கௌதமை அறைந்த கயல்.. வெறி கொண்டு பேசிய வசனம்..! சூடு பறக்குது..!

கௌதமை அறைந்த கயல்.. வெறி கொண்டு பேசிய வசனம்..! சூடு பறக்குது..!
கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள். https://t.me/suntvserialwrittenupdate வாட்ஸ்அப்பில் இணைய https://chat.whatsapp.com/JqPAFajWE9Q0TVBAQS3ZhF

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update Today

கயலிடம் தான் கொண்டு வந்த காஸ்ட்யூம கொடுத்து, இத போட்டுக்கிட்டா கலக்கலா இருக்கும் என்கிறான் எழில். தீபிகா எழிலுக்கும் அவர கல்யாணம் பண்ணிக்க போறவருக்கும் போட்டோஷூட் என்கிறாள். ஆனா எழில் கயல் பேரைச் சொல்லு என்று சொல்கிறான். கயலுக்கும் எழிலுக்கும் கல்யாணம் என்று சொல்ல, கயலின் தோழி கீதா இவரையா மிஸ் பண்ண போற என்று கூறுகிறாள்.

எழில் கயலை நிச்சயமாக ஃபோட்டோஷூட்டுக்கு வர அழைக்கிறான். ஆனால் தீபிகாவோ கயலிடம் மீண்டும் மீண்டும் தான்தான் எழிலின் பொண்டாட்டி என்று அழுத்தமாக சொல்லிவிட்டு செல்கிறாள். கீதாவும் நீதான் பொண்ணு என கயலிடம் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு செல்கிறாள். என்ன செய்வது என்று அறியாமல் அமைதியாக தனது இருக்கைக்கு செல்கிறாள்.

தன் இருக்கையில் அமர்ந்துகொண்டே எழில் தன்னிடம் பேசியதையும், தீபிகா பேசியதையும் நினைத்து க்கொண்டே இருக்கிறாள். அந்த நேரம் கௌதமைத் தேடி ஒரு நர்ஸ் வருகிறாள். அவள் எழிலும் கயலும் சந்தித்துக்கொண்டதைப் பற்றி பேசியதை போட்டு கொடுக்கிறாள். கயல் மீது இருக்கும் பொறாமையை கௌதமிடம் பொங்குகிறாள். இதனால் கௌதம் கயலை எப்படியாவது தடுத்து நிறுத்தலாம் என்று யோசிக்கிறான். விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு நகர்கிறான்.

இங்கே கயல் மனதில் பெரிய அலையோட்டத்தில் செய்வதறியாக திகைத்து நிற்கிறாள். அவளுக்கு மிகப்பெரிய சோகம் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எழிலை பிரியமாட்டேன் என அவனுக்கு செய்து கொடுத்த சத்தியமா, கல்யாணம் செய்தால் எழில் செத்துவிடுவானே என்கிற ஜாதகமா என சிந்தித்துக்கொண்டே அழ ஆரம்பிக்கிறாள். நிச்சயதார்த்த நிகழ்வுகளை மனதில் ஓட்டி பார்க்கிறாள் கயல். மோதிரம் மாற்றியது என அனைத்தும் வந்து போக அந்த நேரத்தில் நந்தி மாதிரி வந்து நிற்கிறான் கௌதம்.

கயல் அழுவதை பார்த்து ரசிக்கிறான் கௌதம். அவள் ஏன் அழுகிறாள் என்று அவளிடமே கேட்க அருகில் செல்கிறான் கௌதம். என்ன கயல் மேடம் அழுதுக்கிட்டு இருக்கியா. கயலா இது என் கண்ணையே நம்ப முடில. என்னாச்சுமா அடுத்தவங்க கண்ணீர தொடைக்குற நீயே இப்பிடி அழலாமா அதுவும் உன் மேல ஆச வச்சிருக்கிற நா இருக்கும்போது.

கயலை வெறுப்பேற்றிக்கொண்டே என்ன ஆச்சு என கேட்க, ஏன் அழுகிறாய் ஏதோ தப்பா இருக்கு என்று சொல்லி கேலி செய்கிறான். இதுதான் தனக்கு கிடைத்த வாய்ப்பு என கயலிடம் போட்டு வாங்குகிறான். கயலுக்கும் எழிலுக்கும் இடையில் ஏதோ பிரச்னை என்ன விசயம் என ஓயாமல் துருத்தி துருத்தி கேட்கிறான். எழில் உன்னை கழட்டி விட பார்க்கிறானா? உனக்கும் பாய் பிரண்டுக்கு உன் தங்கச்சி தேவி மாதிரியே குழந்தை குடுத்துட்டு என சொல்ல ஆரம்பிக்க கயல் கோபப்படுகிறாள்.

என் ஹாஸ்பிடல்ல எனக்கு கீழ வேலை செய்யுற நர்ஸுக்கு என்ன பிரச்னைனு தெரிஞ்சிக்க வேண்டுமே என மீண்டும் ஆரம்பிக்கிறான். குடும்ப கஷ்டமா என மீண்டும் கேட்க, உனக்கும் எழிலுக்கும் பிரச்னையா என சொல்லி, கயலின் கோபத்தை தூண்டுகிறான்.

டூட்டி டைம்ல வேலை செய்யாம அழுதுட்டு இருக்க என்னனு கேட்க எனக்கு உரிமை இருக்கு என்னனு சொல்லு, என்று கேட்கிறான். எழிலுக்கும் உனக்கும் இடையில தீர்க்க முடியாத ஒரு பிரச்னை போயிட்டு இருக்கு. நீயும் எழிலும் வாழ்க்கைல ஒன்னு சேரவே முடியாது அத நினச்சுதான அழுதுட்டு இருக்க. உன் வாழ்க்கையில என்னென்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும். நிச்சயம் வேணா அவனுக்கு உன்கூட நடந்திருக்கலாம். ஆனா கல்யாணம் அவனுக்கு வேற ஒருத்தி கூடதான் நடக்கும் என்கிறான். எழில் உன் கழுத்துல தாலி கட்டமாட்டான். இந்த ஜென்மத்துல உன்ன அவன் கல்யாணம் பண்ணிக்கமாட்டான்.

கயல் மீது அவனுக்கு வன்மம் இருக்கிறது என்பதை சொல்லியே கடுப்பேத்துகிறான். எழிலையும் கயலையும் பெரிதாக தாக்கி பேசுகிறான். இதனால் கயல் ஒரு கட்டத்தில் வெடித்து சிதற ஆரம்பிப்பாள் என்பது தெரிகிறது.

எழிலும் நீயும் ஒன்னா சேர முடியாது என அழுத்தமாக சொல்ல, அதற்கு கயல், அதிரடி சரவெடியாய் எழுகிறாள். கௌதமுக்கு பளார் என்று ஒன்று கன்னத்தில் விழுகிறது.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

பளார் என்று ஒன்று கன்னத்தில் போட்டு வீரவசனம் பேச ஆரம்பிக்கிறாள் கயல். இந்த அடி போதுமா. நீ என்ன கடவுளா நானும் எழிலும் சேரமாட்டேன் சொல்ல நீ யாருடா. உன் அதிகாரம்லாம் ஹாஸ்பிட்டலோட இருக்கட்டும். என்ன நடந்தாலும் நானும் எழிலும் ஒன்னு சேர்றத எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்த ஜென்மத்துல எழில்தான் என்னோட புருசன். ஊரறிய நான்தான் அவன் கைய புடிக்க போறேன். இது கடவுளே முடிவு பண்ணது. நாங்களே பிரியணும்னு நினச்சாலும் அந்த கடவுளே எங்கள சேத்து வைப்பான்.

இதுவே கடைசியாக இருக்கட்டும் இனி உன் லிமிட்ட கிராஸ் பண்ணி என்ன பத்தியோ எழில பத்தியோ பேசுன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அப்போது கீதா உடனே ஓடி வந்து சூப்பர் சூப்பர் சூப்பர் னு சொல்லி பாராட்டுகிறாள். ஜாதகத்த வச்சி நீ எழில பிரிய முடியாது. ஜாதகத்த விட காதல் பெருசு. இந்த ஜென்மத்துல எழில்தான் உன் புருசன். மனச கள்ளாக்கிட்டு என்கிட்ட பொய் சொன்னாலும் உன் மனசால அத பண்ண முடியாது.

உனக்கே தெரியும் என்ன நடந்தாலும் நீயும் எழிலும் பிரிய மாட்டீங்க.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

கயல் இதை நினைத்து பார்க்கிறாள். கீதா மீண்டும் அறிவுரையை ஆரம்பிக்கிறாள். நீயும் எழிலும் சேர்றது நீங்க முடிவு பண்றது இல்ல. அது கடவுள் போட்ட முடிச்சு. எழில் மேல நீ வச்சிருக்க அன்பும் காதலும் தன்னால வெளிய வந்துடும். எழிலும் நீயும் சேரமாட்டீங்கன்னு சொன்னா உனக்கு கோபம் வருது.

தீபிகாவோ பொடலங்காவோ யாரு வந்தாலும் உங்க காதல் அந்த ஜாதகத்த துரத்திட்டு அதுதான் ஜெயிக்கும். உன் மனசுக்குள்ள எழில விட்டுக்குடுக்கக்கூடாதுனு போராடுது. அதனால அது பொத்துக்கிட்டு வெளியே வருது. கல்யாணம் பண்ணா எழிலுக்கு ஏதாவது ஆகிடும்னு மனசு சொல்றத கேட்காத, உன் புத்தி என்ன சொல்லுதோ அத கேளு. எதார்த்தத்த சொல்றேன். எழில் நல்லா இருக்கணும்னு நீ நினச்சா நீ எழில்கூட இருக்கணும். ஜாதகத்த தூக்கி எரிஞ்சிட்டு காதல நம்பு. எழில கல்யாணம் பண்ணலன்னா அவரு எப்படி நிம்மதியா இருப்பாரு. நீ இல்லாம அவரால எப்படி வாழ முடியும்.

ஆனா கயல் இதையெல்லாம் மறுத்துவிட்டு நான் எழிலை பிரிவது உறுதி என்கிறாள்.

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial today update

கயல் மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு காப்பி போட்டு கொடுக்கிறாள் அம்மா. அவர்கள் மனோஜ் குறித்து பேசுகிறார்கள். அவன் செய்த செயலும் கயல் செய்ததையும் கூறி அடுத்து அத்தை என்ன செய்தார் என அடுத்தடுத்து அனைத்தையும் பேசுகிறார் கயல்.

ஆனந்தி, எழில் - கயல் கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார். தன் தோழியிடம் இந்த கல்யாணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குதூகலமாக இருக்கப்போகிறது என்கிறார். எழில் மாமா செலவு பத்தி யோசிக்க வேண்டாம் என சொல்லி, ஆனந்தி மெகந்தி ஆர்ட்டிஸ்ட் குறித்து ஆன்லைனில் தேடி அனைத்தையும் கயலிடம் ஜாலியாக பேச, கயல் கோபப்படுகிறாள்.

ஆனந்தி கல்லூரி செல்லவும், அன்பு டிரெய்னிங் செல்லவும் வேண்டாம் என மூர்த்தி சொன்னதாக சொல்ல, மூர்த்தி மீதே கோபப்படுகிறாள் கயல். இது எல்லாம் அவரின் பெரியப்பா செய்த சதி என்பதை மனதில் நினைக்கிறார் மூர்த்தி. தம்பி தங்கைகளுக்காக பேசுகிறாள் கயல். இப்படி அனைவரும் வாக்குவாதம் செய்கிறார்கள்.

கயலுக்கு கல்யாணம் நடக்கணும்னா ஆனந்தி கல்லூரிக்கும் அன்பு போலீஸ் டிரெய்னிங்குக்கும் போகக் கூடாது என சொல்லி வைத்திருக்கிறார். ஆனால் கயலுக்கு இது தெரியாது. இந்த விசயத்தை அறியாமல் பேசினாலும் கயல் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு ஏழை குடும்பத்துக்கு நிச்சயமாக தேவைப்படும் கருவி. அதுதான் முக்கியம் என்று கூறுகிறாள் கயல்.

அன்பு போலீஸ் ஆகணும் ஆனந்தி மருத்துவம் படிக்கணும் அவள் மருத்துவராக வந்து நிற்கணும். நா அவள வாங்க மேடம்னு விஷ் பண்ணனும் என கயல் சொல்ல, ஆனந்தி நிச்சயமாக நான் பெரிய டாக்டர் ஆகிடுவேன்னு சொல்றா ஆனந்தி சொல்றா. ஆனால் கயல் எரிச்சலடைகிறாள்.

கோபத்தில் இந்த கல்யாணமே நடக்கலன்னா என்ன பண்ணுவீங்க என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சியடைந்து கோபப்படுகிறார்கள். கயலை வேலைக்கு போகக்கூடாது என்று கூறுகிறான் மூர்த்தி. கல்யாணம் ஆகப் போகுது நீ ஏன் வேலைக்கு போற என்று மூர்த்தி வற்புறுத்த, கயலோ மனதில் எழிலை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று எப்படி சொல்ல என்று மனதில் யோசிக்கிறாள் கயல்.

எழில் வீடு

எழில் வீட்டுக்கு தீபிகா வருகை தருகிறாள். அவளைப் பார்த்ததும் ஆனந்தமடைந்து எழிலின் அம்மா உள்ளே அழைக்கிறாள். அவளின் அழகை வர்ணிக்க இவள் அத்தையை புகழ என ஆரம்பிக்கிறது. நம்ம பிளான் படி எல்லாம் நல்லா போயிட்டு இருக்கா என சிவசங்கரி சொல்ல, அதற்கு தீபிகா சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்கிறாள் தீபிகா. இருவரும் எழில் குறித்தும் கல்யாண ஏற்பாடுகள் குறித்தும் பேசுகிறார்கள்.

எழிலிடம் ப்ரீ வெட்டிங் சூட் பத்தி சொல்ல தீபிகா வருகிறாள். எழிலுடன் கூடவே இருந்து காரியம் சாதிக்க நினைக்கிறாள் தீபிகா. நீ யாரு உன் பேக்ரவுண்ட் என்ன என்று எழிலுக்கு தெரியவே கூடாது எனவும், எழிலை கயலிடமிருந்து பிரித்து, அவனை நீ அடைய வேண்டும் என்று சொல்கிறாள். அந்த நேரத்தில் சிவசங்கரியின் கணவன் வர, சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறான்.

சிவசங்கரியும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள். ஆனால் அவருக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது அதீத சந்தேகமும் எழுகிறது. தீபிகா எழிலை சந்திக்க மேலே அவன் ரூமுக்கு செல்கிறாள். அந்த நேரத்தில் எழில் அங்கே அலமாரியில் ஏதோ செய்துகொண்டிருக்க, சர்ப்ரைஸ் கொடுக்க வந்து நிற்கிறேன் என்று சொல்கிறாள்.

ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் செய்ய நான் காஸ்ட்யூம் கொண்டு வந்திருக்கிறேன் என சொல்லி, உங்களுக்கு ப்ளூ கலர் தான பிடிக்கும் கயல் சொல்லியிருப்பதாகவும், அவர்தான் இந்த வீட்டு அட்ரஸையும் கொடுத்தார் எனவும் கூறுகிறாள் தீபிகா.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

சிம்ப்ளா இருந்தாலும் நல்லா இருக்கு. எனக்கு ப்ளூ பிடிக்கும் ஓகே ஆனா கயலுக்கு என்ன ஐடியா இருக்குன்னு தெரியலையே என கயலுக்கு கால் செய்கிறான் எழில். கயல் ஃபோன் ரிங் ஆனாலும் அதை அவள் எடுக்கவில்லை. அவள் பிஸியாக இருப்பதாக கூறுகிறான் எழில். கயலுக்கான டிரெஸ் எங்கே என்று கேட்க, அது ஆஃபீஸ்ல இருந்து பிக்கப் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் மாடியிலிருந்து இறங்கி வருகிறார்கள்

இந்த ஜோடி பொருத்தத்த பாக்கும் போது நம்ம கண்ணே பட்டுடும் போல என சிவசங்கிரி மெச்சுகிறார். எழில் தன் அப்பாவையும் கூப்பிட அவர் வரவில்லை என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் அவருக்கு ஏதோ சந்தேகம் இருப்பது தெரிகிறது.

ஆஸ்பத்திரியில் கயல், ஏதோ நினைவில் தன் இருக்கைக்கு வந்து அமர்கிறாள். அவளது தோழி கீதா, எழிலிடம் பேசுனியா எழிலதான கட்டிக்கபோற, குழப்பத்துல இருக்கியா என மீண்டும் கேட்டு, எழில் கிட்ட பேசு அவருகிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லு அதுக்கப்றம் என்ன பண்ணலாம்னு அவரே சொல்லுவாரு. இது கடவுள் போட்ட முடிச்சி என சொல்கிறாள் கீதா.

ஆனால் மீண்டும் கயல் அந்த ஜாதகத்தை கட்டிக்கொண்டே அழுகிறாள். கீதா எரிச்சலடைந்து திட்டுகிறாள். பின் ஒரு கேம் ஆடலாம் என்று சொல்லி, கண்ணை மூடச் சொல்கிறாள். கண்ணை மூடும்போது எழில் கண் முன்னாடி வந்து நிற்பாரு என்று சொல்கிறாள் கீதா.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

அது எப்படி நடக்கும்னு சொல்றா கயல். ஆனால் கீதா அதனை செய்ய சொல்லி நிர்பந்திக்கிறாள். கயல் கண்ணை மூடிக்கொண்டு அதனை செய்து பார்க்க நினைக்கிறாள். அந்த நேரத்தில் அங்கு வந்து இறங்குகிறான் எழில். உடன் தீபிகாவும் வருகிறாள். மருத்துவமனைக்குள் சென்று நேரடியாக கயலை சென்று பார்க்க லிப்டில் ஏறி செல்கிறான். பின்னாடியே தீபிகாவும் செல்கிறாள்.

சரியாக கயல் கண்ணைத் திறக்கவும், அங்கு எழில் கியூட்டாக வந்து நிற்கிறான். சொல்லி வைத்தார்போல எழில் வந்தது எப்படி என் கீதாவே அதிர்கிறாள். கயல் ஆச்சர்யத்தில் வியந்து நிற்க, கொஞ்ச நேர சந்தோஷத்துக்குள்ளாகவே தீபிகா அங்கு வருகிறாள். எழிலும் தீபிகாவை அங்கு வரச் சொல்கிறான். இன்று மாலை ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்த ஏற்பாடு நடக்கிறது.

தீபிகா பூசி மொழுகி எழிலை கட்டிக்கபோற பொண்ணுக்கும் எழிலுக்கும் ப்ரீ வெட்டிங் சூட் என்று சொல்ல அவள் வியந்து நிற்க, எழில் கயல் என்று சொல்லுங்க என சொல்கிறான்.

Tags

Next Story