/* */

Kayal சரிந்து விழுந்த பந்தக்கால்! வண்டியால் மாட்டப்போகும் கடத்தல் காரர்கள்!

மூர்த்தியின் குழந்தையைக் கடத்தி பெரியப்பா தர்மலிங்கம் தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என காட்டுகிறார். இந்த விசயத்தை அறிந்த கயல், எழில் குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

HIGHLIGHTS

Kayal சரிந்து விழுந்த பந்தக்கால்! வண்டியால் மாட்டப்போகும் கடத்தல் காரர்கள்!
X

கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 23rd May 2023

கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 22nd May 2023

இருந்தாலும் டாக்டர் சொல்லியது மனதைப் போட்டு உலுப்பிக் கொண்டிருக்கிறது. தனது நெருங்கிய தோழி ஒருவர் மூலம் கயலிடம் சில கேள்விகள் கேட்டு சோதனை செய்கிறாள். அக்கா கேட்கும் கேள்விகளுக்கு கயல் தெளிவாக பதிலளிக்கவே, அவளுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்து கயல் நல்லவள் என்று பேசுகிறாள் அந்த அக்கா. இதனால் எழிலின் அம்மாவுக்கு மகிழ்ச்சி.

இந்நிலையில் கேட்டரிங் வேலையில் சில சிக்கல்களை உருவாக்கி விடுகிறான் மூர்த்தியின் பெரியப்பா. இதனால் மூர்த்தி சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்கிறது. மூர்த்தி தனது தங்கை கயலும் எழிலும் சேர்வார்கள் என எதிர்பார்த்து அதில் ஏமாற்றமே மிஞ்சியதால் இந்த கேட்டரிங் வேலையை செய்ய யோசனையாக இருக்கிறது என்று கூறுகிறான்.

திருமணத்தை எப்படியாவது நல்லபடியாக நடத்தி முடித்துவிட வேண்டும் என எழிலின் அம்மா துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பக்கம் எழிலின் அப்பா எழிலை பாராட்டிக் கொண்டிருக்கிறார். நீ அப்படியே என்ன மாதிரி அழகா இருக்க. அதோ பாரு உன் ஆளு கயல் அங்க நிக்குறா. டைம் வேஸ்ட் பண்ணாம இம்ப்ரஸ் பண்ணு என்று சொல்கிறார். அப்போது கயலுக்கு ஒரு கால் வருகிறது. அதில் பேசிய கயலின் அண்ணி பாப்பா அனுவைக் காணோம் என்று அதிர்ச்சி குண்டைத் தூக்கி போடுகிறார்.

அனு நம்ம வீட்டு வாசலில்தான் விளையாடிக் கொண்டிருந்தார் எனவும் கொஞ்ச நேரம் கழிச்சி பாத்தா அவள காணோம். எல்லா இடத்துலயும் தேடிட்டோம் எங்க தேடியும் அவள காணோம் என்று அண்ணி கூற, நான் இப்போதே வீட்டுக்கு வரேன். பதற்றப்படாதீங்க என்று கூறுகிறாள். எழிலின் அம்மாவிடம் சென்று தான் வீடு வரைப் போயிட்டு வந்துடுறேன் என்று கூறிவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்புகிறாள். எழில் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்.

அங்கே கயல் பெரியப்பா வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பெரியப்பாவும், பெரியம்மா வடிவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டு அனுவை கடத்தி வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருக்கிறார்கள். மூர்த்திக்கு கால் செய்து என்ன நடக்கிறது என்று கேட்கலாம் என திட்டமிடுகிறார்கள்.

மூர்த்திக்கு கால் செய்து அவனிடம் ஏன் இன்னும் இங்கு வரவில்லை என்று கேட்க அவனோ அழுகிறான். இதனைப் பார்த்து இருவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்கும் போயிருக்கமாட்டா என்று கூறி நடிக்கிறார்கள். பின் வடிவு தனக்கு இந்த வெயிலிலும் குளு குளுவென்று இருப்பதாக கூறுகிறாள். அங்கே வில்லன்களிடம் பெரியப்பா கால் செய்து மகள் கல்யாணம் முடியுற வரைக்கும் குழந்தையைக் கண்ணும் கருத்துமா பாத்துக்கோங்க வேற யார் கண்ணுலயும் மாட்டிறக் கூடாது. குழந்தை உசுரோட இருக்கணும் என்று கூறி போனை வைக்கிறார்.

