/* */

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் 'கே.ஜி.எஃப்.' ஹீரோ..?!

பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் 'கே.ஜி.எஃப்' பட ஹீரோ யஷ் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் பரபரவென பற்றிப்படர்கிறது.

HIGHLIGHTS

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் கே.ஜி.எஃப். ஹீரோ..?!
X

நடிகர் யஷ் 

தமிழ்த் திரையுலகில் பிரமாண்ட இயக்குநர் என்றாலே, இயக்குநர் ஷங்கர்தான் என்பது எல்லோருக்கும் எளிதாகத் தெரிந்த விஷயம்தான். தற்போது, இயக்குநர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரண் நடிக்க 'ஆர்.சி-15' மற்றும் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' என ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் புராஜக்ட் சம்பந்தமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், இதில் அவர் முதலில் 'இந்தியன் - 2' படத்தை முடித்துவிட்டு, ராம் சரணின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் திரைத்தகவல் விவரம் அறிந்தவர்கள்.

இதனிடையே, இயக்குநர் ஷங்கர் 'வேள்பாரி' என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல் ஒன்று இணையத்தில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. மேலும், தற்போது அப்படத்தை தயாரிக்கவுள்ள நிறுவனம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, அப்படத்தை நெட்ஃபிலிக்ஸ் மற்றும் கரண் ஜோகர் இணைந்து தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு, அப்படத்தில் 'கே.ஜி.எஃப்' படப்புகழ் நடிகர் யஷ் நாயகனாக நடிப்பார் என்றும் அவர் அண்மையில், இயக்குநர் ஷங்கரை சந்தித்தாகவும் தகவல் ஒன்று உலா வருகிறது என்கிறார்கள்.

Updated On: 12 Sep 2022 4:13 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!