ஆஹா... 'புஷ்பா 3' வருது - அல்லு அர்ஜுன் அதிரடி அறிவிப்பு!

ஆஹா... புஷ்பா 3 வருது - அல்லு அர்ஜுன் அதிரடி அறிவிப்பு!
ஆஹா... 'புஷ்பா 3' வருது - அல்லு அர்ஜுன் அதிரடி அறிவிப்பு!

இந்திய சினிமாவையே தன்பக்கம் திருப்பி வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய 'புஷ்பா' படத்தின் ஹீரோ, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை பெர்லின் திரைப்பட விழாவில் அதிரடியாக வெளியிட்டிருக்கிறார். ஆம், 'புஷ்பா 3' உறுதியாகிறது!

" 'புஷ்பா 3' படத்தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்த சீரிஸை ஒரு பிரம்மாண்ட ஃப்ரான்சைஸாக உருவாக்க விரும்புகிறோம். அதற்கான உற்சாகமான யோசனைகள் எங்களிடம் உள்ளன" என்று அதகளம் செய்துள்ளார் அல்லு அர்ஜுன்.

மிரட்டும் 'புஷ்பா ராஜ்'

கடத்தல் உலகத்தின் அடித்தட்டில் உழலும் கூலியாட்கையாக ஆரம்பித்து, மெல்ல மெல்ல தன் புத்திசாலித்தனத்தால் சிண்டிகேட்டையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் புஷ்பா ராஜ் கதாபாத்திரம் பட்டித்தொட்டியெங்கும் வைரலானது. 'புஷ்பா: தி ரைஸ்' முதல் பாகத்திலேயே ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் அவ்வளவு ஸ்டைலாகப் பிரதிபலித்திருந்தார் அல்லு அர்ஜுன். சரி, இனி இரண்டாம் பாகமான 'புஷ்பா: தி ரூல்'-ல என்னத்தான் இருக்குங்கிற ஆர்வம் சும்மா அனல் பறக்குது!

இதைப்பற்றியும் பெர்லினில் வைத்து பேசியுள்ளார் அல்லு. "'புஷ்பா: தி ரைஸ்'யை விட 'புஷ்பா: தி ரூல்' படத்தில் புஷ்பா ராஜ் வேற லெவலில் இருப்பார். கேரக்டரை ரொம்பவே மாத்தி யோசித்திருக்கிறோம். பிரச்சனைகளின் அளவு, காட்சிகளின் பிரம்மாண்டம் என அனைத்தையும் முதல் பாகத்தை விடவும் மிகப் பெரிய அளவில் கட்டமைத்திருக்கிறோம்," என்று 'புஷ்பா' ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை பல மடங்கு ஏற்றியிருக்கிறார் அல்லு.

ஃபகத் பாசிலின் வில்லத்தனம் பன்மடங்கு பெருகும்!

முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பன்வார் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் ஃபகத் பாசிலின் திமிரான நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது. புஷ்பா ராஜுக்கும், பன்வார் சிங்குக்கும் இடையே நடந்த காட்டுத்தனமான மோதல்தான் முதல் பாகத்தின் உச்சகட்ட சண்டைக்காட்சி. அந்த ஆக்‌ஷன் சீக்வன்ஸ் எல்லாம் அமர்க்களப்படுத்திய 'புஷ்பா 2'வில் புஷ்பா - பன்வார் சிங் மோதல் இன்னும் பல படிகள் எகிறப் போகிறதாம். ரத்தம் தெறிக்கும்னு எதிர்பார்க்கலாமா?

"முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்'-ல் ரீஜனல் அளவில் சிண்டிகேட்டை கிட்டத்தட்ட தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த புஷ்பா ராஜ், இரண்டாம் பாகத்தில் தேசிய, சர்வதேச அளவில் தன் தொழிலை விரிவுபடுத்தப்போகிறார். அவரை வீழ்த்த ஃபகத் பாசில் உருவில் அந்த போலீஸ் அதிகாரி இன்னும் பெரிய வில்லனாக உருவெடுக்கப் போகிறார்", என்று தன் பேட்டியில் அல்லு சொன்னது எதிர்பார்ப்புகளை எகிறச் செய்திருக்கிறது.

ஏகப்பட்ட பிரம்மாண்டப் ப்ராஜெக்ட்கள் லைன்அப்

ஆக, ரத்தமும் சதையுமாக விஸ்வரூபம் எடுக்கப் போகும் 'புஷ்பா: தி ரூல்', ஒரு அதிரடி கலவர மசாலாவாக உருவாகுவது தெரிகிறது. 'புஷ்பா' பிரம்மாண்டத்துக்குப் பத்துப்பாங்குக்கு ஒரு கவசம் வேண்டுமெனில் என்ன பண்ணவேண்டும் என்பதை சுகுமார் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் என்பது புரிகிறது. தற்போது முழு கவனமும் 'புஷ்பா 2' மீதே இருப்பதாகச் சொல்லும் அல்லு அர்ஜுன் , அதன் பின்னர் வரிசையாக 'எபிக்' அளவில் வேறு சில கதைகளையும் கமிட் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதெல்லாம் எப்படி சாத்தியமாகும், புஷ்பா ரேஞ்சைக் குறைக்க மாட்டேன்டா என்கிற ரீதியில் பேசியிருப்பது கலக்கல்!

Tags

Next Story