மண்டபத்திலிருந்து கிளம்பி கயல் வீட்டுக்கு வருகிறாள். மூர்த்தி ஒரு பக்கமும், அவன் தம்பி இன்னொரு பக்கமும் குழந்தையைத் தேடி அலைகிறார்கள். முடிவில் எங்கேயும் தேடி கிடைக்கவில்லை என்பதால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்கிறார்கள். அந்த நேரத்தில் தர்மலிங்கம் வீட்டில் அவர் மகள் கல்யாணத்துக்கு பந்தக் கால் நடும் விழா நடைபெறுகிறது. மகிழ்ச்சியாகத் தொடங்கிய இந்த விழா பந்தக்கால் சரிந்து விழுந்ததால் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.

கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 24th May 2023

மூர்த்தியின் குழந்தையைக் கடத்தி வைத்திருக்கும் அடியாளுக்கு கால் செய்கிறார் பெரியப்பா தர்மலிங்கம். குழந்தையை பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு அந்த அடியாள் அண்ணே அதெல்லாம் நிறைய பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருக்கிறோம் நீங்க கவல படாதீங்க. என்ன ஒன்னு அந்த பாப்பா அழுதுட்டே இருக்கு என்கிறான்.

அதற்கு பெரியப்பா தர்மலிங்கம் கடத்தி வச்சிருந்தா பாப்பா அழாம, டிவிங்கிள் டிவிங்கிள்னு பாட்டா படிச்சிட்டு இருக்கும் என்று கூறுகிறார். பத்திரமாக வைத்துக் கொள், வீட்டு ஆளுங்க போலீஸ் ல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டாங்க என்று கூறுகிறார். பின் அழைப்பைத் துண்டிக்கிறார்.

கயல், எழில், மூர்த்தி மூவரும் ஒரு வீட்டின் முகவரியை தெரிந்துகொண்டு வருகிறார்கள். அந்த வீட்டின் கதவு மூடப்பட்டு கிடக்கிறது. உடனே அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கிருந்த ஒருவரை அடித்து துவைக்கிறார் மூர்த்தி. கயலும், எழிலும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அதைக் கேட்காமல் மூர்த்தி அந்த நபரை அடித்து நொறுக்க, அவர் தவறான நபர் என்பது தெரியவந்ததும் வருத்தத்தில் வெளியே வருகிறான். கயலும், எழிலும் வெளியே வந்து மூர்த்தியை சமாதானம் செய்ய, எழில் ஒரு ஐடியாவை செய்கிறான்.

காவல்துறையில் பணிபுரியும் தன் நண்பரிடம் உதவி கேட்டு சிசிடிவி ஃபுட்டேஜ் அனைத்தையும் செக் செய்ய சொல்கிறான். உடனே அவரும் செய்வதாக ஒப்புக்கொள்கிறார். பின் மூர்த்தி நொந்து அழுகிறான். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என அழுகிறான். பின் எல்லாரும் காரில் கிளம்பி செல்கிறார்கள்.

நாலாபுறமும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அந்த நேரத்தில் காவல்துறை நண்பர் சைதாப்பேட்டையில் கூவம் ஓரம் செல்வதாக கண்டுபிடித்து சொல்கிறார். பின் தான் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாகவும் உடனே தனக்கு சொல்லும்படியும் கூறிவிட்டு போனை வைக்கிறார்.

இந்நிலையில், பெரியப்பா தர்மலிங்கத்துக்கு ஒரு ஃபோன் வருகிறது. எழிலின் அம்மா அவருக்கு அழைத்துள்ளார். அவரிடம் மூர்த்தியின் குழந்தை காணாமல் போயிவிட்டாரா என்று கேட்கிறார். எழிலும் பந்தக்கால் நட்ட உடனே வெளியே போய்விட்டான் என்று கூறுகிறார். குழந்தையை நீங்க தானே கடத்துனீங்க என்று எழிலின் அம்மா கேட்கிறார். இதனால் பதைபதைத்த தர்மலிங்கம் தான் கடத்தவில்லை என்று கூறுகிறான். சத்தியமாக நான் கடத்தவில்லை என்று தெரிவிக்கிறார் தர்மலிங்கம். தப்பா எடுத்துக்காதீங்க என்று எழிலின் அம்மா தர்மலிங்கத்திடம் கூறுகிறார்.

மூர்த்தியின் குழந்தை அனுவை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. காமாட்சி என் காலுல வந்து விழுவா, மூர்த்தி கதறிக்கிட்டு வருவான். நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் அந்த பொண்ண விட்டுருவோம் என்று வடிவிடம் சொல்கிறார் தர்மலிங்கம்.

Updated On: 24 May 2023 2:24 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...