயமுறுத்தும் காட்சிகளுக்கு பெரிதாக மெனக்கெடாமல், இசையமைப்பாளரை பெரிதாக தொந்தரவு செய்யாமல் பேய் படம் எடுத்தால் அது இப்படித்தான் வந்து நிற்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) குடும்பத்தில் அடுத்தடுத்து அசம்பாவித சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பயத்தில் இருக்கும் அவர் தனது குடும்பம் மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு தங்களுடைய குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிடுகிறார்.

வேட்டைய புரம் அரண்மனைக்கு வரும் ரங்கநாயகியின் பெரிய குடும்பத்தினர் சந்திரமுகி பங்களாவில் தங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்கின்றனர். அங்கு ஏற்கனவே வந்து டரியலான கதாபாத்திரம் முருகேஷனும் இந்த குடும்பத்துடன் இணைகிறார்.

வழக்கம் போல அந்த சந்திரமுகி அறைக்கு யாரும் போகக் கூடாது என்று சொல்ல, அந்த பங்களா குறித்த அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, இந்த முறை உண்மையான சந்திரமுகியே இறங்கி வந்து ஆடுகிறது. அந்த பேய் யாருக்கும் பயப்படாமல் இருக்க, அப்ப இவர்தான் சரியான ஆள் என வேட்டையனை வரவழைக்கிறார்கள்.

Updated On: 28 Sep 2023 1:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  5. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?