வெளியில் தெரிந்த ஷாலினி, அன்பு காதல்! வெடித்தது பிரளயம்!

வெளியில் தெரிந்த ஷாலினி, அன்பு காதல்! வெடித்தது பிரளயம்!
கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியல் அப்டேட் இன்று | kayal serial today episode

வேதவல்லி தனது மகன் வீட்டுக்கு வருகிறார். அப்போது அவரது மகன் விக்னேஷ் அம்மாவை வெளியே போகச் சொல்கிறான். அவனது மனைவி தேவி எப்படியாவது விக்னேஷிடம் கெஞ்சி அவரை வீட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்.

கொலைகாரியின் பையனாக இருப்பதை விட தாயில்லாமல் பிள்ளையாக இருந்துட்டு போகிறேன் என்று கூறி வேதவல்லியை வெளியே போக சொல்கிறான். பின் சுதாரித்துக்கொண்டு தானும் தன் மனைவி தேவியும் வெளியே செல்ல முடிவு செய்கிறான். இதனால் தேவியை இழுத்துக் கொண்டு வெளியே செல்கிறான்.

விக்னேஷின் தங்கை ஷாலினியும் அவனை எப்படியோ சமாதானம் செய்ய முயற்சிக்கிறாள். ஆனால் எதற்கும் அடங்காதவனாய் அவன் ஆத்திரத்தில் துள்ளுகிறான். அதேநேரம் அவனது தாய், வேதவல்லி மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வந்து தன்மீது ஊற்றிக் கொள்கிறார். இதனால் அனைவரும் பதற்றமடைகின்றனர்.

வேதவல்லியும் விக்னேஷும் மாறி மாறி பேச, அப்போது அவனது அம்மா வேதவல்லி ஷாலினி, அன்பு காதலைப் பற்றி போட்டு உடைக்கிறார். அன்பு - ஷாலினிக்கு இடையில் ஏதோ இருப்பதாக கூறி கூறி அவர்களை நெருங்கச் செய்ததே நீங்கள்தானே என அம்மாவிடம் கூறுகிறார். ஆனால் அம்மா வேதவல்லி இதனைக் குறித்து இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறேன் என பல விசயங்களை எடுத்துக் காட்டுகிறார்.

நேராக ஷாலினி ரூமுக்கு சென்று அவர்கள் பரிமாறிக்கொண்ட லெட்டர்கள், பரிசுப் பொருட்கள் அனைத்தையும் விக்னேஷிடம் காட்டுகிறார். அதனை அதிர்ச்சியில் எடுத்து ஒவ்வொன்றாக பார்க்கிறான் விக்னேஷ். ஷாலினியிடம் நீ அன்புவைக் காதலிக்கிறாயா என்று கேட்கிறான். அதற்கு அவள் ஆமா என்று சொல்கிறாள். அடுத்த நொடியே ஷாலினியை ஒரு அறை விடுகிறான் விக்னேஷ்.

இரண்டு பேரும் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. நம்ம சொந்தக்காரங்க என் மூஞ்சுல காரித் துப்பமாட்டாங்களா என அழுகிறாள். நமக்கு சமமான ஒரு பெரிய இடத்தில் வரனை பார்த்து சொந்தக்காரங்க மூக்கு வியர்க்க அனைவரும் வாயைப் பிளக்குமாறு நான் திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். அது தப்பா என நியாயம் பேசுகிறாள் வேதவல்லி.

ஆனால் விக்னேஷ் அன்புவையும் ஷாலினியையும் சேர்த்து வைத்துவிடலாம் என்று கேட்கிறான். அதற்கு அவனது அம்மா வேதவல்லி ஏதேதோ சொல்லி விக்னேஷை திருப்பி விடுகிறாள். இதன்பின் விக்னேஷ் அன்பு மீது கோபத்துடன் ஷாலினியை அன்புவுடன் பழகக் கூடாது என்று சொல்லி கண்டிப்பாக சொல்லிவிடுகிறான்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

கயலைத் தேடி எழில் காரில் வந்து இறங்குகிறான். வீட்டில் கயலின் தம்பி அன்பு, அண்ணன் , தங்கை, அம்மா அனைவரும் இருக்கிறார்கள். கயலைத் தேடி அவள் ரூமுக்கே செல்கிறான் எழில். அதற்குள் கயல் முன் வீட்டுக்கு வருகிறாள். கயலின் தங்கை ஆனந்தி கயலை கிண்டல் செய்துகொண்டே உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் மாம்ஸ். போங்க போங்க என்று கூறுகிறாள். ஆனால் பிரம்மை பிடித்தவள் போல இருக்கும் கயல், எதிலும் ஆர்வம் காட்டாதவாறு இருக்கிறார். கண்கள் கலங்கி நிற்கும் அவள் மேடைக்காக சிரிப்பது போல நடிக்கிறாள்.

கயலுக்கு இந்த கல்யாணம் நடக்காது என்பதை மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கிறாள். எழிலை ஏமாற்றுவதாக நினைத்து வருந்துகிறாள். அப்போது ஆனந்தி ஒரு மண்டபத்தை ஃபிக்ஸ் பண்ண சொல்கிறாள். வரவேற்பு கல்யாணத்துக்கு முன்பா, பின்பா, உனக்கு என்ன பிடிச்சிருக்கு என எழில் துருவி துருவி கேட்க, கயல் எழிலைப் பார்த்து நீயே எல்லாவற்றையும் முடிவு செய்து கொள் என்று கூறுகிறாள். உனக்கு எந்த மண்டபம் பிடிச்சிருக்கோ அந்த மண்டபத்தையே ஃபிக்ஸ் பண்ணிடு என்கிறாள் கயல்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட் | Kayal Serial Episode Today

கயல் ஏன் டல்லுனு இருக்க என்று கேட்கிறான் எழில். அதற்கு தலைவலிக்குது என கயல் கூறுகிறாள். இதனையடுத்து எழில் அவனே டீ போட்டு எடுத்துக் கொண்டு வருவதாக கூறிவிட்டு சொல்கிறான். ஆனால் அதையெல்லாம் கேட்காமல், எழில் சமையல் அறைக்குள் நுழைகிறான். அதை மொத்த குடும்பமே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது. ஆனந்தி தனக்கும் ஒரு காஃபி என்று கூற, அவளுக்கும் சேர்த்து போடுகிறான் எழில்.

அப்போது மூர்த்தி இந்த மாதிரி குடும்பத்தையும் கயலையும் பார்த்துக் கொள்ளும் மாப்பிள்ளைக்காக நான் இன்னும் எத்தனை இழப்பையும் சமாளித்துக்கொள்வேன் என மனதில் யோசிக்கிறான். மாமியாருக்கும் காஃபி கொடுக்கிறான் எழில். குடிச்சு பாத்துட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்கிறான். மூர்த்தியின் நண்பர் ஆறுமுகம் உட்பட அனைவருக்கும் காஃபி கொடுக்கிறான். கயல் தன் திருமணம் நடக்காது என்பதை நினைத்து சோகத்தில் மூழ்குகிறாள்.

Tags

Next Story