முதலாக வந்த தமன்னா! நெல்சனால் தடைபட்ட அனிருத்தின் ஆஸ்திரேலியா கான்செட்!

அனிருத் பல நாடுகளில் தனது கான்செட்டை நடத்தி வந்த நிலையில் அவரின் ஆஸ்திரேலியா கான்செட் தற்போது தடைபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி அனிருத் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இசையமைப்பாளர் அனிருத்தும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். நெல்சனின் அனைத்து படங்களுக்கும் அனிருத்தான் இசையமைப்பாளர். நெல்சன் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் ஆஸ்திரேலியா செல்ல இருந்த அனிருத்தின் பாஸ்போர்ட்டை பிடுங்கிச் சென்றிருக்கிறார் நெல்சன். இதுமட்டுமின்றி பாடலை குறிப்பிட்ட நாளுக்குள் தந்துவிட வேண்டும் என மிரட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் பட அப்டேட் எதுவுமே இல்லை என வருத்ததில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது மிகப்பெரிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. வரும் ஜூலை 6ம் தேதி மாலை 6.30 மணிக்கு பாடல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ ஷூட் செய்யலாம் என கேட்ட அனிருத்துக்கு அதெல்லாம் வேணாம் நேரா பாட்டைக் கொடுங்க என்று கோபமாக பேசிய நெல்சன், வழியில் அனிருத்தின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கிச் சென்றுள்ளார்.
புரோமோ வேண்டாம் என்று சொல்லியே ஒரு புரோமோவை ஷூட் செய்துள்ளனர். இந்த யுக்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளுக்காக அனிருத், நெல்சன் திலீப்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த புரோமோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் தமன்னா ஐட்டம் டான்சராக வருவாரோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu