/* */

பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று

பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று
X

பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் 

சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினைத் தனது 10 ஆவது வயதில் பெற்றபாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் பிறந்த நாள்

உத்ரா உன்னிகிருஷ்ணன் ( Uthara Unnikrishnan ) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2015 ஆண்டு, சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவர் இவ்விருது 2014 ஆம் ஆண்டில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது இப்பாடலை இவர் பாடிப் பதிவு செய்யப்பட்டபோது இவரது வயது எட்டாகும் . சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினைத் தனது 10 ஆவது வயதில் பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன், இவ்விருதினைப் பெற்ற இளம்பாடகர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.

உத்ரா உன்னிக்கிருஷ்ணனின் பெற்றோர் கர்நாடக இசைப் பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பரத நாட்டியக் கலைஞர் பிரியா உன்னிகிருஷ்ணன் ஆவர். இவரது தந்தை உன்னிக்கிருஷ்ணன் பலமுறை சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவராவார். முதன்முதலாக 1995 இல் அவரது அறிமுகத் திரைப்பாடல்களான "என்னவளே அடி என்னவளே", "உயிரும் நீயே" ஆகியவற்றுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றார்.. தனது ஆறாவது வயதில் சுதா ராஜா என்ற ஆசிரியரிடம் கர்நாடக இசைப்பயிற்சியைத் தொடங்கிய உத்ரா உன்னிக்கிருஷ்ணன், தமிழிசை மட்டுமல்லாது மேல்நாட்டு இசை பயில்வதிலும் ஆர்வம் கொண்டவர்.

Updated On: 11 Jun 2021 3:55 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!