ஜெயிலருக்கு பிறகு நெல்சனின் திட்டம் இதுவா? வேற லெவல்!

ஜெயிலருக்கு பிறகு நெல்சனின் திட்டம் இதுவா?  வேற லெவல்!
X
ஜெயிலர் திரைப்படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அடுத்து என்ன படத்தை இயக்கவுள்ளார் என்பது குறித்த பேச்சு எழுந்துள்ளது.

ஜெயிலர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் அடுத்து யாரை இயக்க இருக்கிறார் என்னென்ன திட்டமிடுகிறார் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவரின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

கோலிவுட்டின் இளம் இயக்குநர் நெல்சன், டோலிவுட்டின் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனுடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து பான் இந்தியா படமாக இது உருவாவதால் இந்த படத்திலும் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நடிகர்களும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமான நெல்சன் அந்த படத்தில் நல்ல பெயரைப் பெற்றார். ஏற்கனவே சிம்புவுடன் இணைந்து வேட்டை மன்னன் படத்தை ரிலீஸ் செய்திருக்க வேண்டியது ஆனால் ரிலீசாகாமல் போய்விட்டது. பின் நீண்ட முயற்சிகளுக்கு பிறகு வெளியான கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பை பெற்றது.



இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனை முற்றிலும் மாறுபட்ட வகையில் காட்டியிருந்தார். அந்த படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு முதல் 100 கோடி வசூல் படமாக அமைந்தது.

இதனையடுத்து விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தைத் தந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது என்றாலும் மிகப் பெரிய லாபத்தை விநியோகஸ்தர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கிடைத்ததாக ஜெயிலர் பட விழாவில் ரஜினியே தெரிவித்திருந்தார்.


கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என மூன்று படங்களை இயக்கிய பிறகு, ரஜினியுடன் ஜெயிலர் பட வாய்ப்பு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி மிகப் பெரிய வசூலை அள்ளியது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நெல்சனுக்கு பல முன்னணி ஹீரோக்களிடம் இருந்து ஆஃபர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், டோலிவுட்டின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனும் நெல்சனிடம் கதை கேட்டுள்ளார். நெல்சன் சொன்ன கதைக்கு அல்லு அர்ஜுனும் ஓகே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், விரைவில் நெல்சன் - அல்லு அர்ஜுன் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என 3 மொழிகளுக்கும் ஏற்றவாறு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதும் கிட்டத்தட்ட இறுதி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணி பற்றியும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு தமிழ் இயக்குநர்களோடு கூட்டணி சேர இருக்கிறாராம் அல்லு அர்ஜூன்.


நெல்சனின் திரைப்படங்கள்

கோலமாவு கோகிலா (2018)

டாக்டர் (2020)

பீஸ்ட் (2022)

ஜெயிலர் (2022)

அல்லு அர்ஜுனின் திரைப்படங்கள்

ஆர்யா 2004

ஆர்யா 2 (2009)

வேதம் 2010

இதரம்மாயில்லதோ 2013

எவடு 2014

ரேஸ் குர்ரம் 2014

சன் ஆஃப் சத்யமூர்த்தி 2015

சரைநோடு 2016

அலா வைகுந்தபுரம்லோ 2020

புஷ்பா 2021

புஷ்பா 2 (2024)

நெல்சன் - அல்லு அர்ஜுன் கூட்டணியின் படம் எப்படி இருக்கும்?

நெல்சன், தனது படங்களில் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து தயாரிப்பதில் வல்லவர். அல்லு அர்ஜுன், டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடித்த படங்கள் எல்லாம் வசூல் சாதனை படைத்தவை.

இந்த கூட்டணி உருவானால், அது ஒரு பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் தனது திறமையால், அல்லு அர்ஜுனின் நடிப்பு திறமையை மேலும் வெளிக்கொணர்வார் என்று நம்பப்படுகிறது.

இந்த படத்தை தயாரிக்க வம்சி கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ai and business intelligence